search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கோவையில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்
    X

    கோவையில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்

    • தமிழகத்தில் ஓருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
    • கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

    கோவை:

    வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

    இது புயலாக மாறுவதால் இதற்கு 'டானா' புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டானா புயல் வடக்கு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று ஒடிசா மாநிலம் பூரி-மேற்குவங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாகி மாறி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். அதேபோல், கனமழையால் ஒன்னிபாளையம் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே பாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்பட்டன.

    Next Story
    ×