search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கேர்மாளம் மலை கிராமங்களில் 6-வது நாளாக தொடரும் மின்தடை: மக்கள் கடும் அவதி
    X

    கேர்மாளம் மலை கிராமங்களில் 6-வது நாளாக தொடரும் மின்தடை: மக்கள் கடும் அவதி

    • கடந்த 20-ந் தேதி திடீரென மின்சாரம் தடைப்பட்டது.
    • குடிநீர் இல்லாமல் மக்கள் அவதி.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலை கிராமங்களுக்கு சத்தியமங்கலம், ராஜன் நகர் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கபட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த மலை கிராமங்களுக்கு கடந்த 20-ந் தேதி திடீரென மின்சாரம் தடைப்பட்டது. அதனை த்தொடர்ந்து மின்சாரமின்றி இந்த மலை கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இரவு நேரத்தில் இருளில் மூழ்கி கிடக்கின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இன்று 6-வது நாட்களாக அவதி பட்டு வருகின்றனர்.

    மலைகிராமம் கேர்மாளம், ஒசட்டி, காட ட்டி, சுஜில்கரை, திங்களூர், கோட்டமாளம், பூதாளபுரம் என 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது. மின் தடையால் ஊராட்சிக்கு செந்தமான மின் மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் இல்லாமல் அவதி பட்டு வருகின்றனர்.

    மின்தடையால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதாகவும், செல்போன் கூட ஜார்ஜ் செய்ய முடியாமல் அவசர தேவைக்கு உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது.விவசாயிகள் பயிர்களுக்கு நீர்பாச்ச முடியாமலும், பள்ளி மாணவ-மாணவிகள் படிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருவதாக வேதனையாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து 6-வது நாளாக மின்தடை ஏற்பட்டுள்ளதால் பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும், மின்வாரிய ஊழியர்களிடம் தகவல் அளித்து பயணில்லை என மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×