search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி
    X

    பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி

    • பலியானவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் என தகவல்.
    • உயிரிழந்தவர்கள், கிஷ்த்வாரில் இருந்து வந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் தக்சும் பகுதியில் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

    பலியானவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள், கிஷ்த்வாரில் இருந்து வந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து காவல்துறை கூறுகையில், " ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பயணித்த டாடா சுமோ டக்சம் அருகே சாலையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது".

    விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×