search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    அறிந்தவைகளுக்கு அப்பால்..!
    X

    அறிந்தவைகளுக்கு அப்பால்..!

    • கனவு காணும்பொழுது உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வராது.
    • முழு புண்ணிய ஆத்மாக்களுக்கும் தகுந்த பெற்றோர்கள் கிடைப்பது கடினம்.

    ஓஷோ, இரண்டு பிறவிகளுக்கிடையே உள்ள காலமற்ற இடைவெளியில் இந்த ஆன்மாவுக்கு என்ன நேரிடுகிறது ?

    ஒரு பிறவிக்கும் , மறுபிறவிக்கும் இடையில் ஏற்படும் அனுபவங்கள் ஒரு கனவுபோலத்தான்.

    அப்பொழுது அது உண்மையைப்போலத் தோன்றும் .

    ஆனால் புலன்களுக்கு வேலை இல்லை .

    ஏனெனில் உடல் இல்லை .

    அப்படிக் கனவு காணும்பொழுது உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வராது .

    ஆகவே , அந்த இடைவெளியில் நடப்பவை அனைத்தும் உண்மை போலவே தோன்றும் . அப்பொழுது தோன்றும் தோற்றங்கள் மிகவும் அசாதாரணமானவையாகக்கூட இருக்கக்கூடும் .

    ஆத்மா சொர்கத்தை அடைவது அல்லது நரகத்தை அனுபவிப்பது என்பது இந்தக் கனவு நிலையைக் குறிப்பிடுவதுதான் .

    உண்மையில் சொர்க்கமும் இல்லை , நரகமும் இல்லை !

    ஆனால் இது ஒருவித கனவு நிலை , அவ்வளவுதான்.

    முழுமையான பாப ஆத்மாக்களுக்குத் தகுந்த தாய், தகப்பன் கிடைப்பது மிகவும் கஷ்டம் .

    முழு புண்ணிய ஆத்மாக்களுக்கும் தகுந்த பெற்றோர்கள் கிடைப்பது கடினம் !

    இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள ஆன்மாக்கள் நல்லதும் , கெட்டதும் கலந்திருக்கின்றன .

    ஆனால் அடுத்த பிறவியில் இதில் எதுவும் ஞாபகம் இருக்காது .

    இந்த இடைப்பட்ட காலத்தில் அதாவது ஆன்மா மறுபிறவி எடுப்பதற்கு முன்பு அந்த ஆன்மா நிலையாகவும் இல்லை, அது அங்கும், இங்கும் அலைந்துகொண்டும் இல்லை. அது ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கிறது.

    இதை தர்க்கரீதியாகப் புரிந்துகொள்ள முடியாது . இந்த ஆன்மாவில் முற்பிறவியில் ஏற்பட்ட அனுபவங்கள் கருத்துக்கள் , தீய மற்றும் நல்ல செயல்களின் பலன்கள் அனைத்தும் கரு வடிவில் அப்படியே பதிந்திருக்கின்றன.

    அது மீண்டும் உடலை எடுக்கும்பொழுது அவை அனைத்தும் மெல்ல செயல்புரிய ஆரம்பித்துவிடுகின்றன.

    Next Story
    ×