search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டெய்னர் பெட்டிகளை உடைத்து ரூ.3 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை-7 பேர் கைது
    X

    கண்டெய்னர் பெட்டிகளை உடைத்து ரூ.3 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை-7 பேர் கைது

    • மர்ம கும்பல், கண்டெய்னர் பெட்டிகளை உடைத்து சுமார் ரூ.3கோடி மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.
    • திருடிய மின்சாதன பொருட்களை மர்ம கும்பல் குறைந்த விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு 3-ம் நிலையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அனல் மின் நிலையத்தின் பாதுகாப்புக்காக சூழலும் கண்காணிப்பு கேமரா, டி.வி., கம்ப்யூட்டர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பெங்களூருவில் இருந்து 2 கண்டெய்னர் பெட்டிகளில் வரவழைக்கப்பட்டு இருந்தன.

    இந்நிலையில் மர்ம கும்பல், கண்டெய்னர் பெட்டிகளை உடைத்து சுமார் ரூ.3கோடி மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இதனால் அனல் மின் நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து காவலாளி பழனி மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உதவி ஆணையர் முருகேசன் ஆலோசனையின்படி இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது எண்ணூர் பகுதியில் டி.வி. உள்ளிட்ட மின்சாதனை பொருட்களை சிலர் குறைந்து விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் வடசென்னை அனல் மின்நிலையத்தில் கண்டெய்னர் பெட்டிகளை உடைத்து திருடிய மின்சாதன பொருட்களை மர்ம கும்பல் குறைந்த விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து வடசென்னை அனல்மின் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட எண்ணூரை சேர்ந்த ஹரிஷ், விக்னேஷ், வாசு, பிரதாப், முத்துப்பாண்டி, அஜித், அருள்பாண்டி ஆகிய 7 பேரை கைது செய்தனர். வீட்டில் பதுக்கி வைத்திருந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இரவு நேரத்தில் அவர்கள் படகில் சென்று திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்த மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×