search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு காஷ்மீர் எல்லை கண்காணிப்பில் அதி நவீன ட்ரோன்- வீடியோ
    X

    ஜம்மு காஷ்மீர் எல்லை கண்காணிப்பில் அதி நவீன ட்ரோன்- வீடியோ

    • பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய முடியும்.
    • எல்லை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட போதைபொருட்களும் கடத்தப்படுகிறது.

    ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல் அறிந்து இந்திய ராணுவ படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். சில சமயங்களில் பயங்கரவாதிகள் தலைமறைவாகி விடுகின்றனர்.

    இந்நிலையில், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறிவதற்காக அதி நவீன வசதி கொண்ட ட்ரோன்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கொண்டு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய முடியும்.

    அதி நவீன வசதி கொண்ட ட்ரோனை கொண்டு ஜம்மு காஷ்மீர் ராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளது.

    இதேபோல் எல்லை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட போதைபொருட்களும் கடத்தப்படுகிறது. இதனையும் அதி நவீன வசதி கொண்ட ட்ரோனை கொண்டு கண்காணிக்கப்பட உள்ளது.

    Next Story
    ×