search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கொலையில் ஈடுபட்டவர்கள் மீது சர்வதேச நீதிமன்ற சட்டத்தின் கீழ் விசாரணை: வங்கதேசம் இடைக்கால அரசு
    X

    கொலையில் ஈடுபட்டவர்கள் மீது சர்வதேச நீதிமன்ற சட்டத்தின் கீழ் விசாரணை: வங்கதேசம் இடைக்கால அரசு

    • வங்கதேச போராட்ட வன்முறைக்கு 500-க்கும் மேற்பட்டோர் பலி.
    • ஐ.நா.-வின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த முயற்சி மேற்கொள்ளும் இடைக்கால அரசு.

    வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பின்னர் வன்முறையாக வெடித்தது. இதன்காரணமாக இடஒதுக்கீட்டை ரத்து செய்ய அரசு சம்மதம் தெரிவித்தது.

    என்றாலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டமும் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அவர் கடந்த 5-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகும் வன்முறை கட்டுக்குள் வரவில்லை. அவரின் அவாமி லீக் கட்சி தலைவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அக்கட்சியை சேர்ந்தவர்கள், மைனாரிட்டிகள் தாக்கப்பட்டனர்.

    இதனால் ஷேக் ஹசீனா பதவி விலகியதற்குப்பின் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த வன்முறையில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்ததால் நோபல் பரிசு வென்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. முகமது யூனுஸ் வங்கதேசம் மீண்டும் அமைதி நிலைக்கு திரும்ப முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் வன்முறையின்போது கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சட்ட ஆலோசகர் டாக்டர் ஆசிஃப் நஸ்ருல் கூறும்போது "போராட்ட வன்முறை தொடர்பாக ஐநா-வின் மேற்பார்வையில் விசாரணை நடத்துவதற்கான முயற்சியை இடைக்கால அரசு மேற்கொண்டுள்ளது. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 5-ந்தேதி வரை நடைபெற்ற கொலைகள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரணை நடத்த முயற்சி செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×