search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாட்டு கேட்டது குத்தமா? ப்ளூடூத் ஹெட்போன் பயன்படுத்தியவருக்கு நேர்ந்த கதி
    X

    கோப்புப்படம் 

    பாட்டு கேட்டது குத்தமா? ப்ளூடூத் ஹெட்போன் பயன்படுத்தியவருக்கு நேர்ந்த கதி

    • திடீரென்று காதில் மாட்டி இருந்த புளூடூத் ஹெட் போன் வெடித்தது.
    • முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மாத்துக்கண்மாய் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு புளூடூத் மூலம் பாட்டு கேட்டு உள்ளார். திடீரென்று காதில் மாட்டி இருந்த புளூடூத் ஹெட் போன் வெடித்தது.

    இதனால் அவருக்கு காதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.


    'புளூடூத் ஹெட்போன்' மூலம் பாட்டு கேட்டபோது வெடித்து விவசாயியின் காதில் காயம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×