search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் போலி ஆதார் மூலம் தரிசன டிக்கெட் பெற்ற 2 பக்தர்கள் கைது
    X

    திருப்பதியில் போலி ஆதார் மூலம் தரிசன டிக்கெட் பெற்ற 2 பக்தர்கள் கைது

    • திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
    • 400 போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் சுனில். இவரது நண்பர் குப்தா. இவர்கள் நேற்று சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்தனர். இவர்கள் டிக்கெட் பெறுவதற்காக போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி உள்ளனர். இதனை திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து தரிசனத்திற்கு வந்த சுனில் மற்றும் குப்தாவை விஜிலன்ஸ் அதிகாரிகள் கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இருவரும் சுப்ரபாத சேவை டிக்கெட்டை முன் பதிவு செய்வதற்காக 400 போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    போலி ஆதார் அட்டைகள் மூலம் இதுவரை எத்தனை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து தரிசனம் செய்துள்ளனர்.

    போலி ஆதார் அட்டை மூலம் தரிசன டிக்கெட் பெற்று வேறு நபர்களுக்கு விற்று மோசடியில் ஈடுபட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×