search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் ரெயில் மறியல்
    X

    டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் ரெயில் மறியல்

    • ரெயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஜோசப், தம்புசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.
    • டெல்டா மாவட்டங்களில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    தஞ்சாவூா்:

    காவிரியில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் விட மறுக்கும் மற்றும் காவிரி ஒழுங்காற்றுகுழு உத்தரவுபடி தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) தஞ்சை, திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 டெல்டா மாவட்டங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இரு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் இணைந்து அறிவித்தன.

    அதன்படி டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரெயில் நிலையத்திற்கு வந்த மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து மறித்தனர். இந்த ரெயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஜோசப், தம்புசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.

    இந்த ரெயில் மறியல் போராட்டத்தில் சி.பி.ஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆர்.வீரமணி, துரை அருள்ராஜன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆர்.சதாசிவம், வி.எம்.கலியபெருமாள், ஏ.ராஜேந்திரன், எம்.ஆர்.முருகேசன், பி.பரந்தாமன் உட்பட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் கர்டாக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கபட்டனர். இதன் பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இதே போல் திருவாரூரில் இருந்து பட்டுகோட்டை நோக்கி சென்ற பயணிகள் ரெயிலை திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் விவசாயிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து தலைமை தாங்கினார். போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுப்பட்ட எம்.எல்.ஏ. மாரிமுத்து உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் பயணிகள் ரெயில் ½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதைப்போல் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருவாரூர் மாவட்டத் துணைச்செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருவாரூர் மாவட்ட பொருளாளர் ராவணன் ஆகியோர் தலைமையில் காரைக்கால் பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், வலங்கைமான் (சிபிஎம்) ஒன்றிய செயலாளர் ராதா மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதைத் தொடர்ந்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதைப்போல் திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம், நாகை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் விவசாய சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் டெல்டா மாவட்டங்களில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    Next Story
    ×