search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஏரி, குளங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்- கலெக்டர் எச்சரிக்கை
    X

    ஏரி, குளங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்- கலெக்டர் எச்சரிக்கை

    • மின்கம்பம் போன்றவற்றில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்.
    • அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி வருகிறது. இதேபோல செங்கல்பட்டு மாவட்டத்திலும் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் பொதுமக்கள் கனமழையின்போது ஏரி, குளங்களுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,

    பொதுமக்கள் யாரும் கனமழையின்போது ஆறு, குளங்கள், ஏரி போன்ற ஆழமான நீர் நிலைகள் உள்ள பகுதிக்கு செல்லவேண்டாம். மின்கம்பம் போன்றவற்றில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம். அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம். மழைவெள்ள பாதிப்பு குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 044-27427412,044-27427414, வாட்ஸ்அப்-9444272345 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×