search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது செல்போன் வெடித்து இளைஞர் பலி
    X

    இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது செல்போன் வெடித்து இளைஞர் பலி

    • பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது.
    • விபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே செல்போன் வெடித்து இளைஞர் உயிரிழந்துள்ளார்.

    இளைஞர் ராஜா, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது.

    செல்போன் திடீரென வெடித்து சிதறியதில், இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி, கீழே விழுந்து இளைஞர் உயிரிழந்துள்ளார்.

    இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதைதொடர்ந்து, விபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×