என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
பிரதமர் மோடிகிட்ட பேசியே ஆகணும்... மின்கம்பத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு
- சம்பவம் குறித்து கீதா காலனி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
டெல்லியின் யமுனா கதர் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கீதா காலனி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அந்த நபரை போலீசார் மற்றும் டெல்லி தீயணைப்பு துறையினர் பத்திரமாக கீழே இறக்கினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனிடையே இச்சம்பவம் குறித்து பேசிய தீயணைப்பு வீரர் ஒருவர், "உயர் அழுத்த கம்பி தூணில் வாலிபர் ஒருவர் ஏறியுள்ளதாக எங்களுக்கு தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது அவர், பிரதமர், முதல்வர், தலைமை நீதிபதியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார்," என்றார்.
அந்த நபர் வங்காளம் அல்லது பீகாரைச் சேர்ந்தவர் என்றும், ஆசிரியராகப் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது. மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்