search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் வருமான வரி சோதனை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் வருமான வரி சோதனை

    • வருமான வரி சோதனை நடைபெறும் வளாகத்தில் கலை, அறிவியல், பல் மருத்துவம், பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
    • கல்லூரி தாளாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எளையாம்பாளைத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

    வருமான வரி சோதனை நடைபெறும் வளாகத்தில் கலை, அறிவியல், பல் மருத்துவம், பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தனியார் கல்லூரி வளாகத்தில் காலை முதலே வருமான வரி சோதனை நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    குமாரமங்கலத்தில் உள்ள கல்லூரியின் தாளாளர் கருணாநிதியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

    வரி ஏய்ப்பு செய்த புகாரின் பேரில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×