search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுவாஞ்சேரி அருகே கடைகளில் கொள்ளையடித்து தப்பிய 2 வாலிபர்கள் கைது
    X

    கூடுவாஞ்சேரி அருகே கடைகளில் கொள்ளையடித்து தப்பிய 2 வாலிபர்கள் கைது

    • கூடுவாஞ்சேரி ரெயில்வே தண்டவாளம் அருகே தனியாக நடந்து வந்த வாலிபர் ஒருவரை தாக்கி செல்போன், பணத்தை பறித்து சென்று இருப்பது தெரியவந்தது.
    • தப்பி ஓடிய கூட்டாளியான சந்தோஷ்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரி கணபதி நகர் விரிவு 2-வது பகுதியில் மருந்து கடை உள்ளது. நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் மருந்து கடையை உடைத்து கொள்ளை அடித்தனர்.

    மேலும் கொள்ளையர்கள் அருகில் இருந்த மற்றொரு பிளாஸ்டிக் தயாரிக்கும் கடையை உடைத்து லேப்டாப், டி.வி. உள்ளிட்ட பொருட்களை சுருட்டினர்.

    இதைத்தொடர்ந்து வீபாகு நகர் காளியம்மன் கோவில் தெருவில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடினர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை விரட்டினர்.

    அந்த நேரத்தில் அவ்வழியே ரோந்து வந்த போலீசார் 2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவன் தப்பி ஓடி விட்டான்.

    விசாரணையில் அவர்கள் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பாலன் என்கிற சின்ன அட்டி, தினேஷ் என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ஏற்கனவே அவர்கள் கூடுவாஞ்சேரி ரெயில்வே தண்டவாளம் அருகே தனியாக நடந்து வந்த வாலிபர் ஒருவரை தாக்கி செல்போன், பணத்தை பறித்து சென்று இருப்பதும் தெரியவந்தது.

    தப்பி ஓடிய கூட்டாளியான சந்தோஷ்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள். கைதானவர்களிடம் இருந்து டி.வி., லேப்டாப், 3 செல்போன், 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×