search icon
என் மலர்tooltip icon

    இத்தாலி

    • உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு சிஸ்டங்களை உடனடியாக வழங்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டால் இந்த போர் ரஷியாவுக்கு சாதமாக சாய்ந்து விடும்.

    உக்ரைன் மீது ரஷியா மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது உக்ரைனில் உள்ள கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைனிடம் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த வாரம் மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிலையம் மீதான தாக்குதலை உக்ரைனால் எதிர்கொள்ள முடியாமல் போனது.

    நேற்று 8 மாடி கட்டடம் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இத்தாலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது உக்ரைன்- ரஷியா போர், இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத வகையில் ஈரான் தாக்குதல் ஆகியவை குறித்து ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை கொள்கை தலைவர் ஜோசப் பொர்ரேல் ஜி7 நாடுகளில் வெறியுறவுத்துறை மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது "உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு சிஸ்டங்களை உடனடியாக வழங்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டால் இந்த போர் ரஷியாவுக்கு சாதமாக சாய்ந்து விடும். ரஷியாவில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை தாக்கி அழிக்க பேட்ரியாட் ஏர் பாதுகாப்பு ஏவுகனை சிஸ்டம்ஸ் இல்லை என்றால், உக்ரைனில் உள்ள மின்சார் சிஸ்டங்கள் அழிக்கப்படும். எந்தவொரு நாடும் வீடுகளில், தொழிற்சாலைகளில், போரின் முன்னணி களத்தில் மின்சாரம் இல்லாமல் சண்டையிட முடியாது" என்றார்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது இத்தாலி வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனியோ டஜானி "உக்ரைன் தோல்வியடைந்தால் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் புதின் அமரமாட்டார்" என்றார். மேலும், ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதார தடைக்கு அழைப்பு விடுத்தார்.

    • இத்தாலியில் பணம் செலுத்தியும் அல்லது இல்லாமலும் வாடகைத்தாய் முறை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • ல் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு தண்டனை விவரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ரோம்:

    இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி, வாடகைத் தாய்மை முறை மனிதாபிமானமற்றது என தெரிவித்துள்ளார். தலைநகர் ரோமில் இளைஞர்களுக்கான மாநாடு நடந்தது.

    இதில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது, "வாடகைத் தாய் ஒரு மனிதாபிமானமற்ற நடைமுறை என நான் நம்புகிறேன். இது சர்வதேச குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை நான் இதற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்" என்றார்.

    ஏற்கனவே இத்தாலியில் பணம் செலுத்தியும் அல்லது இல்லாமலும் வாடகைத்தாய் முறை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு தண்டனை விவரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.8 லட்சத்து 36 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதற்கான புதிய சட்டமசோதா அமலுக்கு வந்துள்ளது.

    • கடவுள் ஆணையும் பெண்ணையும் உயிரியல் ரீதியாக வேறுபட்ட, தனித்தனியான உயிரினங்களாகப் படைத்தார்.
    • அதை மாற்ற முயற்சிக்கக் கூடாது அல்லது தன்னைக் கடவுளாக்க முயற்சிக்கக்கூடாது.

    பாலின மாற்று அறுவை சிகிச்சை மற்றும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளுதல், பாலின கொள்கை மனித கண்ணியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என வாடிகன் தெரிவித்துள்ளது.

    மேலும், கருக்கலைப்பு மற்றும் கருணைக்கொலை ஆகியவை என அனைத்தும் மனித வாழ்க்கைகான கடவுளின் கொள்கையை மீறுவதாகும்.

    கடந்த ஐந்து மாதங்களாக பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு, போப் பிரான்சிஸ் ஒப்புதலுடன் கண்ணியம் தொடர்பாக 20 பக்கம் கொண்ட கண்ணியம் தொடர்பான அறிவிப்பை வாடிகனின் கோட்டுபாடு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

    பாலின கோட்பாடு அல்லது ஒரு பாலினத்தை சேர்ந்தவர் இன்னொரு பாலினத்தை சேர்ந்தவராக மாற முடியும் என்பதை தொடர்ந்து கடுமையாக நிராகரித்து வருகிறது. கடவுள் ஆணையும் பெண்ணையும் உயிரியல் ரீதியாக வேறுபட்ட, தனித்தனியான உயிரினங்களாகப் படைத்தார். அதை மாற்ற முயற்சிக்கக் கூடாது அல்லது தன்னைக் கடவுளாக்க முயற்சிக்கக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எந்தவொரு பாலின மாற்ற தலையீடு, விதிப்படி கருத்தரித்த தருணத்திலிருந்து நபர் பெற்ற தனித்துவமான கண்ணியத்தை அச்சுறுத்துகிறது.

    • கடந்த 2022-ல் குழந்தை பிறப்பு விகிதம் 6.7 ஆக இருந்தது. ஆனால் 2023-ல் இது 6.4 சதவீதமாக சரிந்துள்ளது.
    • சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ரோம்:

    ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதுதொடர்பாக அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி கடந்த 2022-ல் அங்கு குழந்தை பிறப்பு விகிதம் 6.7 ஆக இருந்தது. ஆனால் 2023-ல் இது 6.4 சதவீதமாக சரிந்துள்ளது. இதன்மூலம் சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    அதேசமயம் வெளிநாடுகளில் இருந்து இத்தாலிக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி அங்கு குடியேறி உள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 53 லட்சமாக உயர்ந்துள்ளது. எனினும் மக்கள்தொகை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த அவர்கள் உதவியாக இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

    • 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார்.
    • முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு திருவிருந்து அளித்து அவர்களது பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில் இந்த சடங்கு நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார். பின்னர் கைதிகளின் பாதங்களுக்கு அவர் முத்தமிட்டார். வழக்கமாக இதற்கு முன்பு போப் பதவி வகித்தவர்கள் வாடிகன் தேவாலயத்தில் தான் இதனை கடைபிடிப்பார்கள்.

    ஆனால் இதனை மாற்றி போப் பிரான்சிஸ் முதன் முறையாக ஜெயிலில் இந்த புனித சடங்கை நடத்தி உள்ளார். இதேபோல முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • "இத்தாலிய என்சைக்ளோபீடியா" 2023 வருடத்திற்கான சொல் என ஃபெமிசைட்-ஐ பட்டியலிட்டது
    • கொலை வழக்குகளில் இத்தாலிய நீதிமன்றங்கள் ஆண்களுக்கு குறைவான தண்டனையையே வழங்குகின்றன

    2023ல் இத்தாலி நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் கணவர், ஆண் நண்பர், அல்லது தங்களை நன்கு அறிந்து பழகி வரும் அல்லது பழகி பிரிந்த ஆண் ஆகியோரால் கொல்லப்பட்டுள்ளனர்.

    இத்தகைய கொலைகளுக்கு "ஃபெமிசைட்" (femicide) என பெயரிடப்பட்டுள்ளது.

    "இத்தாலிய என்சைக்ளோபீடியா" (Italian encyclopedia) 2023 வருடத்திற்கான சொல் என ஃபெமிசைட்-ஐ பட்டியலிட்டது குறிப்பிடத்தக்கது.

    இத்தாலியின் பிரதமர் "ஜியோர்ஜியா மெலனி" (Giorgia Meloni) ஒரு பெண் எனும் நிலையில், ஃபெமிசைட் குற்றங்களை அவர் கண்டும் காணாமல் இருக்கிறாரா என பெண்ணுரிமைவாதிகள் கேள்வி எழுப்புகின்றனர்.


    இத்தகைய பல கொலை வழக்குகளில் இத்தாலிய நீதிமன்றங்களும் ஆண்களுக்கு குறைவான தண்டனையையே வழங்குகிறது.

    பாலின சமத்துவத்தில் ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி மிகவும் பின் தங்கியுள்ளது. குறிப்பாக, ஆணுக்கு சமமான ஊதியம் வழங்கப்படாததால், அந்நாட்டில் பெண்கள் ஆண்களை சார்ந்திருக்கும் நிலையில் உள்ளனர்.

    ஐரோப்பாவில், 70களில் நடைபெற்ற பெண்ணுரிமை இயக்க போராட்டங்களில் முன்னிலை வகித்த நாடு இத்தாலி.

    ஆனால், அதற்கு பிந்தைய தசாப்தங்களில் அங்கு எவ்வாறு பெண்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியது என சமூக அறிவியல் நிபுணர்கள் வியப்புடன் கேள்வி எழுப்புகின்றனர்.

    தற்போதைய பிரதமரான ஜியோர்ஜியா மெலனி பெண்ணுரிமை அமைப்புகளின் சித்தாந்தங்களில் இருந்து விலகி இருப்பதை இதற்கு முக்கிய காரணமாக அவர்கள் கூறுகின்றனர்.

    ரோமானிய நாகரீக காலகட்டத்தில் இருந்தே பல நூற்றாண்டுகளாக பெண்கள் மீது ஆண்கள் தாக்குதல் நடத்துவது இத்தாலி சமூகத்தில் நடைமுறை வாழ்க்கையில் குற்றமாக கருதப்படாத நிலை அங்கு நிலவுவது இதற்கு மற்றொரு காரணம்.

    • பெண் 12 முறை கருச்சிதைவு அடைந்ததாகவும், பிரசவத்தின் மூலம் 5 குழந்தைகள் இருப்பதாகவும் ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • மோசடிக்கு கூட்டாளி ஒருவரும் உதவி செய்துள்ளார்.

    இத்தாலியை சேர்ந்த பார்பரா ஐயோலே என்ற 50 வயதான பெண் ஒருவர் கடந்த 24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்ப நாடகமாடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல், இணையத்தில் பேசு பொருளாகி வருகிறது.

    பார்பரா மாநில அரசு வழங்கிய மகப்பேறு உதவித்தொகைகளை பெறுவதற்காகவும், வேலையில் இருந்து ஓய்வு பெறுவதற்காகவும் இதுபோன்று நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்காக அவர் போலி மருத்துவ ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். அவர் 12 முறை கருச்சிதைவு அடைந்ததாகவும், பிரசவத்தின் மூலம் 5 குழந்தைகள் இருப்பதாகவும் ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது இந்த மோசடிக்கு கூட்டாளி ஒருவரும் உதவி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • விட்டோரியோ இமானுவேல் தெற்கு நகரமான நேபிள்ஸில் பிறந்தார்.
    • விட்டோரியோ இமானுவேல் சுவிட்சர்லாந்தில் இன்று மறைந்தார்.

    இத்தாலியின் கடைசி மன்னரின் மகனும், சவோயின் இளவரசர் விட்டோரியோ இமானுவேல் சுவிட்சர்லாந்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 86.

    இதுதொடர்பாக, சவோய் அரச குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் "இளவரசர் விட்டோரியோ இமானுவேல் தனது குடும்பத்தினரால் சூழப்பட்ட ஜெனீவாவில் காலமானார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    1937ம் ஆண்டு, பிப்ரவரி 12ம் தேதி தெற்கு நகரமான நேபிள்ஸில் பிறந்த விட்டோரியோ இமானுவேல், 1861 முதல் 1945 வரை ஒருங்கிணைந்த இத்தாலியில் ஆட்சி செய்த அரச குடும்பத்தின் தலைவராக ஆனார்.

    அவர் 1946ல் அரியணையை ஆக்கிரமித்த, நாட்டின் கடைசி மன்னரான இரண்டாம் உம்பர்டோவின் மகன் ஆவார்.

    • "தி கேப்சர் ஆஃப் செயின்ட் பீட்டர்", ஓவியர் ருடிலியோ மானெட்டி என்பவரால் வரையப்பட்டது
    • கண்காட்சியில் இருந்த ஓவியத்தில் இடது மேற்புறத்தில் ஒரு மெழுகுவர்த்தி காணப்பட்டது

    ஐரோப்பாவில் உள்ள பண்டைய நாடு, இத்தாலி. ரோமானிய கலாச்சாரத்தை பறைசாற்றும் அந்நாட்டில் பழங்கால ஓவியங்களுக்கும் ஓவியர்களுக்கும் இன்றளவும் ஆர்வலர்கள் அதிகம்.

    அந்நாட்டின் 605 இடங்களை கொண்ட பாராளுமன்ற உறுப்பினரும், கலாச்சார அமைச்சருமான 71 வயதான விட்டோரியொ ஸ்கார்பி (Vittorio Sgarbi) பழமையான கலைப்பொருட்கள் மற்றும் அரிய ஓவியங்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டவர்.

    2013ல், இத்தாலியின் வடக்கு பீட்மான்ட் பகுதியில் உள்ள ஒருவருக்கு சொந்தமான கோட்டையில் பல ஆண்டுகளாக இருந்த 17-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ருடிலியோ மானெட்டி (Rutilio Manetti) எனும் ஓவியர் வரைந்த "தி கேப்ச்சர் ஆஃப் செயின்ட் பீட்டர்" (The Capture of Saint Peter) எனும் ஓவியம் திருடு போனது.

    2021ல் அமைச்சர் ஸ்கார்பி ஏற்பாடு செய்திருந்த ஒரு கண்காட்சியில் இந்த ஓவியம் மீண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    2013ல் காணாமல் போன ஓவியம் போலவே இது இருந்தாலும், இந்த ஓவியத்தின் இடது மேற்புறத்தில் ஒரு மெழுகுவர்த்தி தென்பட்டது.


    சுமார் 20 வருடங்களுக்கு முன் தனது தாயார் வாங்கிய ஒரு பழமையான வில்லாவில் இதை கண்டெடுத்ததாகவும், இதுதான் ருடிலியோ மானெட்டியின் "அசல்" ஓவியம் என்றும் 2013ல் களவு போனது "நகல்" என்றும் ஸ்கார்பி கூறி வந்தார்.

    ஆனால், 2013ல் களவு போன ஓவியத்தில் கைதேர்ந்த ஓவிய நிபுணர்களை கொண்டு ஸ்கார்பி சில மாற்றங்கள் செய்து புதியதாக காட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதையடுத்து காணாமல் போன ஓவியத்தை தேடவும், ஸ்கார்பியின் ஓவியம் உண்மையா அல்லது 2013ல் களவு போன ஓவியமா என கண்டறியவும் விசாரணை முடுக்கி விடப்பட்டது.

    இதை தொடர்ந்து எழுந்த விமர்சனங்களின் விளைவாக அமைச்சர் விட்டோரியோ ஸ்கார்பி, தற்போது தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    "நான் எந்த குற்றமும் செய்யவில்லை. விசாரணைக்கு எனது பதவி இடையூறாக இருக்க கூடும் என்பதால், நான் பதவி விலகுகிறேன். இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலனிக்கு தகவல் தெரிவித்து விட்டேன்" என அமைச்சர் ஸ்கார்பி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேரரசர் கான்ஸ்டன்டைன், கான்ஸ்டான்டினோபில் எனும் புதிய நகரை நிர்மாணித்தார்
    • ரோம் நகரிலிருந்து 160 கி.மீ. தொலைவில் ஸ்பெல்லோ நகரில் இத்தலம் உள்ளது

    280 (கி.பி.) நூற்றாண்டிலிருந்து 337 (கி.பி.) நூற்றாண்டு வரை ரோமானிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்டவர், பேரரசர் கான்ஸ்டன்டைன் (Emperor Constantine).

    கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய முதல் ரோமானிய பேரரசரான இவர், ரோமானிய தலைநகரை கான்ஸ்டான்டினோபில் (Constantinople) எனும் புதிய நகரை நிர்மாணித்து அங்கு மாற்றியமைத்தார்.

    தாங்கள் கடைபிடிக்கும் ஒரு திருவிழாவை வெகு தூரம் சென்று கொண்டாட வேண்டியுள்ளதால், அதனை தாங்கள் வசிக்கும் இடத்திலேயே கொண்டாட அனுமதிக்கும்படி பேரரசர் கான்ஸ்டன்டைனிடம் மக்கள் கடிதம் எழுதி கோரிக்கை வைத்தனர்.

    அதற்கு பதிலளித்த பேரரசர், அவரது மூதாதயரை நினைவு கூரும் விதமாக அவர்களுக்கு ஒரு வழிபாட்டு தலத்தை அமைத்து தரும்படி மக்களை கேட்டுள்ளார்.

    இந்த பதில் கடிதம் "ரீ ஸ்கிரிப்ட்" (rescript) எனும் பெயரில் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.


    அமெரிக்காவின் மிசோரி (Missouri) மாநில செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தை (Saint Louis University) சேர்ந்த வரலாற்று பேராசிரியர் டக்ளஸ் பாய்ன் (Prof. Douglas Boin) தலைமையில் ஒரு குழுவினர் இத்தாலியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டனர்.

    ரீ ஸ்கிரிப்டை தீவிரமாக ஆய்வு செய்த பேரா. பாய்ன், ஒரு நீண்ட ஆராய்ச்சியை முன்னெடுத்தார்.

    அதன் விளைவாக கான்ஸ்டன்டைன் நகர மக்கள், பேரரசரின் மூதாதையருக்கு அமைத்து கொடுத்த வழிபாட்டு தலம், தற்போது, ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


    இத்தாலி தலைநகர் ரோம் நகரிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில், ஒரு சிறு மலையில் உள்ள ஸ்பெல்லோ எனும் நகரில், ஒரு வாகன நிறுத்த இடத்திற்கு கீழே, பேரா. பாய்ன் குழுவினர் நடத்திய ஆராய்ச்சியில் 1600 வருடத்திற்கும் முற்பட்ட இந்த பழமையான வழிபாட்டு தலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

    பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பண்டைய நாகரீகத்தை காட்டும் வகையில் இத்தாலியில் உள்ள பல புராதன சின்னங்களின் வரிசையில் இந்த ஸ்பெல்லோ வழிபாட்டு தலமும் இடம் பெறும் என பேரா. பாய்ன் தெரிவித்தார்.

    தற்போது 3 சுற்றுச்சுவர்களை கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சி குழுவினர், மீண்டும் கோடை கால விடுமுறை முடிந்ததும் முழுவதுமாக ஆராய்ச்சியை தொடர உள்ளனர்.

    • குடும்ப உறவினரை சமன் திருமணம் செய்து கொள்ள மறுத்தார்
    • சமன், தன் ஆண் நண்பரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்

    இத்தாலி (Italy) நாட்டில் பொலோக்னா (Bologna) நகருக்கு அருகே நொவெல்லாரா (Novellara) பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த சமன் அப்பாஸ் (18) தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    2020ல் உறவுக்கார ஆண் ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறு சமனை அவர் குடும்பத்தினர் வற்புறுத்தி வந்துள்ளனர். அதை அவர் மறுத்ததால் ஏற்பட்ட சச்சரவின் விளைவாக அந்நாட்டு அரசிடம் புகலிடம் தேடிய சமன், ஒரு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.

    கடந்த 2021ல், தனது ஆண் நண்பரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த சமன், வீட்டில் இருந்த தனது பாஸ்போர்ட்டை எடுத்து கொள்ள அங்கு சென்றார். அப்போது மீண்டும் திருமண சர்ச்சை ஏற்பட்டது. அவர் பெற்றோர் சமனின் ஆண் நண்பரை மருமகனாக ஏற்க மறுத்தனர்.

    அன்றிலிருந்து சமன் திடீரென மாயமானார். ஆண் நண்பர் இது குறித்து காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் அவர்கள் சமனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த முற்பட்டனர்.

    ஆனால், சமனின் பெற்றோர் தங்கள் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர்.

    அப்பகுதியில் இருந்த வீடியோ காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில் சம்பவத்தன்று கையில் மண்வெட்டி, கடப்பாரை, பக்கெட் உள்ளிட்டவைகளுடன் 5 பேர் அவ்வீட்டை விட்டு வெளியே சென்று சுமார் 3 மணி நேரம் கழித்து திரும்புவது தெரிய வந்தது.

    காவல்துறையினரின் தேடலில் ஒரு வருடம் கழித்து சமனின் உடல் ஒரு பாழடைந்த பண்ணை வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. அவர் உடலில் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டிருந்தது.

    இவ்விவகாரத்தில் கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்த இத்தாலி அரசின் கோரிக்கைக்கு இணங்க பாகிஸ்தானிலிருந்த சமனின் தந்தையும், பிரான்சில் இருந்த சமனின் மாமாவும் இத்தாலிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். தாயார் வேறு எங்கோ தப்பி ஓடி விட்டார்.

    குடும்பத்தினரிடம் காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில், சமனின் பெற்றோர், தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள மறுத்த மகளை கொலை செய்ய திட்டம் தீட்டினர். சமனின் கழுத்தை அவளது மாமா நெரித்து கொலை செய்துள்ளார்.

    இவ்வழக்கில் தந்தைக்கும் தாய்க்கும் ஆயுள் தண்டனையும், கொலை செய்த சமனின் மாமாவிற்கு 14 வருடங்கள் சிறை தண்டனையும் வழங்கியது இத்தாலி நீதிமன்றம். இதனிடையே தாயாரை காவல்துறை தேடி வருகிறது.

    • பிரதர்ஸ் ஆஃப் இத்தாலியின் சந்திப்பில் ரிஷி சுனக், எலான் மஸ்க் ஆகியோரும் பங்கேற்றனர்
    • ஐரோப்பிய கலாச்சாரம் மதிக்கும் கோட்பாடுகளும், அளிக்கும் உரிமைகளும் உயர்வானவை என்றார் மெலோனி

    மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவிற்குள் தஞ்சம் புக அகதிகள் சிறு கப்பல்கள் மூலம் தினசரி வந்து கொண்டே இருக்கிறார்கள். சமீப சில காலங்களாக இவ்வாறு நுழையும் அகதிகளால் உள்நாட்டில் சட்ட சிக்கல்கள் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. பல ஐரோப்பிய நாடுகளின் தேர்தல்களில் வாக்குகளை ஈர்க்க இதை ஒரு விவாத பொருளாக சில தலைவர்கள் முன்னெடுத்தனர்.

    சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளில் நுழைவதை கட்டுப்படுத்த கடுமையான முடிவுகளை எடுக்க அந்நாடுகளின் தலைவர்கள் பல கட்டமாக சந்தித்து வருகின்றனர்.

    அகதிகள் நுழைவதை கட்டுப்படுத்த இத்தாலி தலைநகரான ரோம் நகரில், Giorgio Meloni) தீவிர வலது சாரி அமைப்பான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி (Brothers of Italy) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஜியோர்ஜியோ மெலோனி (உரையாற்றினார். இதில் இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தனது உரையில் மெலோனி தெரிவித்ததாவது:

    நமது கலாச்சாரத்துடன் இஸ்லாமிய கலாச்சாரம் இணைவது கடினம் என நான் நினைக்கிறேன். இத்தாலியில் உள்ள பல இஸ்லாமிய கலாச்சார மையங்கள் சவுதி அரேபியாவின் நிதியுதவியால் நடப்பவை என்பதை நான் கவனிக்காமல் இல்லை. சவுதி அரேபியா நாட்டில் மத கோட்பாடுகளை கை விடுவது, தன்பாலின சேர்க்கை போன்றவைகளுக்கு மரண தண்டனை, கல்லெறி தண்டனை போன்றவற்றை வலியுறுத்தும் ஷரியா (Sharia) சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த கலாச்சாரத்தை ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் புகுத்த நினைக்கிறார்கள். ஆனால், ஐரோப்பிய நாகரிகம் பல தசாப்தங்களாக வளர்த்து வந்த மதிப்புக்குரிய அம்சங்களிலிருந்தும் மக்களுக்கு அளிக்கும் உரிமைகளிலிருந்து இந்த கலாச்சாரம் மாறுபட்டு நிற்கிறது. நான் ஷரியா சட்டத்தை இத்தாலியில் புகுத்த அனுமதிக்க மாட்டேன்.

    இவ்வாறு மெலோனி கூறினார்.

    கடந்த 2022 அக்டோபர் முதல் ஐரோப்பியாவின் முக்கிய நாடான இத்தாலியில், பிரதமராக பதவி வகிக்கும் ஜியோர்ஜியா மெலோனி (46), தீவிர வலதுசாரி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×