search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
    X

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் இன்று நடந்தது.
    • இதில் இந்திய ஜோடி தென்கொரிய ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் தென் கொரியாவின் கிம் சோ யோங்-காங் யீ யாங் ஜோடியுடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 18-21 என இழந்த இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 21-19, 24-22 என போராடி வென்று தென் கொரிய ஜோடிக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கும் முன்னேறியது.

    Next Story
    ×