search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஊருக்குள் புகுந்து மளிகை கடையை உடைத்து அரிசியை ருசித்த ஒற்றை காட்டு யானை
    X

    ஒற்றை காட்டு யானை


    ஊருக்குள் புகுந்து மளிகை கடையை உடைத்து அரிசியை ருசித்த ஒற்றை காட்டு யானை

    • இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
    • ஒற்றை காட்டு யானை ஒன்று செம்மேடு கிராமத்திற்குள் புகுந்தது.

    பேரூர்:

    கோவை ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், நரசீபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    குறிப்பாக இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஊருக்குள் வரும் யானைகள் குடியிருப்புகள், கடைகளை சேதப்படுத்துவதோடு, விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு பயரிடப்பட்டிருக்கும் பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பூண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று செம்மேடு கிராமத்திற்குள் புகுந்தது.

    அங்கு நீண்ட நேரமாக சுற்றித்திரிந்த ஒற்றை யானை, அங்குள்ள தினகரன் என்பவரது மளிகைக் கடையின் முன் பகுதியை உடைத்து உள்ளே இருந்த இரண்டு 25 கிலோ அரிசி மூட்டைகளை வெளியே இழுத்து போட்டு தின்றது.யானை ஊருக்குள் புகுந்ததை அறிந்து அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போளுவாம்பட்டி வனத்துறையினர் விரைந்து வந்து, ஊருக்குள் புகுந்த யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு காட்டு யானை அங்கிருந்து வனத்தை நோக்கி சென்றது. வனத்தை விட்டு வெளியேறும் யானை கூட்டங்கள் அடிக்கடி குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்துகிறது.

    எனவே யானை நடமாட்டத்தை கண்காணித்து யானை ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×