search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருடப்போன வீட்டில் சாவகாசமாக பக்கோடா சுட்டு சாப்பிட்ட திருடர்கள்..
    X

    திருடப்போன வீட்டில் சாவகாசமாக பக்கோடா சுட்டு சாப்பிட்ட திருடர்கள்..

    • சாவகாசமாக சாப்பிட்டபடியும் சில சமயங்களில் பாத்ரூமில் சிகரெட் பிடித்த படியும் பாண் பீடா சாப்பிட்டு எச்சிலை துப்பியபடியும் திருடியுள்ளனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 24 மணி நேரத்துக்குள் நகரின் பல்வேறு வீடுகளில் புகுந்து திருட்டுக் கும்பல் ஒன்று லட்சக்கணக்கில்மதிப்புடைய நகைகள், பொருட்கள் மற்றும் பணத்தை சுருட்டிக்கொண்டு கம்பிநீட்டியுள்ளது.

    அந்த வகையில் பூட்டப்பட்ட வீடு ஒன்றுக்குள் கும்பலாக புகுந்த திருடர்கள், ப்ரிட்ஜில் உள்ளவற்றை எடுத்து பக்கோடா சமைத்து சாவகாசமாக சாப்பிட்டபடியும் சில சமயங்களில் பாத்ரூமில் சிகரெட் பிடித்த படியும் பாண் பீடா சாப்பிட்டு எச்சிலை துப்பியபடியும் திருடியுள்ளனர்.

    இதுபோலவே ஒரே பகுதியில் திருட்டு சம்பவம் நடந்த சுமார் 6 முதல் 7 வீடுகளில் ஒரே மாதிரியான முறையிலே திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ள்ளதை அடுத்தே போலீசார் அனைத்தையும் திருட்டுகளையும் செய்தது ஒரே கும்பல்தான் என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதற்கிடையில் போலீசில் சிக்காமல் மறைந்திருக்கும் பக்கோடா திருட்டுக் கும்பலால் நொய்டா மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    Next Story
    ×