என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
அடுத்த மாதம் பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி இந்தியா வருகிறார்?
- பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
- பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் மந்திரி கவாஜா ஆசிப் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இஸ்லாமாபாத்:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, இந்தியா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிரிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உள்ள நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு அடுத்த மாதம் (ஏப்ரல்) டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் மந்திரி கவாஜா ஆசிப் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் கூட்டத்தில் ஆசிப் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் நட்புறவை விரும்புவதாகவும், இதனால் மந்திரி ஆசிப் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்