என் மலர்

    மற்றவை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு டீஸ்பூன் சிறிய வெங்காயச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர சிறுநீரக கோளாறுகள் முற்றிலும் குணமாகும்.
    • சிறிதளவு பனங்கற்கண்டு நெய், நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டுவர மூளை வளர்ச்சி பெறுவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சத்துக்களை அதிகமாக உண்டு பண்ணுகிறது.

    பனங்கற்கண்டில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்), இரும்பு (அயன்), சாம்பல், புரதச்சத்துக்கள், மல்டி-வைட்டமின்களான துத்தநாகம் (ஜின்க்) மற்றும் பொட்டாசியம் உள்ளது.

    பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்துவர மார்புச்சளி இளகி வெளியாகும்.

    பனங்கற்கண்டு சுவைத்து உமிழ்நீரை சிறுக சிறுக விழுங்கி வர வாய் துர்நாற்றம், தொண்டைப்புண், வலி இவை நீங்கும்.

    பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, காய்ச்சலினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.

    இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

    கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண்களை குணப்படுத்தி ஆரோக்கியத்தை தருகிறது.

    இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் செயல்படுகிறது.

    இதை பானமாக அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும்.

    இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

    இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

    ஒரு டீஸ்பூன் சிறிய வெங்காயச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர சிறுநீரக கோளாறுகள் முற்றிலும் குணமாகும்.

    சிறிதளவு பனங்கற்கண்டு நெய், நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டுவர மூளை வளர்ச்சி பெறுவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சத்துக்களை அதிகமாக உண்டு பண்ணுகிறது.

    சித்தா ஆயுர்வேதம் மற்றும் ஆங்கில மருந்து மாத்திரைகளை உண்டபின் வாயில் ஏற்படும் கசப்பை போக்குவதற்கு வெள்ளை சர்க்கரையைவிட பனங்கற்கண்டே மேலானது.

    கோடை வெயிலின் கொடுமைகளை தவிர்க்க இளநீருடன் பனங்கற்கண்டு ஏலக்காய் சேர்த்து பானமாக அருந்தி வருவது சிறப்பு.

    -அருளானந்தர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நமது உடல் ஆகாய சக்தியை இந்த பிரபஞ்சத்தில் இருந்து பெற்றுக்கொண்டே இருக்கிறது.
    • ஆகாய சக்தி சரியான அளவில் இருக்கும்போதுதான் கற்பதை கிரகிக்க முடிகிறது.

    பஞ்ச பூதத்தில் மண் அப்படியே கிடக்கும்.

    மண்ணை விட தண்ணீர் சூட்சும சக்தி வாய்ந்தது. அது பக்கவாட்டில் பரவும்.

    தண்ணீரை விட நெருப்பு சூட்சும சக்தி வாய்ந்தது. அது பக்கவாட்டில் மட்டுமல்லாது சிறிது மேலேயும் எழும்பும்.

    நெருப்பை விட காற்று சூட்சும சக்தி வாய்ந்தது. அது எல்லா இடங்களிலும் பரவும்.

    காற்றை விட ஆகாயம் சூட்சும சக்தி வாய்ந்தது. ஆகாயம் என்ற வெற்றிடம் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறது.

    அண்டத்தில் உள்ள இந்த பஞ்ச பூதங்கள் தான் பிண்டமாகிய நமது உடலிலும் உள்ளது.

    நாம் சாப்பிடும் உணவு, பருகும் நீரில் இருந்து மண் சத்தும் நீர் சத்தும் கிடைக்கிறது.

    வயிற்றில் உள்ள அமிலமானது நெருப்பாக செயல்புரிந்து உண்ணும் உணவை எரித்து உடல் இயங்க தேவையான வெப்பத்தை வழங்குகிறது.

    சுவாசிப்பதாலும், உணவிலிருந்தும், நீரிலிருந்தும் பிராண சக்தி கிடைக்கிறது. இதில் அதிக அளவு சுவாசத்திலிருந்து பெறப்படுகிறது.

    நமது உடல் ஆகாய சக்தியை இந்த பிரபஞ்சத்தில் இருந்து பெற்றுக்கொண்டே இருக்கிறது. ஆனால் நமக்கு ஆகாய சக்தியை மீட்டுத்தருவது உறக்கம்.

    ஆழ்ந்த உறக்கத்தில் ஆகாய சக்தி மீட்டெடுக்கப்படுகிது. எப்போது ஆகாய சக்தி உடலில் குறைகிறதோ அப்போது சோர்வு ஆட்கொண்டு தூக்கத்திற்கு இட்டுச்செல்கிறது.

    ஆகாய சக்தியை மீட்க மற்றொரு வழி தியானம் மற்றும் மனம் ஒருமித்து செய்யக்கூடிய செயல்கள்.

    மனம் என்பது நம்மில் இருக்கும் ஒரு சூட்சும பொருள். இதனை இயக்குவதற்கு சூட்சும சக்தியான ஆகாய சக்தி தேவைப்படுகிறது.

    எப்போது மனதில் எண்ண ஓட்டங்கள் அடங்குகிறதோ அப்போது உடலில் ஆகாய சக்தியின் சேமிப்பு அதிகரிக்கிறது.

    ஆகாய சக்தி சரியான அளவில் இருக்கும்போதுதான் கற்பதை கிரகிக்க முடிகிறது.

    மனதில் அளவுக்கு அதிகமான துக்கம் போன்றவற்றால் உடலில் ஆகாய சக்தி அதிக அளவில் குறைவதையே நவீன மருத்துவத்தில் மனஅழுத்தம் என்று அழைக்கிறார்கள்.

    இதற்கு அளிக்கப்படும் மருந்துகள் மனதை சரி செய்யாது, அதற்கு பதிலாக தூக்கத்தை அளித்து ஆகாய சக்தியை மீட்டெடுக்கும் பணியை மட்டுமே செய்கிறது.

    எனவே மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் தான் வாழ்வில் முன்னேற்றங்களை காண இயலும்.

    - சித்தர்களின் குரல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புல் என்றால் புல்லுதல் அதாவது பொருந்துதல் அல்லது தழுவுதல் எனப் பொருள்.
    • புலி வாழ்கின்ற தமிழ் நிலத்தில் இன்றும் புலி இருக்கிறது. ஆனால் புலி என்ற சொல் மட்டும் தேய்கிறது.

    ஆங்கில வழி கல்வியின் தாக்கம் நம் குழந்தைகளின் தாய்மொழித் திறனை வெகுவாகப் பாதித்திருக்கிறது. யானையையும் புலியையும் இன்றைய குழந்தைகளுக்கு 'எலிஃபண்ட், டைகர்' என்கிற இரு சொற்களைக் கொண்டுதான் அடையாளம் தெரிகிறது என்பார் தியடோர் பாஸ்கரன்.

    யானையோ புலியோ இல்லாத ஒரு நாட்டின் மொழியே ஆங்கிலம், ஆனால் இம்மொழி யானையும் புலியும் வாழும் தமிழ்நிலத்தைச் சார்ந்த குழந்தைகளின் தாய்மொழியை சிதைத்திருப்பது கொடும் நிகழ்வு.

    தமிழ் மொழியில் புலியைக் குறிக்க, புலி, வேங்கை, உழுவை, மறுவ, வயமா, வயப்புலி, கடுவாய், வாள்வரி, வெல்லுமா, பாய்மா, வியாக்கிரம், வல்லியம், தரக்கு, குயவரி, கொடுவரி, புல் என பல சொற்கள் உள்ளன.

    புல் என்றால் புல்லுதல் அதாவது பொருந்துதல் அல்லது தழுவுதல் எனப் பொருள். புல் என்பது புல்லி ஆகமாறிப் புலியாகத் திரிந்தது. இதற்கு நேரடிப் பொருள் முன் கால்களால் தழுவும் விலங்கு. இது நடத்தைப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் முறையில் சூட்டப்பட்டிருக்கும் பெயர்.

    ஆங்கிலத்தில் பயிலும் டைகர் என்கிற சொல்லோ பாபிலோனிய ஆறான டைகிரிஸ் எனும் சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அதாவது ஒரு ஐரோப்பியர் முதன்முதலில் அங்குதான் அவ்விலங்கை பார்த்திருக்கிறார். ஆனால் புலி வாழ்கின்ற தமிழ் நிலத்தில் இன்றும் புலி இருக்கிறது. ஆனால் புலி என்ற சொல் மட்டும் தேய்கிறது.

    ஆங்கிலச் சொல்லான 'எலிபண்ட் ' என்கிற சொல் பழைய பிரெஞ்ச் மொழியிலிருந்து பிறந்ததா அல்லது இலத்தின், கிரேக்க மொழியிலிருந்து பிறந்ததா என இன்னும் ஆய்வில் இருக்கிறது. அது எப்படியோ போகட்டும். ஆனால் தமிழில் இதற்கு யானை, எறும்பி, தும்பி, தூங்கல், தோல், கறையடி, பொங்கடி, உம்பல், வாரணம், ஒருத்தல், வல்விலங்கு, நாகம், கும்பி, நால்வாய், குஞ்சரம், அத்தி, வேழம், உவா, கரி, களிறு, பிடி, கைம்மா, மறமலி, கைம்மா, ஆம்பல், கோட்டுமா, கடிவை, புகர்முகம், பகடு, கரிணி, களபம், மருண்மா, தந்தி, வழுவை, கயம், மதகயம், இபம், கும்பி, பூட்கை, புழைக்கை, மதமா, மந்தமா என முப்பதுக்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. பிறமொழி கலந்த சொற்கள் என்றால் ஐம்பதுக்கு மேல் தேறும்.

    இவையனைத்தும் யானையின் உருவமைப்பு, நடத்தைப் பண்புகளின் அடிப்படையில் சூட்டப்பட்டப் பெயர்கள். நிகண்டுகளில் யானையின் உடலில் 25 பாகங்களுக்கு மேல் தனிப்பெயர்கள் காணப்படுகின்றன என்கிறார் பி எல்.சாமி.

    ஒரு மொழியில் ஒரு சொல்லின் தோற்றமானது அந்நிலத்தோடும் அதன் பல்லுயிர்ச்செறிவோடும் தொடர்புடையது.

    இவ்வாறாகத்தான் பல்லுயிரியச் செறிவு மிக்கப் பகுதியில் வாழ்ந்த நாம் இத்தன்மையைத் நம் மொழியிலும் ஏற்றி வைத்தோம்.

    ஆனால் ஓர் உயிரினத்தைக் குறிக்கப் பல சொற்களைக் கொண்ட ஒரு மொழியை, அவ்வுயிரினம் குறித்த சொல் ஏதுமற்ற ஒரு வேற்று மொழி வீழ்த்தி வருகிறது. மற்ற சொற்களுக்கும் இது பரவினால் எதிர்காலத்தில் அது மொழியை ஒழித்த பண்பாட்டு மேலாதிக்கமாக மாறிவிடாதா?

    - நக்கீரன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருமணமான ஒரு ஆண்டில் பரிதாபம்
    • உதவி கலெக்டர் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த சமுத்திரம் கிராமம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவரது மனைவி ரோஜா (வயது 23). ஒரு வருடத்திற்கு முன் இவர்களது திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ரோஜா நேற்று முன் தினம் இரவு சுமார் 7.30 மணியளவில் வீட்டின் மாடியில் உள்ள அறையில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    திருமணமாகி ஒரு வருடத்திற்குள் ரோஜா இறந்துள்ளதால் அது குறித்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காய்ஞ்ச இலையை தூர எறியாம சாய்ங்கால நேரத்துல புகைமூட்டம் போட்டால் கொசுவை விரட்டலாம்.
    • கழுத்துவலி வர்றவங்க தலையணைக்கு பதிலா வெறும் துணியில நொச்சி இலையை வச்சி தூங்கலாம்.

    மூலிகை தலையணை பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? இதோ சொல்றேன்...

    ஜலதோஷத்தால வர்ற தலைவலியில இருந்து பீனிசம்னு சொல்லக்கூடிய சைனஸ், மூக்கடைப்பு, கழுத்து பிடரியில வரக்கூடிய வலினு எல்லாத்துக்கும் நொச்சி தலையணை கைமேல் பலன் தரும்.

    நொச்சி இலையை பறிச்சிட்டு வந்து தலையணையோட உறையில அதாவது நம்ம தலை படுற மாதிரி வச்சி தூங்கணும். இந்த இலை காய்ஞ்சு போனாலும் பரவாயில்லை. 10 நாள் வரைக்கும் வச்சிட்டு பிறகு அதை எடுத்துட்டு வேற இலையை வச்சி தூங்கலாம்.

    காய்ஞ்ச இலையை தூர எறியாம சாய்ங்கால நேரத்துல புகைமூட்டம் போட்டால் கொசுவை விரட்டலாம்.

    கழுத்துவலி வர்றவங்க தலையணைக்கு பதிலா வெறும் துணியில நொச்சி இலையை வச்சி தூங்கலாம்.

    தூக்கம் வராம அவதிப்படுறவங்க மருதாணி இலையை மேலே சொன்ன மாதிரி வச்சி தூங்கினா தூக்கம் தூக்கமா வரும்.

    மனநிலை பாதிப்பு உள்ளவங்களுக்கும், தூக்கமில்லாம தவிப்பவங்களும் மருதாணிப்பூவை தலையணைக்குள்ள வச்சி தூங்கினா நிச்சயமா பலன் கிடைக்கும்.

    -மரிய பெல்சின்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்து மதங்களிலுமே மூன்றாம் பிறை வழிபாடு தெய்வீகமான வழிபாடாகக் கருதப்படுகிறது.
    • எதையும் சாதாரணமாகச் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

    அமாவாசைக்கு அடுத்துவரும் திரிதியை அதாவது, மூன்றாம் நாளில் தோன்றும் வளர்பிறையையே மூன்றாம்பிறை என்பார்கள்.

    இந்த மூன்றாம் பிறைக்கு என்ன சிறப்பு என்றால், அமாவாசை அன்றும், அதற்கு மறுநாளும் நிலவு தெரியாது. அதற்கு மறுநாள் அதாவது மூன்றாம் நாள்தான் நிலவு மிளிரும்.

    ஒரு கோடு போல ஒளிக்கீற்றாக வரும். அதனை ஏதாவது வெட்ட வெளியிடத்தில் இருந்தோ, உயர்ந்த இடத்தில் இருந்தோ, மின் விளக்குகள் இல்லாத இடத்தில் இருந்து அடிவானத்தில் தோன்றும் போது காணலாம். அதன் மெல்லிய ஒளியைப் பார்த்தால், அது உங்களுக்குள் ஏதோ ஓர் புத்துணர்வைத் தூண்டும்.

    அனைத்து மதங்களிலுமே மூன்றாம் பிறை வழிபாடு தெய்வீகமான வழிபாடாகக் கருதப்படுகிறது.

    உண்மையில் மூன்றாம்பிறையைக் காணவேண்டும் என்று முன்னோர்கள்கூறக்காரணம்தான் என்ன?

    அமாவாசையின் மூன்றாம் நாளில் மிக மெலிதாகக் காணும் அந்தப்பிறை நிலாவைக் காணும் அளவுக்கு நம்முடைய பார்வைத்திறன் உள்ளதா எனச் சோதிக்கும் ஓர் கண் பார்வை ஆய்வுமுறைதான், இந்த மூன்றாம் பிறை காணுதல்.

    அப்படி அதைக் காணும் அளவிற்கு நம்முடைய பார்வைத்திறன் இருக்குமேயானால், நம் உடல் நலம், மனநலம், குண நலம் எல்லாம் நன்றாக இருக்கிறது என்பது பொருள்.

    எதையும் சாதாரணமாகச் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்பதனால் மூன்றாம்பிறை காணலுக்கு ஓர் தெய்வீகத் தன்மையை ஏற்றி, நம்மை இணங்கவைக்கும் உத்தியாகக் கையாள்கின்றனர், ஆன்மிகவாதிகள். மற்றபடி இதனால், வேறு நன்மைகள் கிடைக்கும் என்று கூறுவதெல்லாம் கட்டுக்கதைகளேயன்றி வேறு எவையுமில்லை.

    ஆனால் உண்மையில் முழு நிலவைக் காணும்போது உள்ளத்தில் எழும் உணர்வுகளுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.

    -துலாக்கோல் சோம. நடராஜன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பட்டை தீட்டப்படாத பாரம்பரிய அரிசி வகைகளை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு சர்க்கரை நோய் வராது.
    • ஒருவேளை உணவிற்கும் மறுவேலை உணவிற்கும் குறைந்தபட்சம் 4 மணிநேரம் இடைவெளி இருக்க வேண்டும்.

    இன்றைக்கு சர்க்கரை நோய் தான் பல பேரை பாடாய்படுத்தி வருகிறது. இதனை விரட்டியடிக்கும் எளிய கைமருந்து இதோ...

    வெந்தயம்- 50 கிராம்

    சீரகம்- 75 கிராம்

    மிளகு- 200 கிராம்

    மூன்றையும் ஒன்றாக சேர்த்து வாணலியில் மிதமான அனலில் சன்னமாக வறுத்து பொடி ஆக்கி ஒவ்வொரு வேலை உணவின்போதும் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிடுங்கள், சர்க்கரை நோய் உங்களை விட்டு போயே போய்விடும். இதனுடன் நாட்டு சர்க்கரையோ அல்லது கருப்பட்டியோ தேவையான அளவுக்கு சேர்த்து கலந்து சாப்பிடலாம்.

    பட்டை தீட்டப்படாத பாரம்பரிய அரிசி வகைகளை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு சர்க்கரை நோய் வராது. வந்த நோயும் ஓடிப் போய்விடும்.

    ஒருவேளை உணவிற்கும் மறுவேலை உணவிற்கும் குறைந்தபட்சம் 4 மணிநேரம் இடைவெளி இருக்க வேண்டும். அதுவும் பசித்து சாப்பிட வேண்டும். ரசித்து ருசித்து மென்று கூழாக்கி உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். இடையிடையே நொறுக்கு தீனி தின்பதும் தேநீர் அருந்துவதும் சர்க்கரை வருவதற்கு காரணமாக அமைகின்றது.

    எல்லா விடயங்களுக்கும் கவலைப்படுவது என்பது மிகப்பெரிய ஆபத்தை ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்துகின்றது. இதுவே எதிர்காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கும் காரணமாக அமைகின்றது.

    -மணிகண்டன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பனை மரம் பொதுவாக சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரும். ஆனாலும் அதை அவ்வளவு எளிதில் சாய்த்துவிட முடியாது.
    • பனை ஓலை விசிறிகள் உடல் நலத்துக்கு சிறப்பானது என்று மருத்துவர்கள் காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்.

    பனை மரத்தை நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். பனை மரத்தின் வேர் முதல் உச்சி வரை அனைத்து பாகங்களும் பயன்படும். இது தொடர்பாக நடத்தப் பட்ட ஒரு ஆய்வில் ஒரு பனை மரம் மனிதருக்கு 200-க்கும் மேற்பட்ட பலன்களை தருவதாக கண்டுபிடித்துள்ளனர்.

    பனை மரத்தில் இருந்து ஒருவருக்கு தேவையான அத்தனை அத்தியாவசிய பொருட்களும் கிடைப்பதால் தான் அதை கற்பக விருட்சம் என்று நம் முன்னோர்கள் அழைத்தனர். பனம் பழம், நுங்கு, பதனி, பனங்கிழங்கு, பனை ஓலை, கற்கண்டு, கருப்பட்டி, உத்திரகட்டை, முகூர்த்தகால் கட்டை, பாளை என்று பனை மரம் தரும் பலன்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

    பனை மரம் பொதுவாக சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரும். ஆனாலும் அதை அவ்வளவு எளிதில் சாய்த்துவிட முடியாது. ஒரு வலுவான பனை மரத்தை அடியோடு சாய்க்க வேண்டும் என்றால் ஒரு வாரம் புயல் வீசினால்தான் முடியும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    இப்படி எந்த அளவுக்கு பனை மரம் வலுவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது பலன்களை தந்துகொண்டே இருக்கும். எவ்வளவு பெரிய வறட்சியையும் தாங்கும் பனை மரங்கள் நிலத்தடி நீரை அதிகமாக தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.

    உலகில் 108 நாடுகளில் பனைமரங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தான் பனை மரங்கள் அதிகம் இருக்கின்றன. அதிலும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அதிக பனை மரங்களை காண முடியும்.

    ஒரு காலத்தில் 50 கோடிக்கும் மேல் பனை மரங்கள் இருந்தன. தற்போது 5 கோடி பனை மரங்கள் கூட இல்லை.

    கோடை காலத்தில் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் ஓலை மூலம் செய்யப்படும் விசிறிகள் மிகுந்த வரவேற்பை பெறும். பனை ஓலை விசிறிகள் உடல் நலத்துக்கு சிறப்பானது என்று மருத்துவர்கள் காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்.

    பனை ஓலை விசிறி மூலம் விசிறினால் சொக்க வைக்கும் சுகமான குளிர்ந்த காற்று கிடைக்கும். ஆதி காலத்தில் பனை ஓலை விசிறிகளை வைத்திருப்பதை அரசர்களும், பணக்காரர்களும் கவுரவமாக கருதினார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது அவர்கள் பனை ஓலை விசிறிகளை அதிகளவு பயன்படுத்தியது பல்வேறு வரலாற்று பதிவுகளில் உள்ளது.

    மின் விசிறிகள் புழக்கத்துக்கு வந்தபிறகு பனை ஓலை விசிறி பயன்பாடு 90 சதவீதம் குறைந்து போனது. என்றாலும், இன்றும் பனை ஓலை விசிறியை விரும்பி பயன்படுத்துபவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    தமிழகத்தில் திருத்தணி அருகே குறுமணி கிராமத்திலும், கடலூர் அருகே அண்ணவல்லி கிராமத்திலும் பனை ஓலை விசிறிகள் செய்வதை 5 தலைமுறையாக இன்றும் செய்து வருகிறார்கள். இத்தகைய கிராமத்தினர் மூலம் பனை ஓலை விசிறி நகர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை ஆகிறது.

    பனை ஓலை விசிறி தயாரிப்பவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 4 மாதங்கள்தான் அதிகமான ஓலை விசிறி செய்யும் மாதங்களாக இருக்கும். அந்த வகையில் தற்போது சென்னைக்கு பனை ஓலை விசிறி மிக அதிக அளவில் வந்துவிட்டது. கோயம்பேடு, அம்பத்தூர், மேடவாக்கம், வேளச்சேரி, பெருங்களத்தூர், திருவொற்றியூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பனை ஓலை விசிறி விற்பனை அமோகமாக நடக்கிறது.

    ஒரு பனை ஓலை விசிறி 100 ரூபாய் என்ற அளவுக்கு விற்பனை ஆகிறது. வண்ண மயமாக அலங்கரிக்கப்பட்ட விசிறிகள் அதிக விலைக்கு விற்பனை ஆகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணக்குபோட்டால் ஒரு பழங்குடி பெண் ஆயுளில் ஐம்பதே முறைதான் மாதவிலக்கை சந்திக்கிறார்.
    • வளர்ந்த நாடுகளில் இருக்கும் பெண்கள் ஆயுளில் 400 முறை மாதவிலக்கை சந்திக்கிறார்கள்.

    மர்ஜோரி ஸ்கோஸ்டாக் எனும் ஆய்வாளர் ஆப்பிரிக்காவின் காலஹாரி பகுதியில் உள்ள பூர்வகுடி பெண்களை சந்தித்து ஆய்வு மேற்கொண்டு "நிசா: ஒரு பழங்குடி பெண்ணின் வாழ்க்கையும், வார்த்தைகளும்" எனும் நூலை எழுதினார். அதில் அவர் குறிப்பிடுவதாவது..,

    "மாதவிலக்கு சமயம் வரும் பீரியட்ஸ் வலி என்றால் என்னவென்றே அந்த பெண்களுக்கு தெரியவில்லை. அவர்கள் உணவு மிக சத்தானதாக இருப்பதால் அவர்கள் மிக ஆரோக்கியமாக உள்ளனர். பெண்கள் 15- 16 வயதில் தான் வயதுக்கு வருகிறார்கள். வயதுக்கு வந்ததும் குறைந்த காலத்திலேயே கல்யாணம் ஆகி கர்ப்பமும் ஆகிவிடுகிறார்கள்.

    ஆனால் பிள்ளைக்கு நாலைந்து வயது ஆகும்வரை அவர்கள் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவதில்லை. இப்படி பிள்ளைக்கு நாலைந்து வயது வரை திட உணவை கொடுக்காமல் தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதால், அவர்களுக்கு பீரியட்ஸ் சுத்தமாக நின்றுவிடும். இயற்கையான கருத்தடை முறை.

    அதன்பின் மீண்டும் கர்ப்பம், மீண்டும் 10 மாதம் மாதவிலக்கு இல்லை, மீண்டும் தாய்ப்பால்...

    கணக்குபோட்டால் ஒரு பழங்குடி பெண் ஆயுளில் ஐம்பதே முறைதான் மாதவிலக்கை சந்திக்கிறார். அதனால் அவர்களுக்கு மாதவிலக்கு வலியானது விசயமாக இருப்பதில்லை. இதே வளர்ந்த நாடுகளில் இருக்கும் பெண்கள் ஆயுளில் 400 முறை மாதவிலக்கை சந்திக்கிறார்கள். 10 வயது முதல் 50 வயதுவரை ஓரிரு ஆண்டுகளை தவிர ஆயுளில் பெரும்பங்கு ஆண்டுகளில் அவர்களின் உடல் மாதவிலக்கு சமய ஹார்மோன்களை உற்பத்தி செய்து களைத்துவிடுகிறது. வலி தாங்க முடியாததாக மாறிவிடுகிறது. வளர்ந்த நாடுகளில் மார்பக புற்றுநோய் பெருமளவு வர இதுவும் ஒரு காரணம்.

    - நியாண்டர் செல்வன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொடிப்பசலையில் பச்சை மற்றும் சிவந்த நிறமுடைய தண்டுகளைக் கொண்ட வகைகள் உள்ளன.
    • சுண்ணச்சத்து, வைட்டமின்–ஏ , இரும்புச்சத்து, ஆக்ஸாலிக் ஆசிட், பெருலிக் ஆசிட், அமினோ அமிலங்கள் போன்றவை பசலையில் இருப்பதால், உணவு முறையில் சேர்த்து வர ஊட்டத்தைப் பரிசளிக்கும்.

    விரல்களுக்கு நிறத்தைக் கொடுக்க மருதாணி… முகத்தை பொலிவாக்க கற்றாழை… தோலில் உள்ள நுண்கிருமிகளை அழிக்க மஞ்சள்… அவ்வகையில் உதட்டிற்கு நிறத்தைக் கொடுக்க கொடிப்பசலை! கூடவே குளிர்ச்சிக்கு பெயர்போன கொடிப்பசலை தாவரத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைப்பது, இப்போதைய சுட்டெரிக்கும் வெயிலுக்கு உகந்ததாக இருக்கும்.

    கனிந்த கொடிப்பசலை பழங்களை விரல் நுனியில் சிதைத்து, 'லிப்-ஸ்டிக்' போல உதடுகளில் பூசிக்கொள்ள சிவந்த நிறத்தைக் கொடுக்கும். இப்போதிருக்கும் லிப்-ஸ்டிக் வகையறாக்களுக்கு பசலைப் பழங்களே முன்னோடி எனலாம். உணவுகளில் சேர்க்கப்படும் இயற்கை சாயத்திற்கு இதன் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    கொடிப்பசலையில் பச்சை மற்றும் சிவந்த நிறமுடைய தண்டுகளைக் கொண்ட வகைகள் உள்ளன. சுண்ணச்சத்து, வைட்டமின்–ஏ , இரும்புச்சத்து, ஆக்ஸாலிக் ஆசிட், பெருலிக் ஆசிட், அமினோ அமிலங்கள் போன்றவை பசலையில் இருப்பதால், உணவு முறையில் சேர்த்து வர ஊட்டத்தைப் பரிசளிக்கும்.

    இரும்புச் சத்து நிறைந்திருப்பதால் இரத்தவிருத்திக்கு உதவும். குறைவான கலோரிகளுடன் நிறைவான நுண்ஊட்டங்களை வழங்குவதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பசலை சிறந்த ஆயுதம்.

    குளிர்ச்சிக்கு உத்தரவாதம்:

    குளிர்ச்சித் தன்மையுடையதால், மழைக்காலங்களில் பசலைக் கீரையின் பயன்பாட்டினை குறைத்துக் கொள்வது நல்லது. கார்காலம் அல்லாத மற்றைய பெரும்பொழுதுகளில், இதன் இலைகளை பருப்பு சேர்த்து கடைந்து, மிளகு, சீரகம் சேர்த்து ருசியாக சாப்பிடலாம். வெப்ப நோய்களை உடனடியாக வேரறுக்கும் தன்மை பசலைக்கு இருக்கிறது.

    பசலைக்கீரையை புளி நீக்கி சமைத்து நெய் சேர்த்து சாப்பிட்டு வரலாம். ஆண்மையை அதிகரிப்பதற்கான இயற்கை ரெசிப்பி இது. முறையற்ற மாதவிடாயை ஒழுங்குப்படுத்த, பசலையின் வேரை அரைத்து, அரிசி கழுவிய நீரில் கலந்து பருகுவது ஒரிசா மக்களின் வழக்கம்.

    ஏப்ரல், மே மாதங்களில் உண்டாகும் வேனல்கட்டிகளுக்கு இதன் இலையை சிதைத்து கட்ட விரைவில் பலன்கொடுக்கும். வயிற்றுப் புண்ணை குணமாக்கும் தன்மை இருப்பதால் இதன் இலைச்சாறு ஒரு ஸ்பூனோடு, சிறிது வெண்ணெய் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.

    வெயிலில் சென்று வந்தவுடன் ஏற்படும் தலைவலிக்கு, இதன் இலைகளை அரைத்து நெற்றியில் பற்றுப் போடலாம். கசகசாவோடு பசலை இலைகள் மற்றும் அதன் தண்டுகளை சேர்த்தரைத்து, நெற்றியில் பூச நல்ல உறக்கத்தை உண்டாக்கும். பசலை இலைச் சாற்றை முகத்தில் பூசிவர முகம் பளபளப்படையும்.

    இதன் இலைகளையும் தண்டுகளையும் தண்ணீரிலிட்டு துழாவ, நீருக்கு குழகுழப்புத் தன்மை கிடைக்கும். குழகுழப்புத் தன்மையுடன் சூப் தயாரிக்க ஆசைப்படுபவர்கள், கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டண்ட் சூப் பவுடர்களுக்குப் பதிலாக, பசலை ஊறிய நீரை வைத்து, சூப் வகைகளை தயாரிக்கலாம்.

    பெரும்பாலான வீட்டு வேலிகளிலும் வீட்டிற்கு முன்பும் கொடியேறிக்கொண்டிருக்கும் 'மணி-ப்ளாண்ட்' எனும் அழகுத் தாவரத்திற்கு பதிலாக, பசலைக்கொடிக்கு வாய்ப்பு கொடுங்கள். அழகான செவ்விய/பசுமையான கொடி, உங்கள் கண்களுக்கு விருந்து படைக்க சரசரவென உருவெடுக்கும்.

    -டாக்டர்.வி.விக்ரம்குமார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேர்வு நேரங்களில் மாணவ-மாணவிகள் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.
    • நட்ஸ் மற்றும் உலர் பழங்களை வாங்கி வைத்துக் கொண்டு, ஆற்றல் தேவைப்படும் நேரங்களில் கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடலாம்.

    தேர்வு நேரத்தில் மாணவர்கள் உட்கொள்ளும் உணவு, தூங்கும் நேரம், மற்ற வழக்கங்களை முறையாக கடைபிடிக்காவிட்டால் நன்றாக படித்திருந்தாலும், சரியாக தேர்வு எழுதுவது கடினம். எனவே தேர்வு சமயங்களில் குழந்தைகளின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டியது பெற்றோர்களின் முக்கிய பொறுப்பாகும். ஏனெனில் தேர்வு நேரங்களில் குழந்தைகளுக்கு அதிகபடியான மன அழுத்தம் ஏற்படுகிறது.

    ஆரோக்கியமான உணவு நாள் முழுவதும் படிக்க அவர்களுக்கு போதுமான ஆற்றலைக் தருகிறது. குழந்தைகள் ஆரோக்கியமாக சாப்பிடும் போது, ஆர்வத்துடன் பாடங்களை கற்றுக்கொள்ள முனைகிறார்கள். தேர்வு காலத்தில் மாணவர்கள் தூங்கும் நேரம் உள்பட 24 மணி நேரமும் மூளை இயங்கிக் கொண்டே இருக்கும். மூளைக்கு தொடர்ச்சியான ஆற்றல் நீங்கள் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கிறது. எனவே தேர்வு நேரங்களில் மாணவ-மாணவிகள் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    நட்ஸ் மற்றும் உலர் பழங்களை வாங்கி வைத்துக் கொண்டு, ஆற்றல் தேவைப்படும் நேரங்களில் கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடலாம். வால்நட்ஸ், பாதாம், முந்திரி பருப்பு, கடலைப் பருப்பு, திராட்சை, பேரீட்சை போன்றவை நல்ல ஆற்றலை கொடுக்கும். மூளையின் செயல்திறனை அதிகரிக்க சத்து நிறைந்த கேரட், வெள்ளரிக்காய், ஊட்டி குட மிளகாய் (கேப்சியம்) போன்ற காய்கறிகளை சாப்பிடலாம். இனிப்புகள் சாப்பிடுவதைத் தவிர்த்து விட்டு பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அடிக்கடி தேவைப்படும் அளவுக்கு தண்ணீர் குடிப்பது அவசியம்.

    கூல்டிரிங்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தேர்வு அறைக்கு செல்வதற்கு சில மணி நேரம் முன்பாக போதுமான அளவு தண்ணீர் குடித்து விட வேண்டும். பிறகு இடைவெளி விட்டு விடுங்கள். தேர்வு நேரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டிய தேவையை இது உருவாக்காது. காலை உணவில் வாழைப்பழத்தைச் சேர்த்துக்கொள்வது அவசியம். தேர்வு எழுதும் மூன்று மணி நேரமும் தொடர்ந்து உட்கார்ந்து எழுதுவதால் ஏற்படும் கை, கால் சோர்வுக்குக் காரணம் பொட்டாசியம் சத்து குறைவுதான். அதை ஈடுகட்டும் சிறந்த உணவு எதுவென்று கேட்டால், அது வாழைப்பழமே.

    குறைந்த அளவு இனிப்புச்சுவை கொண்ட மாவுப்பொருட்கள் மற்றும் புரதப் பொருட்கள் சேர்ந்த உணவே சமச்சீரான காலை உணவு. அனைத்து சத்துகளும் சமஅளவு கொண்ட வெண் பொங்கல் மற்றும் கேழ்வரகுப் புட்டு, அவித்த பச்சைப்பயறு கலவை உடலுக்குத் தேவையான அதிக கலோரியைத் தொடர்ச்சியாக வழங்கும். தேர்வு காலங்களில் மட்டுமல்ல இயல்பான மற்றநாட்களிலும் மாணவ-மாணவிகள் ஆரோக்கியமான உணவுகளை உண்பது சிறந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print