என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 179 ரன்கள் சேர்த்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சவுத்தாம்ப்டன்:
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 59 ரன் எடுத்தார்.
மேத்யூ ஷாட் 41 ரன்னில் ஆட்டமிழ்ந்தார். ஜோஷ் இங்கிலிஸ் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன் 3 விக்கெட்டும், சாகிப் மஹ்மூத், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். லிவிங்ஸ்டோன் மட்டும் 37 ரன்கள் எடுத்தார். பிலிப் சால்ட் 20 ரன் எடுத்தார்.
இறுதியில், இங்கிலாந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் சீன் அபாட் 3 விக்கெட்டும், ஆடம் ஜாம்பா, ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்