search icon
என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • திபாக்கரன், ரிஸ்வந்த், திருமாவளவன் ஆகிய 3 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
    • 7 தமிழர்கள் மீட்கப்படுவதற்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கத்தினர் பக்கபலமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருச்சி:

    பெரம்பலூர், மதுரை, கடலூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த ஆர்.வினேஷ், ஆர்.திபாக்கரன், கே.ரிஸ்வந்த், கே.திருமாவளவன், டி.ச ரவணன், கே.வெங்கடேஷ், அ.அசேன் ஆகிய 7 வாலிபர்கள் தனியார் நிறுவனம் மூலம் குவைத்துக்கு வேலைக்கு சென்றனர்.

    இதற்காக வாணியம்பாடியை சேர்ந்த சபீர்கான் என்ற ஏஜெண்டிடம் ஒவ்வொருவரும் தலா ரூ.1 லட்சம், 2 லட்சம் என கொடுத்து கடந்த ஜூலை மாதம் குவைத்துக்கு சென்ற அவர்களுக்கு டிரைவர் வேலை கொடுப்பதாக கூறப்பட்டிருந்தது. முதலில் 8 மணி நேரம் வேலை என சொல்லியதில் 18 மணி நேரம் வேலை கொடுக்கப்பட்டது

    இதில் திபாக்கரன், ரிஸ்வந்த், திருமாவளவன் ஆகிய வினேஷ், சரவணன், வெங்கடேஷ், அசேன் ஆகிய 4 பேருக்கு மட்டுமே ஒரு மாத ஊதியம் வழங்கப்பட்டது. திபாக்கரன், ரிஸ்வந்த், திருமாவளவன் ஆகிய 3 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

    இதனால் சரியான தூக்கம் இல்லாமலும், சாப்பிட வழி இல்லாமலும் தவித்த 7 பேரும் தப்பி வந்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் முறையிட்டு தங்களை தாயகம் அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டனர்.

    இதனிடையே 7 தமிழர்கள் நிலையை அறிந்த தொழிலதிபர் ஹைதர் அலி 7 பேருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுத்ததோடு தனது நிறுவனத்தில் வேலையும் தருவதாக கூறினார். இந்திய தூதரகத்தில் பணிபுரியும் தென்காசி ஷாஜகான் என்பவர் எடுத்த கடும் தொடர் முயற்சியில் பாதிக்கப்பட்ட 7 தமிழர்களின் பாஸ்போர்ட்களை அவர்களது ஸ்பான்சரை தூதரகம் வரவழைத்து பெற்று கொடுத்தார்.

    7 தமிழர்கள் மீட்கப்படுவதற்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கத்தினர் பக்கபலமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காரில் சோதனையிட்டபோது காரில் 2 நாட்டு துப்பாக்கிகள், 25 சணல் வெடிகள்,2 வீச்சரிவாள் கைப்பற்றப்பட்டது.
    • முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பது உளவுத்துறைக்கு தெரியவந்தது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே கடந்த 15ம் தேதி இரவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் நாட்டு துப்பாக்கிகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் சிலர் கரூர்-திருச்சி சாலையில் வருவதாக தகவல் கிடைத்தது. உடனே பெட்டவாய்த்தலை சோதனை சாவடியில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

    பின்னர் சந்தேகப்படும்படியாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்த முயன்ற போது, அந்த கார் வேகமாக சென்று பேரி கார்டில் மோதி நின்றது. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய ஒரு நபர் போலீசாரை பார்த்து நான் பெரிய ரவுடி நான் தான் குமுளி ராஜ்குமார் என் காரையே நிறுத்துவீங்களா என கேட்டு போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

    பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரின் தனிப்படை போலீசார் பரமக்குடி அருகே ஆதி ஏந்தல் பகுதியில் குமுளி ராஜ்குமார் (வயது 45) மற்றும் கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த இன்கானூர் பாலு என்கிற பாலசுப்பிரமணி ஆகிய 2 பேரை கைது செய்து பெட்டவாய்த்தலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் குமுளி ராஜ்குமார் காரில் சோதனையிட்டபோது காரில் 2 நாட்டு துப்பாக்கிகள், 25 சணல் வெடிகள்,2 வீச்சரிவாள் கைப்பற்றப்பட்டது.

    கைதான குமுளி ராஜ்குமார் மீது ஏற்கனவே 5 கொலை வழக்கு, தலா 2 கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது கடந்த 2021 ம் ஆண்டிலிருந்து தற்போது வரை காவல்துறைக்கு டிமிக்கி கொடுத்து வந்த அவர் திருச்சி போலீசாரிடம் சிக்கினார்.

    அவரைப் பற்றி போலீஸ் தரப்பில் கூறும் போது, நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் பூர்வீகமாகக் கொண்டவர் ராஜ்குமார். தனது 16 வயதில் டீக்கடைக்காரர் ஒருவரின் மண்டையை உடைத்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் தச்சநல்லூர் பகுதியில் இருந்து தப்பி தேனி மாவட்டம் குமுளிக்கு சென்றார்.

    அங்கு நண்பர்களுக்காக அடிக்கடி தகராறு ஈடுபட்டார். கடந்த 1999 ம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 19. பின்னர் 2010-ல் ராஜ்குமார் தேவேந்திரகுல மக்கள் இயக்கம் என்ற புதிய இயக்கத்தை தொடங்கி அதற்கு தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

    சென்னையில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் ஆங்காங்கே ஆதரவாளர்களை சேர்த்துக்கொண்டு பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.

    இவர் முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பது உளவுத்துறைக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை போலீசார் தேடி வந்த நிலையில் திருச்சியில் சிக்கியுள்ளார் என அவர் தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து குமுளி ராஜ்குமாரின் ஆதரவாளர்களான மாகாளிக்குடி அலெக்ஸ், அருண், சமயபுரம், ராமு, லட்சுமணன், துறையூர், வெங்கடாசலபதி,கணேசன், விநாயகமூர்த்தி, வள்ளி அருணன், கார்த்திக் ஆகிய 9 பேரை சமயபுரம் போலீசாரும், சக்திவேல் குளித்தலை பொன்னடி சங்கீத்குமார் ஆகிய 3 பேரை முசிறி போலீசாரும் கைது செய்தனர். மேலும் சோமரசம்பேட்டையில் கோபி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொத்தம் ஆதரவாளர்கள் 13 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடி வருவதாக தனி படை போலீசார் தெரிவித்தனர்.

    • தகுந்த ஆவணங்களின்றி எடுத்துவந்த ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 129 பண்டல் சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    • பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் பெருமளவு இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளில் பயணிகள் வருகை மற்றும் கார்கோ சேவையும் அதிகரித்துள்ள அதேவேளை தங்கம், போதைப்பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவைகள் கடத்தல் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

    இதனிடையே தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து ஏர்ஏசியா விமானம், திருச்சி விமான நிலையம் வந்தது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தபோது அவர் தகுந்த ஆவணங்களின்றி எடுத்துவந்த ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 129 பண்டல் சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    தடை செய்யப்பட்ட சிகரெட் வகைகளை விமானத்தில் கடத்தி வந்ததை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காதலனிடம் இருந்து பிரித்தால் தற்கொலை செய்வேன் என மிரட்டியதாக தெரிகிறது.
    • எதுவாக இருந்தாலும் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவரங்கபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி வித்யா. இந்த தம்பதியரின் மகள் கோபிகா (வயது 17 ). இவர் பிளஸ் 2 வரை படித்துள்ளார்.

    ராமசந்திரன்-வித்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனால் வித்யா மகள் கோபிகாவுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கோபிகாவுக்கும் திருப்பைஞ்ஞீலீ அடுத்துள்ள மூவராயன் பாளையம் மேலூர் கிராமத்தை சேர்ந்த வரதராஜ்-தனலெட்சுமி தம்பதியரின் மகன் நவீனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. வரதராஜ் வடக்கு சித்தாம்பூர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கோபிகா மற்றும் நவீன் இருவரும் மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் வந்த போது பத்தாம் வகுப்பில் இருந்து காதலித்து வந்துள்ளனர். மேலும் 12-ம் வகுப்பை முடித்தவுடன் நவீன் கோபிகாவை அழைத்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். கோபிகாவும் நவீன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வர இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் கோபிகாவின் தாயார் வித்யா இருவரையும் நேரில் கண்டித்துள்ளார். இதையடுத்து கோபிகா தாயாருடன் வாக்குவாதம் செய்து காதலன் நவீனுடன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் வித்யா மேலூர் சென்று ரெண்டு பேரும் மேஜர், எனவே இது சட்டப்படி தவறு என அறிவுரை கூறி மகளை அழைத்து வந்தார். பின்னர் ஒரு வாரம் கழித்து மீண்டும் காதலனை தேடி சென்று விட்டார். பின்னர் மீண்டும் வித்யா தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்தார்.

    அதன் பின்னர் மீண்டும் காதலனை தேடிச்சென்ற கோபிகா தன்னை காதலனிடம் இருந்து பிரித்தால் தற்கொலை செய்வேன் என மிரட்டியதாக தெரிகிறது.

    இதனால் பயந்து போன தாயார் மகளின் விருப்பத்திற்கு அவரை விட்டு விட்டார்.

    இதையடுத்து நவீன் தன்னை நாடி வந்த காதலிகாக ஶ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் மாலை கட்டும் வேலைக்கு சேர்ந்து வேலை செய்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் 3 மாதம் ஒன்றாக இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நவீன் தீபாவளி பண்டிகைக்காக ஆடை எடுக்க திருச்சிக்கு சென்றுவிட்டார். நவீனின் பாட்டி வயல் வேலைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவை திறந்தபோது வீட்டில் உள்ள மின் விசிறியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியவாறு கோபிகா பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து பாட்டி கத்தி கூச்சலிட்டு அழுதார். அக்கம்பக்கத்தினர் வந்து தூக்கில் தொங்கியவாறு பிணமாக இருந்த கோபிகாவை மீட்டனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த மண்ணச்சநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரி மற்றும் போலீசார் ராமஜெயம் உள்ளிட்டோர் கோபிகாவின் உடலை கைப்பற்றி ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

    கோபிகா தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.

    இதனிடையே வித்யா தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தார். மேலும் அவரது உறவினர்கள் மணச்சநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உண்மையை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,

    அக்கம் பக்கத்தில் விசாரித்த போது நவீன்-கோபிகா ஆகியோருக்கு இடையே எந்த தகராறும் ஏற்பட்டதில்லை என தெரிவித்தனர். நேற்று கோபிகா தனது தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார்.

    அதன் பின்னர் நவீன் வெளியே சென்ற நேரத்தில் அவர் தற்கொலை செய்ததாக தெரிகிறது. எதுவாக இருந்தாலும் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காதலனுடன் வசித்து வந்த சிறுமி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் மணச்சநல்லூர் மற்றும் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • ஓட்டல்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
    • விசாரணை முடிவில் மிரட்டல் குறித்து விவரங்கள் வெளியாகும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகரில் விமான நிலையப் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

    கடந்த வாரம் பள்ளி, கல்லூரிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில், அது புரளி என்பது தெரியவந்தது.

    இதனால் நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று திருச்சியில் 4 பிரபல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி மாநகர காவல் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு இமெயில் மூலம் இன்று காலை ஒரு தகவல் வந்தது. அதில் திருச்சி மாநகரில் உள்ள பிரபலமான 4 ஓட்டல்களின் பெயர் குறிப்பிட்டு அந்த ஓட்டல்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து 4 ஓட்டல்களுக்கும் போலீசார் விரைந்தனர். ஓட்டல்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்பு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் 4 பிரிவுகளாக சென்று 4 ஓட்டல்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். ஓட்டல் அறைகள், வளாகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    எனினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து இதுபற்றி போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? எந்த முகவரியில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

    சைபர் கிரைம் போலீசாரும் விசாரணையில் இறங்கி உள்ளனர். விசாரணை முடிவில் இந்த மிரட்டல் குறித்து விவரங்கள் வெளியாகும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஊசி மருந்து பாட்டில் ரூ.7 க்கு வாங்கி அதை ரூ. 300 வரை விற்பனை செய்துள்ளனர்.
    • போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள் உடல் மெலிந்து சோர்வாக காணப்படுவார்கள்.

    திருச்சி:

    திருச்சி மாநகரில் இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. அவ்வப்போது போலீசார் போதை ஊசி விற்பனை கும்பலை கைது செய்து வந்தனர்.

    அதைத் தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் போதை பொருட்கள், மாத்திரைகள், ஊசிகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டது. இதில் உறையூர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதை ஊசி சப்ளை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமராஜ் தலைமையிலான போலீசார் திருச்சி வடவூர் பகுதியில் ஊசியுடன் போதை மருந்து மாணவர்களுக்கு சப்ளை செய்த அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் (வயது 32) இஃப்ரான்( 23) சாலை ரோடு ரியாஸ்கான்(23) ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேரும் ஆன்லைனில் போதை மாத்திரைகள் ஆர்டர் செய்து வாங்கி சப்ளை செய்தது தெரியவந்தது. மேலும் டாக்டர்கள் சிலரின் மருந்து சீட்டுகளை போலியாக அச்சடித்து அதில் டாக்டர்கள் பரிந்துரைப்பது போன்று கையெழுத்திட்டு போதை மாத்திரை மற்றும் ஊசிகளை ஆர்டர் செய்து தபால் மூலமும் வாங்கிய தகவலும் கிடைத்தது.

    ஊசி மருந்து பாட்டில் ரூ.7 க்கு வாங்கி அதை ரூ. 300 வரை விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, மாணவர்களுக்கு போதை ஊசி மற்றும் மருந்து சப்ளை செய்த பழைய குற்றவாளிகள் 20 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள் உடல் மெலிந்து சோர்வாக காணப்படுவார்கள். அவர்களின் கைகளில் ஆங்காங்கே தழும்புகள் இருக்கும். எனவே தங்கள் குழந்தைகளின் கைகளில் சந்தேகத்திற்குரிய வகையில் தழும்புகள் உள்ளதா? என்பதை பெற்றோர் அடிக்கடி கண்காணித்து அவர்களை பாதுகாக்க வேண்டும்.

    போதை ஊசி செலுத்தும் போது அது நேராக நரம்பு மண்டலத்தை பாதிக்கும். உணவு உட்கொள்வதில் ஆர்வம் குறையும். தொடர்ந்து 3 ஆண்டுகள் இதே பழக்கத்தில் இருந்தால் மூளை நரம்பு மண்டலம் முற்றிலுமாக செயல் இழந்து உயிருக்கு ஆபத்தாக முடியும் என்றார்.

    • விமானத்தில் ஹைட்ராலிக் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
    • சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.

    141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

    இதைதொடர்ந்து, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

    மேலும், விமானத்தில் ஹைட்ராலிக் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், திருச்சி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக வானூர்தி இயக்கக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எரிபொருளை குறைத்த பின், தரை இறக்கப்பட்டு 140 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக விசாரிக்கப்படுகிறது.

    அதன்படி, விமான பைலட், விமான ஊழியர்களிடம் சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பைலட் மற்றும் கண்ட்ரோல் ரூம் இடையிலான உரையாடல் குறித்த ஆடியோ பதிவை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    விசாரணையை தொடர்ந்து, டெல்லியில் உள்ள வானூர்தி இயக்கக அதிகாரிகளுக்கு அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    • சென்னையில் சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது.

    திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.

    141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

    விமானத்தில் பயணத்தவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். இந்த நிலையில், நடுவானில் வட்டமடித்த விமானத்தில் நடந்த திக் திக் நிமிடங்களை பயணிகள் விவரித்தனர். அப்போது பேசிய பயணி ஒருவர், நாங்கள் ஷார்ஜாவை நோக்கி பயணம் செய்வதாகவே நினைத்தோம். என்ன நடந்தது என்றே தெரியவில்லை."

    "விமானத்தில் ஏற்பட்ட கோளாறு பற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதன்பிறகு தான் விமானம் தரையிறங்குவதில் பிரச்சினை உள்ளது என்று கூறினர். மேலும், பதட்டம் அடையாமல் சீட் பெல்ட் அணிந்து கொள்ள அறிவுறுத்தினர்."

    "சிறிது நேரத்திற்கு விமானத்தின் மின் விளக்குகள் பலமுறை அணைந்து, மீண்டும் எரிந்தன. பிறகு விமானம் தரையிறங்கியது," என்று தெரிவித்தார். 

    • தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானம் திருச்சிக்கே திரும்பியது.
    • ஒரு மணி நேரமாக வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக விமானம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

    141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது. 

    • தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானம் திருச்சிக்கே திரும்பியது.
    • ஒரு மணி நேரமாக வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. It is said to be hovering in the sky for an hour.

    திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.

    விமானத்தின் ஹைட்ராலிக்குகளில் பிரச்சினை ஏற்பட்டதால், அதன் சக்கரங்கள் உள்ளே இழுக்க முடியவில்லை. இதன் காரணமாக விமானம் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் விமானம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. விமானத்தில் எரிபொருள் குறைந்த பிறகு அதனை தரையிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பத்துக்கும் அதிக ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளன. மேலும், நான்கு தீயணைப்பு வாகனங்களும் விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளன.

    • அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கு கூடாது என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு.
    • அ.தி.மு.க.விலிருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கியதை வரவேற்கிறேன்.

    திருச்சி:

    திருச்சியில் பா.ஜ.க. தமிழக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    3-வது முறையாக அரியானாவில் பாஜக ஆட்சி அமைய உள்ளது. தேர்தலில் வெற்றியை பெற்று விடலாம் என்று மனப்பால் குடித்த காங்கிரஸ் கூட்டணிக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள். ஒரு அரசு எப்படியெல்லாம் ஏற்பாடு செய்யக்கூடாது என்பதற்கு ஒரு அடையாளமாக மெரினாவில் நடைபெற்ற ஏர் ஷோ நடந்துள்ளது.

    இந்த அரசால் மக்களுக்கு குடிநீர் கூட கொடுக்க முடியவில்லை.

    தனது நண்பர்கள் நலனுக்காக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது கார் பந்தயம் நடப்பதற்கு முன்னேற்பாடுகளை தொடர்ந்து கவனித்த உதயநிதி துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் தனது பணியை மறந்துவிட்டார். தமிழக காவல்துறை இதுவரையிலும் எந்த ஒரு பயங்கரவாதிகளையும் கைது செய்யவில்லை.

    கஞ்சாவை தவிர வேறு எந்த ஒரு போதைப் பொருளையும் தமிழக காவல்துறை பிடித்ததாக தெரியவில்லை. எந்த வகையிலும் தோற்றுப் போன அரசாக திமுக ஆட்சி உள்ளது. 2026-ல் மக்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள்.

    ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் கேட்டது நியாயம். ஆனால் கூட்டணிக்கு மட்டும் தான் கட்சிகள் தேவை. அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கு கூடாது என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு.

    அரசின் கஜானாவை காலி செய்துவிட்டு அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலையில் தற்போது தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும் உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம்போட முடியாத நிலை தமிழகத்தில் அடுத்த மூன்றுமாதத்தில் உருவாகும், நிர்வாக திறன்மையின்மைக்கு மத்திய அரசு குறைசொல்வதை ஏற்கமுடியாது.

    அ.தி.மு.க.விலிருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கியதை வரவேற்கிறேன். அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைய வேண்டும். ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தால்தான் தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். சமூக நீதி வேண்டும் என்றால் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். தி.மு.க. என்பது இந்து விரோத அமைப்பு தான். அதன் இந்து விரோத கொள்கைகள் மாறாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் ராஜசேகரன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் முரளி, ஸ்ரீராம் சங்கர், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். பேட்டியின் போது மாவட்ட தலைவர் ராஜசேகரன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் முரளி, ஸ்ரீராம் சங்கர், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றில் கர்ப்பபை கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
    • கர்ப்பபை கட்டியை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றிட வேண்டும் என்ற நிலையும் இருந்தது.

    மணப்பாறை:

    மணப்பாறையை அடுத்த வடுகபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கலா. இவர் வயிற்று வலி ஏற்பட்டு மணப்பாறையில் உள்ள காமராஜர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சென்றர்.

    டாக்டர்கள் அவரை ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளும்மாறு கூறினர்.

    அந்த பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றில் கர்ப்பபை கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அந்த கர்ப்பபை கட்டியை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றிட வேண்டும் என்ற நிலையும் இருந்தது.

    இதனிடையே அந்த பெண்ணின் ரத்தத்தின் அளவு 4 எச்.பி. புள்ளி மட்டுமே இருந்துள்ளது. சராசரியாக 10 க்குள் மேல் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்ற நிலையை உணர்ந்த மருத்துவக்குழுவினர் இதுதொடர்பாக குடும்பத்தினரிடம் பேசி அந்த பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய தொடர் சிகிச்சை முறைகளை தொடர்ந்தனர்.

    மேலும் ரத்ததின் அளவை அதிகரிக்க 4 யூனிட் ரத்தமும் அந்த பெண்ணிற்கு செலுத்தப்பட்டு உடல் நிலையை மேம்படுத்துவதற்கான அனைத்து சிகிச்சை முறைகளும் சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணிற்கு மீண்டும் ரத்த அளவு பரிசோதனை செய்யப்பட்ட போது 11 புள்ளிகளை கடந்ததுடன் உடலும் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு தேறி வந்ததை அறிந்து நேற்று அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றிட மருத்துவக்குழுவினர் முடிவு செய்தனர்.

    அதன்படி தலைமை மருத்துவர் தமிழ்மணி மேற்பார்வையில் மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் மஜிதா, விஜயா மயக்கவியல் மருத்துவ நிபுணர் மலைதுரை, அறுவை சிகிச்சை அரங்க செவிலியர்கள் அம்சவள்ளி, ராஜலெட்சுமி, ஜோன் ஆப்ஆர்க் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை தொடங்கினர்.

    சில மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப்பின் பெண்ணின் வயிற்றில் இருந்த பிரமாண்ட அளவிலான 5 கிலோ கட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண் அறுவை சிகிச்சைக்குப்பின் உள்ள மருத்துவ அறைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    குறைந்த அளவு உடலில் ரத்தம் இருந்ததோடு 5 கிலோ எடையுள்ள கட்டி வயிற்றில் இருந்ததால் கடும் அவதிக்கு ஆளாகி வந்த வந்த பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவில் எந்தவித செலவுமின்றி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அசத்தி உள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றது.

    ஏற்கனவே இதுபோன்ற அறுவை சிகிச்சை மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டாலும் கூட 5 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தனித்துவம் பெற்று வருகின்றது.

    அரசு மருத்துவமனை என்றால் அலட்சியம் நிறைந்து இருக்கும் என்று சொல்லப்படும் நிலையில் பெண்ணுக்கு 5 கிலோ கட்டி கடும் சவாலான நிலையில் அகற்றி இருப்பது தான் சிறந்து வாய்ந்ததாக அமைந்துள்ளது.

    ×