search icon
என் மலர்tooltip icon

    சவுதி அரேபியா

    • தொலைத்தொடர்பு நிறுவனத்தில் டவர் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வந்தார்.
    • சவுதி அதிகாரிகள் இருவரையும் சடலங்களாக மீட்டனர்.

    சவுதி அரேபியாவில் டவர் டெக்னீஷியனாக பணிபுரியும் தெலுங்கானாவைச் சேர்ந்த 27 வயதான ஷாபாஸ் கான், கடந்த மூன்று ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள கான் அல் ஹாசா பகுதியில் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் டவர் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வந்தார்.

    இவர் 5 நாட்களுக்கு முன்பு சக ஊழியருடன் வழக்கமான வேலைக்காக புறப்பட்டார். பணிதொடர்பாக, ஷாபாஸ் மற்றும் சக ஊழியர் ஜிபிஎஸ் உதவியுடன் காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

    அப்போது, ஜிபிஎஸ்-ல் ஏற்பட்ட கோளாறால் இருவரும் ரூபா அல்-காலி பாலைவனத்தின் நடுவே சிக்கிக் கொண்டனர். அவர்கள் சென்ற காரில் எரிபொரும் தீர்ந்துவிட்டது.

    அவர்கள் வைத்திருந்த செல்போனில் சிக்னலும் இல்லை. இதனால், வெளியே யாரையும் தொடர்புக் கொள்ள முடியவில்லை.

    உண்ண உணவு, குடிக்க தண்ணீர் இன்றி வெயிலில் 5நாட்களாக தவித்த ஷாபாசும், சக ஊழியரும் உலகின் மிக ஆபத்தான பாலைவனங்களில் ஒன்றான ரூபா அல்-காலி பாலைவனத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

    பாலைவனத்தில், ஒட்டகங்கள் உள்பட மனித வாழ்விடம் மற்றும் வனவிலங்குகள் இல்லாததால், தொலைந்து போன இருவருக்கும் உதவி தேடவோ அல்லது நிலப்பரப்பில் செல்லவோ முடியாத சூழல்.

    இருவர் காணாமல் போனதாக அவர்களது நிறுவனம் புகார் தெரிவித்த பிறகு, சவுதி அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இறுதியில், சவுதி அதிகாரிகள் இருவரையும் சடலங்களாக மீட்டனர்.

    • இறுதிப்போட்டியில் ரொனால்டோவின் அல் - நாசர் அணி அல்- ஹிலால் அணியுடன் பலப்பரீட்சை செய்தது.
    • தோல்வியடைந்த விரக்தியில் ரொனால்டோ செய்த கையசைவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியானது நேற்று நடைபெற்ற நிலையில் ரொனால்டோவின் அல் - நாசர் அணி அல்- ஹிலால் அணியுடன் பலப்பரீட்சை செய்தது. விறுவிறுப்பாக நடந்த போட்டியின் 44 வது நிமிடத்தில் கோல் அடித்து ரொனால்டோ அல்- நாசர் அணியின் ஆட்டதை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் சென்றார்.

    ஆனால் அதைதொடர்நது மைதானம் அல்- ஹிலால் வசம் சென்றது. ஆட்டத்தின் 55 வது நிமிடத்தில் அல்- ஹிலால் அணி வீரர் செர்ஜி மிலின்கோவிக் கோல் ஒன்றை விளாசி புள்ளிப் பட்டியலை சமன் செய்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 63 மற்றும் 69 வது நிமிடத்தில் அல் ஹிலால் வீரர் அலெக்சாண்டர் மித்ரோவிசிக் 2 அடுத்தடுத்து கோல்களை விளாசினார்.

    இறுதியாக ஆட்டத்தின் 72 வது நிமிடத்தில் அல்- ஹிலால் வீரர் மால்கம் ஒரு கோல் ஸ்கோர் செய்தார். இதன் மூலம் 4-1 என்ற கோல் கணக்கில் அல்- ஹிலால் அணி ரொனால்டோவின் அல்- நாசர் அணியை தோற்கடித்து கோப்பையைத் தட்டிச் சென்றது.

    உலகக்கோப்பை வென்ற மெஸ்ஸி ஸ்டைலில் அல்-ஹிலால் அணி கேப்டன் சலீம் அல் - தாஸ்ரி  [Salem Al-டவ்சரி] கோப்பையை பெற்றுகொள்ள கொண்டாட்டங்கள் களைகட்டியது. இதற்கிடையில் தோல்வியடைந்த விரக்தியில் எல்லாரும் தூங்கிறார்கள், எல்லாம் முடிந்தது என்ற தோரணையில் மைதானத்தில் ரொனால்டோ செய்த கையசைவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனது 542 கிலோ எடையை குறைத்து 63 கிலோ எடையுள்ள நபராக அவர் மாறியுள்ளார்.
    • படுத்த படுக்கையாகி இருந்த அவர், இப்போது 63 கிலோவுடன் சகஜமாக நடமாட தொடங்கியுள்ளார்.

    உலகின் அதிக எடையுள்ள மனிதராக இருந்த காலித் பின் மொஹ்சென் ஷாரி தனது எடையை பெருமளவில் குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

    610 கிலோ எடை வரை இருந்த அவர், தற்போது 542 கிலோ எடையை குறைத்து 63 கிலோ எடையுள்ள நபராக மாறியுள்ளார்.

    சவூதி அரேபியாவின் முன்னாள் மன்னர் அப்துல்லாவின் உதவியால் ஷாரிக்கு எடையை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் உணவுக் கட்டுப்பாடு மற்றும் போதுமான உடற்பயிற்சியால் அடுத்த 6 மாதங்களில் தனது எடையில் பாதியை அவர் குறைத்தார்.

    அவரது மருத்துவக் குழு வழங்கிய தீவிர சிகிச்சை மற்றும் பிசியோதெரபி ஆகியவை அவரது எடை குறைப்பிற்கு உதவிகரமாக அமைந்தது.

    அதிக எடை காரணமாக படுத்த படுக்கையாகி இருந்த அவர், இப்போது 63 கிலோவுடன் சகஜமாக நடமாட தொடங்கியுள்ளார்.

     

    • அப்துல் ரஹீமுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
    • அப்துல் ரஹீமுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் நிதியுதவி வழங்கினார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோடம்புழா பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் கடந்த 2006-ம் ஆண்டு சவுதி அரேபியா நாட்டுக்கு வேலைக்கு சென்றார். ரியாத்தில் ஹவுஸ் டிரைவர் விசாவில் சென்று வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு 26 வயது.

    அங்கு ஒரு தம்பதியின் நடக்கமுடியாத நிலையில் இருந்த 15 வயது மாற்றுத்திறனாளி மகனை பராமரித்து வந்தார். இந்நிலையில் காரில் சென்றபோது அந்த சிறுவனை அப்துல் ரஹீம் கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதனடிப்படையில் அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டார்.

    சிறுவனின் கொலை தவறுதலாக நடந்தது என்று அப்துல் ரஹீம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அவர் சவுதி அரேபியா சிறையில் அப்துல் ரஹீம் அடைக்கப் பட்டார். கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் பொது மன்னிப்பு வழங்க மறுத்ததால் அப்துல் ரஹீமுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

    அவர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தற்போது வரை 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். அப்துல் ரஹீமை மீட்க அவரது பெற்றோர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். சிறுவனின் பெற்றோர் மன்னித்தால் அப்துல் ரஹீமை விடுவிக்கலாம் என்று கோர்ட்டு தெரிவித்தது.

    அப்போது மகன் இறப்புக்கு இழப்பீடு செய்யும் வகையில் 'பிளட் மணி' என்ற வகையில் ஒன்றரை கோடி ரியால் (இந்திய மதிப்பில் ரூ34 கோடி) வழங்கினால் மன்னிக்க தயாராக இருப்பதாக சிறுவனின் பெற்றோர் கூறினர். அந்த தொகையை கடந்த ஏப்ரல் 16-ந்தேதிக்குள் ரூ.34 கோடியை வழங்கினால் அப்துல் ரஹீம் உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவானது.

    ஆனால் அவ்வளவு பெரிய தொகையை அப்துல் ரஹீமின் குடும்பத்தினரால் திரட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்துல் ரஹீமை காப்பாற்ற தேவையான நிதியை திரட்ட சமூக சேவகர்கள் களமிறங்கினர். உலகம் முழுவதும் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் நிதியுதவி வழங்கினார்கள்.

    இதன்மூலம் ரூ.34 கோடி வசூல் ஆனது. அந்த தொகை சவுதி அரேபியா கோர்ட்டில் குறிப்பிட்ட நாளுக்குள் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அப்துல் ரஹீம் விடுதலையாகும் சூழல் உருவானது. அவரது குடும்பத்தினர் வழங்கிய ரூ.34 கோடி கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது.

    அந்த பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள், அப்துல் ரஹீமை மன்னிக்க தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து அப்துல் ரஹீமுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்படுவதாக ரியாத் குற்றவியல் நீதிமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    மரணதண்டனை ரத்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டதால் சவுதி அரேபியா சிறையில் இருந்து அப்துல் ரஹீம் விடுதலையாகிறார். 18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர் நாளை விடுதலை செய்யப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போதுமான தங்குமிடம் அல்லது வசதியின்றி நேரடி சூரிய ஒளியின் கீழ் நீண்ட தூரம் நடந்துள்ளனர்.
    • அனுமதி இல்லாமல் மெக்காவுக்கு வந்த 1,40,000 யாத்ரீகர்கள் உள்பட 5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    ரியாத்:

    சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு புனித பயணம் செல்வதை முஸ்லிம் மக்கள் தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதுகின்றனர்.

    இதனால் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் மெக்கா, மதீனாவுக்கு 'ஹஜ்' புனித பயணம் செல்கின்றனர். அதன்படி இந்தாண்டு ஹஜ் பயணமாக மெக்காவில் சுமார் 18 லட்சம் முஸ்லிம்கள் குவிந்தனர்.

    இதனிடையே இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக மெக்காவில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.

    இதனால் ஹஜ் பயணம் சென்ற பலர் வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.

    இந்நிலையில் சவூதி அரேபியாவில் வெப்ப அலை காரணமாக 1300 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளதாக சவுதி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் பகத் அல் ஜலாஜெல் கூறும்போது,

    ஹஜ் பயணம் சென்ற யாத்ரீகர்கள் இறப்பு எண்ணிக்கை 1,301-ஐ எட்டி உள்ளது. 83 சதவீதம் பேர் ஹஜ் பயணம் செய்ய பதிவு செய்யப்படாதவர்கள். போதுமான தங்குமிடம் அல்லது வசதியின்றி நேரடி சூரிய ஒளியின் கீழ் நீண்ட தூரம் நடந்துள்ளனர்.

    வெப்ப அலையின் ஆபத்துகளில் இருந்து யாத்ரீகர்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்ள முடியும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

    அனுமதி இல்லாமல் மெக்காவுக்கு வந்த 1,40,000 யாத்ரீகர்கள் உள்பட 5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.

    இந்த ஆண்டு 1.8 மில்லியன் யாத்ரீகர்கள் ஹஜ் பயணத்தில் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டைப் போலவே, 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளனர் என்று சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இந்த ஆண்டும் யாத்ரீகர்கள் வருகையால் மெக்கா நகரம் நிரம்பி வழிகிறது.
    • மெக்காவில் கடும் வெப்ப அலை வீசி வருவதால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக கூறியுள்ளார்.

    மெக்கா:

    முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.

    ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டும் யாத்ரீகர்கள் வருகையால் மெக்கா நகரம் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டவர்களில் 645 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    உயிரிழந்தவர்களில் 323 பேர் எகிப்தியர்கள், 60 பேர் ஜோர்டானியர்கள், 68 பேர் இந்தியர்கள் என்று சவுதி நாட்டு தூதர் தெரிவித்துள்ளார். மெக்காவில் கடும் வெப்ப அலை வீசி வருவதால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக கூறியுள்ளார்.

    • மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது.
    • வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மெக்கா:

    முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.

    ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெக்காவில் குவிந்துள்ளனர். இதனால் மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட 550 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் எகிப்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த திங்களன்று மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸை எட்டியதாக சவுதி தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
    • பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மெக்கா:

    முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.

    ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெக்காவில் குவிந்துள்ளனர். இதனால் மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர் மற்றும் ஈரானைச் சேர்ந்த 5 என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் புனிதப் பயணம் வந்துள்ள 2,760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாரதாரத்துறை அமைச்சர், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த ஆண்டு சுமார் 1.8 மில்லியன் முஸ்லிம்கள் பங்கேற்கும் வருடாந்திர புனித யாத்திரையின் போது வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டியுள்ளது.

    • சோதனை ஓட்டத்தில் மிட் நைட் ரக விமானம் மணிக்கு 360 கி.மீ வேகத்தில் வானில் பறந்து சென்றது.
    • பறக்கும் டாக்சி சேவையில் அபுதாபி-துபாய் இடையே பயண நேரம் 10 முதல் 20 நிமிடமாக குறையும்.

    அபுதாபி:

    அமீரகத்தில் போக்குவரத்து மேம்பாட்டுக்காகவும், மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையிலும் பல்வேறு முயற்சிகள், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நாடு முழுவதும் வரும் காலக்கட்டங்களில் பறக்கும் டாக்சியை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எரிபொருளை சேமிக்கவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

    இதில் தற்போது துபாயை தொடர்ந்து அபுதாபியில் அமெரிக்காவின் ஆர்ச்சர் நிறுவனத்தின் மிட் நைட் ஏர் கிராப்ட் என்ற விமானம் அபுதாபியில் பறக்கும் டாக்சியாக இயக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது முதற்கட்டமாக அபுதாபி மாநகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத்துறை ஒத்துழைப்பில் மிட் நைட் ஏர் கிராப்ட் விமானம் வெற்றிகரமாக வானில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    இந்த விமானம் மேற்புறம் மற்றும் பக்கவாட்டில் சுழலும் இறக்கைகளை வைத்துள்ளதால் ஹெலிகாப்டர் போல செங்குத்தாக நின்ற இடத்தில் இருந்தே மேலெழும்பி பறக்க முடியும். அதேபோல் விமானம் போன்று நேராக செல்லக்கூடியது ஆகும். நேற்று நடந்த சோதனை ஓட்டத்தில் மிட் நைட் ரக விமானம் மணிக்கு 360 கி.மீ வேகத்தில் வானில் பறந்து சென்றது. இந்த விமானத்தை பயணிகள் மட்டுமல்லாமல் சரக்குகளை ஏற்றி செல்லவும் பயன்படுத்த முடியும். பறக்கும் டாக்சி போக்குவரத்துக்கான ஆதரவை அபுதாபி முதலீட்டு அலுவலகம் அளித்துள்ளது.

    அடுத்த ஆண்டில் (2025) அறிமுகம் செய்யப்படும் பறக்கும் டாக்சி சேவையில் அபுதாபி-துபாய் இடையே பயண நேரம் 10 முதல் 20 நிமிடமாக குறையும். நகருக்குள் மட்டும் செல்ல 350 திர்ஹாமும், வெளியூர்களுக்கு செல்ல 800 முதல் 1,500 திர்ஹாம் வரையும் கட்டணங்கள் விதிக்கப்படலாம் என ஆர்ச்சர் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி நிகில் கோயல் தெரிவித்துள்ளார். 4 பேர் பயணம் செய்யும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் படிப்படியாக கட்டணங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது என மேலும் அவர் தெரிவித்தார்.

    • மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது.
    • பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் இருந்து 4,200 பாலஸ்தீனியர்கள் சவூதி அரேபியா சென்றுள்ளனர்.

    மெக்கா:

    முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.

    ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து இதுவரை 15 லட்சம் பேர் மெக்காவில் குவிந்துள்ளனர். இதனால் மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    இதுகுறித்து சவூதி அரேபிய அதிகாரிகள் கூறும்போது, கடந்த 11-ந்தேதி வரை 15 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவுக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு 18 லட்சம் பேர் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டனர். அதைவிட இந்த ஆண்டு யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். புனித யாத்திரை நாளை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது என்றனர்.

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின்ஹமாஸ் அமைப்புக்கு இடையே 8 மாதங்களாக நீடித்து வரும் போர் காரணமாக, காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள முடியவில்லை. அதேவேளையில் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் இருந்து 4,200 பாலஸ்தீனியர்கள் சவூதி அரேபியா சென்றுள்ளனர்.

    • பெனால்டி ஷூட்டை தவற விட்டு தோற்றதால் மனமுடைந்து மைதானத்திலேயே ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
    • ரொனால்டோ அழும் காட்சிகளே தற்போது இணையத்தை நிறைந்துள்ளன.

    கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபிய அணியின் கேப்டனாக சவுதி ப்ரோ லீக் தொடரில் அவ்வணியை திறமையாக வழிநடத்தி பைனல்ஸ் வரை அழைத்து வந்தார். அதன்படி நேற்று (மே 31) சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் உள்ள கிங் அப்துல்லா மைதானத்தில் வைத்து நடந்த கிங் கப் சவுதி லீக் தொடரின் இறுதிப்போட்டியில் அல்- ஹிலால் அணியை ரொனால்டோவின் அல்- நாசர் அணி எதிர்கொண்டது.

    இந்த போட்டியில் இறுதிவரை போராடிய அல்- நாசர் அணி பெனால்டி ஷூட்டை தவறவிட்டதன் மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் அல்- ஹிலால் அணியிடம் தோற்றது. இந்நிலையில் பெனால்டி ஷூட்டை தவற விட்டு தோற்றதால் மனமுடைந்து மைதானத்திலேயே ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

    ரொனால்டோ அழும் காட்சிகளே தற்போது இணையத்தை நிறைந்துள்ளன. அவர் அழும் வெடியோவைப் பகிர்ந்து அவருக்கு நெட்டிசன்களும் ரொனால்டோ ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    கால்பந்து விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டவரான ரொனால்டோ தோல்விக்காக கண்ணீர் விட்டு அழுத்தத்தில் ஆச்சர்யம் இல்லை என்று கூறும் நெட்டிசன்கள், கிரிக்கெட்டை போல் வணிக லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் ரொனால்டோ போன்ற உண்மையான வீரர்கள் எப்போதும் முன்னுதாரணமாக திகழ்கின்றனர் என்று கருத்து கூறி வருகின்றனர்.

    முன்னதாக லீக் தொடரில் அல் நசர் அணி, அல் இத்திஹாத் அணியுடன் மோதிய போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதி முடிவதற்கு முன் ஒரு கோல், ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் மற்றொரு கோல் என இரண்டு கோல்களை ரொனால்டோ அடித்தார். இதன் மூலம் இந்த சீசனில் 35 கோல்களை அடித்து, ஒரே சீசனில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • வீடியோக்களில் பெண்கள் உரிமைக்கு ஆதரவாக மனகல் அல்-ஒடய்பி பேசி வருவதாக புகார்கள் எழுந்தது.
    • போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் அமெரிக்காவுக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

    ரியாத்:

    சவுதி அரேபியாவை சேர்ந்தவர் மனகல் அல்-ஒடய்பி. சமூக வலைத்தள பிரபலமான இவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.

    இந்தநிலையில் அவர் தன்னுடைய வீடியோக்களில் பெண்கள் உரிமைக்கு ஆதரவாக பேசி வருவதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் அமெரிக்காவுக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து மனகல் அல்-ஒடய்பி மீது பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் பேரில் அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அவரை தேடப்படும் குற்றவாளியாக சவுதி அரேபியா கோர்ட்டு அறிவித்துள்ளது.

    ×