search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • தைராய்டு சுரப்பி ஒவ்வொருவரின் கழுத்திலும் பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும்.
    • கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள்.

    குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வளவு பேருக்கு இந்த தைராய்டு பிரச்சனை இருக்கும்? தைராய்டு பிரச்சனை குழந்தையின்மைக்கு வழி வகுக்குமா?

    பொதுவாக குழந்தையின்மையால் பாதிக்கப்படுகிற 15 சதவீதம் பெண்களில், கிட்டத்தட்ட 6 முதல் 22 சதவீதம் வரையிலான பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கும்.


    தைராய்டு பிரச்சனை இருக்கும் பெண்களில் கிட்டத்தட்ட 60 முதல் 65 சதவீதம் பெண்களுக்கு குழந்தையின்மை ஏற்படும். ஒருவேளை அவர்கள் கருத்தரித்தால் கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே குழந்தையின்மை சிகிச்சையில் தைராய்டு ஹார்மோன் பரிசோதனை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக தைராய்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    தைராய்டு தாக்கம் அனைத்து செல்களையும் பாதிப்பதால் கண்டிப்பாக குழந்தை பேறுக்கு தைராய்டு பரிசோதனை மிக முக்கியமானதாகும்.


    தைராய்டு சுரப்பி என்பது ஒவ்வொருவரின் கழுத்திலும் பட்டாம்பூச்சி போன்ற வடிவத்தில் இணைக்கப்பட்ட 2 மடல்களை கொண்டுள்ளது. அந்த தைராய்டு சுரப்பியில் இருந்துதான் தைராய்டு ஹார்மோன் சுரக்கிறது.

    இந்த தைராய்டு ஹார்மோன் நமது உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகளில் பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன் சினைப்பையிலும் செயல்பாடுகளை ஊக்குவித்து கருமுட்டைகள் முதிர்ச்சி அடைவதற்கு உதவுகிறது.

    கருமுட்டைகளின் மேல் கிரானுலோசா என்ற செல் இருக்கும். அந்த கிரானுலோசா செல்கள்தான் கருமுட்டையின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்கை வகிக்கிறது. அதன் மூலமாகத்தான் அனைத்து ஹார்மோன்களும் அந்த கருமுட்டையின் செயல்பாடுகளை ஊக்குவித்து முட்டையின் வளர்ச்சி, முட்டையின் முதிர்ச்சி ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைகிறது.

    இதற்காக கிரானுலோசா செல்கள் மற்றும் கருமுட்டையை சுற்றியுள்ள அனைத்து செல்களிலும் தைராய்டு ஏற்பி காணப்படும். இந்த தைராய்டு சுரப்பியானது அந்தந்த செல்களில், அதனுடைய செயல்பாடுகளை ஊக்குவித்து அந்த கருமுட்டைகளை நன்றாக வளர்ச்சி அடைய வைக்கும் பணிகளை செய்கிறது.

    எனவே தைராய்டு குறைவாக இருக்கும் பெண்களுக்கு கருமுட்டைகளை சுற்றியுள்ள செல்களில் இருக்கும் தைராய்டு சுரப்பியில் சரியான செயல்பாடு இருக்காது. இதனால் கருமுட்டைகளின் வளர்ச்சி, முதிர்ச்சி ஆகியவை சீராக அமையாது.


    தைராய்டு பரிசோதனையை கண்டிப்பாக செய்ய வேண்டுமா? அதை எப்படி கணக்கிடுவது?

    குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்கள் கண்டிப்பாக தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

    இந்த தைராய்டு பரிசோதனையில் உங்களுக்கு இருக்கும் தைராய்டு அளவானது டி.எஸ்.எச். (தைராய்டு தூண்டுதல் ஹார்மோன்) என்ற வகையில் கணக்கிடப்படுகிறது.

    இந்த டி.எஸ்.எச். அளவானது குறிப்பாக எல்லா பெண்களுக்கும் 3.5 ஆக இருக்கிறது. இது சரியான அளவுதான் என்பார்கள்.

    ஆனால் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு இந்த அளவை விட கொஞ்சம் குறைவாகத்தான் உயர் நிலையை கணக்கிடுவோம். ஏனென்றால் டி.எஸ்.எச். அளவானது 3 முதல் 3.5 வரை இருக்கும் பெண்களுக்கு கூட இந்த குறைபாடுகளால் கருமுட்டைகளின் தரம், கருமுட்டைகளின் கருத்தரிக்கும் தன்மை ஆகியவை குறைவாகிறது.

    குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்களில் தைராய்டு பிரச்சனை உள்ள 20 சதவீதம் பெண்களுக்கு தைராய்டு அளவு குறைவாக இருப்பதை இந்த வகையில் தான் நாம் கண்டுபிடிக்க முடியும்.

    கருமுட்டை வளர்ச்சிக்கான ஹார்மோன்களில் ஒன்றான கோனோ டோட்ரோபின் மூளையில் உள்ள ஹைப்போதலாமசில் இருந்து சுரக்கிறது. இந்த ஹார்மோனும் தைராய்டு பிரச்சனை ஏற்படுவதில் முக்கியமான பங்கை வகிக்கிறது.

    ஏனென்றால் இதில் இருந்து வருகிற ஹார்மோன் மூளையில் உள்ள தைராய்டின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் போது தைராய்டு ஹார்மோன் அளவு குறைகிறது.

    தைராய்டு அளவு குறைவானால் தானியங்கி முறையில் தைராய்டு அளவை சரி செய்வதற்காக நமது மூளையில் இருந்து ஒரு சிக்னல் வரும். இதை தைரோட்ரோபின் ரிலீசிங் ஹார்மோன் என்று சொல்வோம்.

    இந்த தைரோட்ரோபின் ரிலீசிங் ஹார்மோன் ஹைபோதலாமசில் செயல்பட்டு தைராய்டு சிமுலேட்டிவ் ஹார்மோனை சுரக்கும். அதோடு சேர்த்து புரோலாக்டின் என்ற ஹார்மோனையும் அதிகரிக்கும்.

    இந்த புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாகும் போது, அதுவும் முட்டையின் வளர்ச்சிக்கு பாதகமாக அமைகிறது. தைராய்டு குறைவாக இருக்கும் நிலையில், புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாகும் போது, மறைமுகமாக இது கோனோ டோட்ரோபின் ஹார்மோன் சுரப்பை பாதிக்கிறது.

    இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குழந்தை பேறு பெறுவதில் பலவிதமான சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனால் குறிப்பாக கரு முட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.


    கருமுட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டால் மாதவிலக்கு தள்ளித் தள்ளி வரும். சில பெண்களுக்கு மாதவிலக்கு வரவே வராது. சில நேரங்களில் மாதவிலக்கு அதிகமாக போகும்.

    இந்த மாதிரியான பலவித குறைபாடுகளால் கருமுட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். கருமுட்டைகள் சரியாக வளரவில்லை என்றால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும். சில நேரங்களில் முட்டைகளில் கரு உருவானால் கூட இந்த குறைபாடுகளால் கருவின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு கருச்சிதைவு, குறைபாடுள்ள குழந்தை மற்றும் குறைவான எடை கொண்ட குழந்தை பிறக்கும்.

    குழந்தையின்மை சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு தைராய்டு பாதிப்புகளை சரி செய்வதற்கும், அவர்கள் ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுப்பதற்கும் வழிமுறைகள் உள்ளன. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன.
    • நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கல் ஏற்படக்கூடும்.

    நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், `டயபரம்' என்ற ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல்.

    உங்கள் விரும்பமோ, தேவையோ இல்லாமல் உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி தானாகவே நடக்கும் செயல்பாடுதான் விக்கல். அதாவது, அனிச்சைசெயல்.

    நாம் சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது.

    சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.

    சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் 'விக்... விக்...' என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் 'விக்கல்'.

    விக்கல் நமது உடலுக்கு தேவையான பயனுள்ள ஒன்றுதானா என்றால், `இல்லை' என்பதுதான் பதில். பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் நின்றுவிடுகின்றன. ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அது நீடிப்பது மிகக் குறைவே.

    அவ்வாறு விக்கல் ஏற்படும்போது, பொதுவாக ஒருவர் நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கல் ஏற்படக்கூடும். குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை.

    ஆனால், சிலருக்கு சில நாட்கள் வரை விக்கல் விட்டுவிட்டு தொடரலாம். இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும். அப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் நல்லது.

    • பேஸ்மேக்கர் எப்படி பொருத்துகிறார்கள் தெரியுமா?
    • இதயத்துடிப்பு குறைவாக இருப்பவர்களுக்கு பொருத்தக்கூடிய ஒரு கருவி ஆகும்.

    பேஸ் மேக்கர் சிகிச்சை என்பது இதயத்துடிப்பு குறைவாக இருப்பவர்களுக்கு பொருத்தக்கூடிய ஒரு கருவி ஆகும். இது ஒரு சிறிய தீப்பெட்டி அளவில் இருக்கும் மெட்டல் கருவி ஆகும். ஒரு மனிதனின் இதயம் 60-ல் இருந்து 100 என்ற அளவில் இருக்கும். இதுவே ஓடும் போதோ உடற்பயிற்சி செய்யும் போதோ அதிகமாக இருக்கும்.


    இதேபோல் இதயத்துடிப்பு 32-ல் இருந்து 30 வரையிலான இதயத்துடிப்பு இருப்பவர்களுக்கு பேஸ் மேக்கர் மிகவும் அவசியம். இவர்களுக்கு பேஸ் மேக்கர் சிகிச்சை செய்யப்படுகிறது.

    இதயநோயாளிகள் பேஸ்மேக்கர் சிகிச்சை பொருத்தியதாக சொல்வதை கேள்வி பட்டிருப்போம். பேஸ்மேக்கர் எப்படி பொருத்துகிறார்கள் தெரியுமா?

    ஆஞ்சியோகிராமுக்கு செய்வது போல கையில் உள்ள சிரையின் மூலமோ கழுத்து எழும்பின் பின் உள்ள சிரையின் மூலமோ ஒரு மெல்லிய குழாய் வழியாக மின் இணைப்பு கம்பியை இதயத்தின் மேல் அறைகளின் தடுப்பு சுவரை தொடும்படியாகவோ அல்லது வலதுபுற கீழறையின் மூலையிலோ பொருத்துவார்கள். இதன் வெளிநுனியை தீப்பெட்டி அளவிலான பேட்டரியுடன் பொருத்துவார்கள்.

    நோயாளி ஆண் என்றால் அவரது கழுத்து எலும்புக்கு கீழ் தோலுக்கடியிலும், பெண்ணாக இருந்தால் மேல் வயிற்று தோலுக்கு அடியிலும் பொருத்தப்படும்.

    இதயத்துக்கு தேவையான மின்சக்தியை தேவையான நேரத்தில் செலுத்தும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு நோயாளி வீடு திரும்புவார். இதனை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    இந்த கருவியானது இதயத்தை மீண்டும் சரியாக துடிக்கும்படி மின் தூண்டலை ஏற்படுத்துகிறது. ஈசிஜி மெஷினில் இணைத்து பதிவுகளை காகிதத்தில் வரைபடமாக பெறலாம்.


    அதேபோல் இந்த பேஸ்மேக்கர் பேட்டரியின் ஆயுள் இவற்றையும் சரிபார்க்க முடியும். சாதாரணமாக பேட்டரியின் ஆயுள் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும். ஆனால் ஒவ்வொருவரின் இதயத்தின் மின்தூண்டல் தேவையை பொறுத்து அதிகமாக வேலை செய்தால் குறையலாம்.

    பேட்டரி ஆயுள் குறையும் போது சிறிய அறுவை சிகிச்சை மூலம் பழைய பேட்டரியை அகற்றிவிட்டு புதிய பேட்டரியை பொருத்த முடியும்.


    மேலும் பேஸ்மேக்கர் பொருத்தியவர்கள் ஏதாவது நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, மாரடைப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது மாரடைப்பு வர சாத்தியக்கூறுகள் இருப்பதாக பரிசோதனைகள் மூலம் கண்டறிந்தாலோ தவிர மற்றவர்கள் மாதிரி இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.

    ஆனால் ஒரு முக்கியமான விஷயம் பேஸ்மேக்கர் பொருத்தியவர்கள் எக்காரணம் கொண்டும் தப்பித்தவறிக்கூட காந்த சக்தி உள்ள பொருட்களின் அருகில் செல்லக்கூடாது.

    இந்த கருவி பொருத்தப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் ஒரு சான்றிதழ் தருவார்கள் அதை பயணங்களின் போது கூடவே வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் பயணங்களின் போது பரிசோதனை செய்ய பயன்படுத்தப்படும் மெட்டல் டிடெக்டர் கருவி சோதனை செய்யாமல் இருப்பதற்கு இந்த சான்றிதழ் உதவும்.

    ஆனாலும் இது வயதானவர்களுக்கே அதிகமாக தேவைப்படுகிறது. 

    • உணவை ஜீரணிக்க அதிக ரத்தம் தேவைப்படுகிறது.
    • மதிய உணவுக்கு பிறகு மூளைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது.

    மதிய உணவுக்கு பிறகு தூக்கம், மந்தம் மற்றும் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும். இதனை உணவு கோமா என்று அழைப்பார்கள். மதிய வேளையில் தூக்கம் ஏன் வருகிறது என்பதற்கான காரணங்களில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


    மதியம் உணவு சாப்பிட்ட பிறகு பலருக்கும் தூக்கம் வருவதை போன்ற உணர்வு ஏற்படும். அதோடு செரிமான அமைப்பிற்கு உணவை ஜீரணிக்க அதிக ரத்தம் தேவைப்படுகிறது. மதிய உணவுக்கு பிறகு மூளைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது. மதிய உணவுக்கு பிறகு நாம் மந்தமாக இருக்கவும், தூக்கம் வரவும் இது தான் காரணம்.

    உணவு உட்கொண்ட உடனேயே செரிமான செயல்முறைகளால் ரத்த சர்க்கரை அளவில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படுகிறது. இதனால் உண்ட மயக்கம் ஏற்படுகிறது.


    மேலும் காலை உணவை தவிர்த்துவிட்டு நேரடியாக மதிய உணவை உண்பவர்களுக்கு தான் அதிக அளவில் இந்த மந்தமான உணர்வு ஏற்படும். அளவுக்கு அதிகமான உணவை உண்பதால் செரிமானம் ஆக நேரம் எடுக்கும். எனவே மதிய உணவுக்கு பிறகு உடலில் சோர்வு ஏற்படும்.

    ஆகவே காலை நேரத்தில் முழு தானியப்பொருட்கள், ஓட்ஸ், பிரவுன் ரொட்டி, முட்டை மற்றும் பழங்களை சாப்பிடுவது உடலில் சோர்வு ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

    • வயிற்றில் இருந்தும், சிறுகுடலில் இருந்தும் விரைவாக உறிஞ்சப்படுகிறது.
    • மனச்சோர்வு, பதற்றம் அல்லது நரம்பு பதற்றத்தை உருவாக்குகிறது.

    ஆல்கஹால் என்ற சொல் 'அல்குஹ்ல்' என்ற அரபு வார்த்தையிலிருந்து வந்தது. தற்போது மது வகைகள் அனைத்தும் ஆல்கஹால் எனப்படுகிறது. ஆல்கஹாலின் வீரியத்தை அது உடலுக்குள் சென்ற பின் ஏற்படுத்தும் விளைவுகளை வைத்து அறிந்து கொள்ள முடியும்.


    வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படும் ஆல்கஹால் விரைவாக உறிஞ்சப்படுகிறது. இதற்கு காரணம் இது அதிக கொழுப்பில் கரையக் கூடியது மற்றும் உடலின் தசைகளில் விரைவாக பரவக்கூடியது. குறிப்பாக வயிற்றில் இருந்தும், சிறுகுடலில் இருந்தும் விரைவாக உறிஞ்சப்படுகிறது.

    உதாரணமாக 60 மி.லி. ஆல்கஹாலை வெறும் வயிற்றில் சில நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டால், ஒன்று முதல் 1½ மணி நேரத்திற்குள் ரத்தத்தில் கலந்து விடும். மேலும் 6 முதல் 8 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக ரத்தத்தில் இதன் தன்மை நீடித்து காணப்படும்.

    ஆல்கஹாலின் மிக முக்கியமான பாதிப்பு மத்திய நரம்பு மண்டலத்தில் காணப்படுகிறது. இது மத்திய நரம்பு மண்டலத்தை ஆக்கிரமிக்கும் போது மனச்சோர்வு, பதற்றம் அல்லது நரம்பு பதற்றத்தை உருவாக்குகிறது.

    ஒரு வித தூக்க கலக்கம், மந்தமான பேச்சு, மன குழப்பம், நிலையற்ற நடை, இரட்டை பார்வையை ஏற்படுத்துகிறது. உடல் மூளையின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் உடல் மன ஒருங்கிணைப்பு இழப்பு ஏற்படுகிறது.

    மது குடித்ததும், ஆல்கஹால் வயிறு வழியாக ரத்த ஓட்டத்தில் சேரும். ஒரு நபர் குடிக்கும் மதுவில் 20 சதவிகிதம் வயிற்றின் வழியாக ரத்த ஓட்டத்தில் வேகமாக உறிஞ்சப்படுகிறது. மேலும் 80 சதவிகிதம் ஆல்கஹால் சிறுகுடலால் உறிஞ்சப்படுகிறது.


    ஆல்கஹால் ரத்த ஓட்டத்தை அடைந்தவுடன், அது கல்லீரலுக்குச் சென்று வளர்சிதை மாற்றமடைகிறது. ஆல்கஹால் மூலக்கூறுகளை உடைக்கும் நொதிகளைக் கல்லீரல் உற்பத்தி செய்கிறது.

    வளர்சிதை மாற்றமடையாத (மெட்டபாலிசம் ஆகாத) ஆல்கஹால் உடலில் மீதம் இருக்கும். எஞ்சிய அனைத்தும் வியர்வை, சிறுநீர் மற்றும் உமிழ்நீர் மூலம் உடலை விட்டு வெளியேறுகிறது.

    பொதுவாக, ஆல்கஹால் உடலில் பசியின்மை, கல்லீரல் சிதைவு, இரைப்பை, அமில சுரப்பை அதிகரித்து அழற்சியை அதிகரிக்கிறது. கடுமையான கணைய அழற்சியும் நாளடைவில் ஏற்பட்டு உடலின் பல்வேறு செயல்பாடுகளும் பாதிக்கும் நிலையை உருவாக்குகிறது. மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்பது இதனால் தான்.

    • இறுக்கமாக அழுத்தக்கூடிய காலுறைகளை அணிந்து கொள்ளுங்கள்.
    • ஒரே நிலையில் தொங்கப் போட்டுக் கொண்டு வரக்கூடாது.

    ஒரே இடத்தில் தொடர்ந்து நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால், அல்லது கால்களைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தால், கால்களிலுள்ள ரத்தக்குழாய்களில் அழுத்தம் அதிகமாகிறது. இதனால் ரத்தக் குழாய்களிலிருந்து, நீர் வெளியே வந்து, சுற்றியிருக்கும் திசுக்களில் கொஞ்சம் கொஞ்சமாக சேருகிறது. இப்படித்தான் கால் வீக்கம் ஏற்படுகிறது.


    அதிக உடல் எடை, நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பது அல்லது அமர்ந்திருப்பது, இறுக்கமான காலுறைகள், ஜீன்ஸ் பேண்ட் நீண்ட நேரம் அணிந்திருப்பதாலும் காலில் நீர் சேரலாம்.

    இதுதவிர சிறுநீரகம், இதயத் தசைகள் பாதிப்பு, புற்றுநோய் சிகிச்சை மருந்துகளின் பக்க விளைவு, காலிலுள்ள ரத்தக் குழாய்கள் மூலம் இதயத்துக்கு ரத்தம் வந்து சேருவதில் பிரச்சினை, ஹார்மோன் பிரச்சனை, நிணநீர் மண்டல பாதிப்பு, சிறுநீரக வடிகுழாய்களில் பிரச்சினை, கர்ப்ப காலம், நுரையீரல் ரத்தக் குழாய்களில் அதிக ரத்த அழுத்தம், கால்களிலுள்ள ரத்தக் குழாய்களில் ரத்தக் கட்டி அடைப்பது, அதிக உப்புள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, காலில் ஏதாவது புண், மூட்டு வீக்கம் இருப்பது, சோடா, குளிர்பானங்கள் அடிக்கடி அதிகமாகக் குடிப்பது போன்ற பல காரணங்களினால் கால்களில் வீக்கம் ஏற்படுவதுண்டு.

    பயணத்தின் போது காலில் வீக்கம் வராதிருக்க, அதிக உப்பு சேர்த்த உணவுப் பொருட்களைத் தொடவே வேண்டாம். காலை நன்றாக, இறுக்கமாக அழுத்தக்கூடிய காலுறைகளை அணிந்து கொள்ளுங்கள். கால்களை ஒரே நிலையில் தொங்கப் போட்டுக் கொண்டு வரக்கூடாது.

    நிறைய காய்கறிகள், பழங்கள், தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். சோடா, சிப்ஸ், குளிர்பானங்களை தவிர்க்கவும்.


    வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கால்களை தூக்கி தலையணை மீதோ அல்லது மேஜை மீதோ வைத்துக் கொள்ளவும். ஏதாவது ஒரு வழியில் கால்களை ஆட்டிக் கொண்டே இருங்கள்.

    'கால் ஆட்டியாவது காஞ்சிபுரத்தில் போய் பிழைத்துக் கொள்ளலாம்' என்று தறி நெய்யும் வேலைக்காக சொல்வதுண்டு. இது அன்றைய பழமொழி. 'கால் ஆட்டிக்கொண்டே இருந்தால், கால் வீக்கம் இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம்'- இது இன்றைய புதுமொழி.

    பகலில் கால்கள் வீங்குவதும், இரவு தூங்கி காலையில் எழுந்தால், கால் வீக்கம் சுத்தமாக வடிந்து விடுவதும் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் கால் வீக்கம் 3 நாட்கள் கழித்தும் வடியவில்லை என்றால் உடனே உங்கள் குடும்ப டாக்டரைச் சந்திக்கவும்.

    • சிறுநீரகம் இதனை வடிகட்ட இயலாமல் பலவீனம் அடையும்.
    • சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும்.

    டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து மாத்திரைகளை கடைகளில் நேரடியாக வாங்கி பயன்படுத்துவது மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.


    இன்றைக்கு, காய்ச்சல், தலைவலி என்று வந்துவிட்டால் உடனே கடையில் சில மாத்திரைகளை வாங்கி எடுத்துக்கொள்வது எந்த மாதிரியான விளைவுகளை உருவாக்கும் என்பதை பார்க்கலாம்.

    இதுபோன்ற மாத்திரைகள் வலி மற்றும் காய்ச்சலை உடனடியாக குறைக்கும். ஆனால் சில நேரங்களில் உடலில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகள் அல்லது அழற்சி நோய்கள் போன்ற தீவிர நிலைகளின் அறிகுறிகளை மறைத்துவிடும். இதனால், உடலில் ஏற்பட்டுள்ள உண்மையான பாதிப்பை கண்டறிய முடியாமல் சரியான சிகிச்சை பெற முடியாது போகும்.


    இதுபோன்ற மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தினால் சிறுநீரகம் இதனை வடிகட்ட இயலாமல் பலவீனம் அடையும். அதில் உள்ள வேதிப்பொருட்கள் சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். இது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும்.

    இந்த வகை மாத்திரைகளின் தொடர் பயன்பாடு சில நேரங்களில் தோல் மற்றும் நுரையீரல் அழற்சிக்கு காரணமான எபிடெர்மல் நெக்ரோலிஸ் என்ற தீவிரமான நோய் அறிகுறிகளை ஏற்படுத்தும். இந்த வகை பாதிப்பு ஏற்பட்டால் அது உயிருக்கு ஆபத்தான நிலையாக கருதப்படுகிறது.

    ஹெபடைடிஸ் அல்லது சிரோசிஸ் போன்ற கல்லீரல் நோய்கள் இருந்தால், டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் எக்காரணம் கொண்டும் மருந்துகளை பயன்படுத்தக்கூடாது.


    சில வகை மாத்திரைகள் ஆல்கஹாலுக்கு மோசமான எதிரியாகும். அது போன்ற மாத்திரைகளை தாமாக கடைகளில் வாங்கி உட்கொண்டு, மது அருந்துவது கல்லீரல் பாதிப்பை தீவிரமாக்கும். இதன் தொடர் விளைவு கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடியும்.

    • குளுட்டன் நிறைந்த உணவுகள் மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும்.
    • பசும்பாலில் உள்ள புரோட்டீன் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

    மூல நோய் என்பது ஆசனவாய் மற்றும் கீழ் மலக்குடலில் உள்ள வீங்கிய நரம்புகளைக் குறிப்பிடும் ஒரு மருத்துவ நிலை.


    மூலம் நோய் ஆபத்தானவை அல்ல. இருப்பினும், இது கடுமையானது மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடியது. இந்த பைல்ஸ் பிரச்சனைக்கு முக்கிய காரணம் மலச்சிக்கல். இந்த மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனித்தால், பைல்ஸ் பிரச்சனையை குணப்படுத்தலாம்.

    சில உணவுகள் மலச்சிக்கலை உண்டாக்கி மூல நோய் பிரச்சனையை தீவிரப்படுத்தும். அந்த உணவுகளைத் தவிர்த்து வந்தாலே, பைல்ஸ் வராமல் தடுக்கலாம்.


    குளுட்டன் உணவுகள்

    குளுட்டன் அதிகம் நிறைந்த உணவுகள் மலச்சிக்கல் மற்றும் மூல நோய் பிரச்சனையை உண்டாக்கும். இந்த குளுட்டன் கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் அதிகம் காணப்படுகிறது.

    குளுட்டன் சிலருக்கு ஆட்டோ இம்யூன் நோய்க்கு வழிவகுப்பதோடு, சிலருக்கு நோயெதிர்ப்பு அமைப்பு செரிமானத்தை கடுமையாக சேதப்படுத்துகிறது. இது மலச்சிக்கலைத் தூண்டி பின்னர் மூல நோயை உண்டாக்கும்.


    பசும்பால் அல்லது பால் பொருட்கள்

    சிலருக்கு பசும்பால் அல்லது பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் பிரச்சனையை உண்டாக்கும். ஏனெனில் பசும்பாலில் உள்ள புரோட்டீன் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

    மேலும் இது பல ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் பசும்பாலுக்கு பதிலாக சோயா பாலை பயன்படுத்தலாம்.


    மாட்டிறைச்சி

    மாட்டிறைச்சியை சாப்பிடுவதும் பைல்ஸ் நோயை உண்டாக்கலாம். ஏனெனில் மாட்டிறைச்சியில் மிகவும் குறைவான அளவில் நார்ச்சத்து உள்ளது மற்றும் இதில் கொழுப்பு அதிகமாக உள்ளது. ஆகவே மாட்டிறைச்சியை உட்கொண்டால், அது எளிதில் ஜீரணிக்காமல், உடலில் அப்படியே தேங்கி, மலச்சிக்கலை ஏற்படுத்தும். ஆகவே தான் பைல்ஸ் நோயாளிகள் மாட்டிறைச்சியை அறவே தொடக்கூடாது.


    வறுத்த உணவுகள்

    எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால், அது பைல்ஸ் பிரச்சனையை வரவழைக்கும். ஏனெனில் மாட்டிறைச்சியைப் போலவே, இந்த உணவுகளிலும் நார்ச்சத்து குறைவாகவும், கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளன. ஆகவே வறுத்த உணவுகளுக்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.


    ஆல்கஹால்

    ஆல்கஹால் உடலில் நீரின் அளவைக் குறைத்து, நீரிழப்பை ஏற்படுத்தும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அது மலச்சிக்கலை தீவிரமாக்கும். மலச்சிக்கல் தீவிரமாக இருந்தால், நீண்ட காலமாக மலம் எளிதாக வெளியேறாமல் அதிக அழுத்தம் மலக்குடலுக்கு கொடுக்கப்பட்டு, தீவிர பைல்ஸ் நோயை ஏற்படுத்தும். ஆகவே ஆல்கஹாலை அறவே தவிர்க்க வேண்டும்.

    • தமனிகளை விரிவுபடுத்துவதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி பயன்படுத்தப்படுகிறது.
    • தமனிகளுக்குள் உருவாகியிருக்கும் ரத்த உறைகட்டிகளை அகற்றுகிறது.

    ஆஞ்சியோபிளாஸ்டி என்பது, இதயத்திலுள்ள அடைப்புகளை நீக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு டிரான்ஸ் கதீட்டர் செயல்முறையாகும். லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி என்பது, ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளுக்குள் உருவாகியிருக்கும் ரத்த உறைகட்டிகள் மற்றும் அடைப்புகளை ஆவியாக்கி அகற்றுவதற்கு லேசர் அலைக்கற்றைகளை (அதிக ஆற்றல் உள்ள புறஊதா வெளிச்சத்தை) உமிழ்கின்ற ஒரு சிறப்பு கதீட்டரை பயன்படுத்துகிறது.


    இந்த மேம்பட்ட இதய சிகிச்சை தொழில்நுட்பமானது, அடைப்புகளைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு ஏற்படக்கூடிய சேதத்தைக் குறைப்பதுடன் குறிப்பிட்ட இலக்குகளுக்கு மட்டும் சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.

    குறிப்பாக, சிக்கலான புண்களுக்கு அல்லது கால்சியம் படிமங்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இது அதிக பலனளிப்பதாக உள்ளது.

    ஆஞ்சியோபிளாஸ்டி என்பது அடைக்கப்பட்ட தமனிகளை திறக்க பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான அறுவை சிகிச்சை முறையாகும். ரத்தம் இதயத்தின் வழியாக சரியாக பாயவில்லை அல்லது இதய தமனிகளில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் இதயம் சுருக்கப்படுகிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுகிறது.

    இதற்கு சிகிச்சை அளிக்க ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சையில் தமனிக்குள் ஒரு சிறிய ஸ்டெண்ட் செருகப்பட்டு ஒரு பலூன் வடிகுழாய் உயர்த்தப்படுகிறது.


    ஆஞ்சியோபிளாஸ்டி தமனிகளில் உள்ள அடைப்பை அகற்றவும், குணப்படுத்தவும் செய்யப்படுகிறது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கரோனரி தமனிகளில் அடைப்பு அல்லது மாரடைப்பு ஏற்பட்டால் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் டெண்ட் தேவைப்படுகிறது.

    மேலும் நோயாளிகளின் அடைக்கப்பட்ட தமனிகளை விரிவுபடுத்துவதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி பயன்படுத்தப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை இதயத்திற்கு ஏற்படும் சேதத்தை குறைக்க பயனுள்ளதாக இருக்கிறது.

    ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்கு பிறகு நோயாளிகள் சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். தினசரி யோகா செய்வது, சத்தான உணவுகளை உட்கொள்வது கொழுப்பின் அளவை பராமரிப்பது போன்றவை ஆகும்.

    • புகையிலை பழக்கம் மிக முக்கிய காரணம் ஆகும்.
    • தொண்டை வறட்சியான நிலை ஒரு மாதங்களுக்கு மேல் நீடிப்பது.

    வாய் வழி புற்றுநோயானது தொண்டைக்குள் உள்ளே இருக்கும் செல் அணுக்களில் காணப்படும் வீரியமிக்க நோய் தொற்று அல்லது புற்றுநோய் செல்கள் காரணமாக ஏற்படும் நோயாகும். இவை சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் இருப்பின் உயிர்க்கு ஆபத்தானதாகும்.


    வாய் வழிபுற்றுநோய் அறிகுறிகள் பெரும்பாலும் முதிர்ந்த நிலையில் குறிப்பாக நோய் பரவும் நிலையிலேயே கண்டறியப்படுகின்றன. இவை சாதாரண தொண்டை அலர்ஜி அல்லது வாய் புண்கள் போல இருப்பது ஆகும்.

    வாய் புற்றுநோய் இந்திய அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்நோயை எளிதில் கண்டறிந்து தடுக்க முடியும் என்றாலும், பெரும்பாலும் முற்றிய நிலையில்தான் கண்டறியப்படுகிறது. இதன் விளைவாக இறப்பு அதிகரிக்கிறது. உதடுகள், நாக்கு, அன்னம், வாயின் தளம், ஈறுகளை இந்நோய் பாதிக்கிறது.

    ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் தோராயமாக 17 சதவீதம், பெண்களில் 10.5 சதவீதம் பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இந்திய அளவில் ஆண்டுதோறும் சுமார் 46 ஆயிரம் பேர் வாய் புற்றுநோய் பாதிப்பால் மரணம் அடைவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


    இந்நோய் ஏற்பட புகையிலை பழக்கம் மிக முக்கிய காரணம் ஆகும். ஏறத்தாழ 47.9 சதவீதம் ஆண்கள், 20.3 சதவீதம் பெண்கள் பல்வேறு வடிவங்களில் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.

    வயது வந்தவர்களில் 24.3 சதவீத ஆண்கள் மற்றும் 2.9 சதவீத பெண்கள் புகைக்கிறார்கள் என கூறப்படுகிறது. 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிடையே புகையிலை பயன்பாடு 6.9 முதல் 22.5 சதவீதம் வரை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    வறுமை, பசி, இயலாமை மற்றும் மனச்சோர்வு போன்றவைக்காக, 10 வயது வரை உள்ள சிறுவர்கள் கூட புகையிலை, பீடி, சிகரெட் பழக்கத்துக்கு மாறி வருவதாகவும் உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.


    அறிகுறிகள்:

    * வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற தொற்றுகள் 3 வாரங்களுக்கு மேல் தொண்டையில் இருப்பது.

    * தொண்டை வறட்சியான நிலை ஒரு மாதங்களுக்கு மேல் நீடிப்பது.

    * வாய், தொண்டையில் புணள் 3-ல் இருந்து 4 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து ஆறாமல் இருப்பது.

    * தொண்டை குழு அல்லது வாயினுள் கட்டி அல்லது அசாதாரண கட்டி போன்ற அமைப்பு காணப்படுவது.

    * காரணம் இன்றி பற்கள் வலுவிழந்து விழுவது.

    * தொடர் தொண்டை வலியினால் உணவை விழுங்குவதில் பிரச்சனை.

    * பேசுவதில் சிரமம்.

    * உதடு, தொண்டை, நாக்கு காது, கழுத்து பகுதியில் வலி இருப்பின் அதனை கவனிக்காமல் இருக்க கூடாது. அதற்கான காரணங்களை உடனடியாக அறிந்து ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது அவசியம்.

    • அன்றாட நடைமுறையில் சில மாற்றங்களை செய்து கொள்வதும் மிகவும் அவசியம்.
    • சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

    பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இதயநோய் மீண்டும் தாக்கும் அபாயத்தை தடுக்கவும், மீண்டும் தங்களின் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பவும், அன்றாட நடைமுறையில் சில மாற்றங்களை செய்து கொள்வதும் மிகவும் அவசியம்.


    அறுவை சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய முதல் வாரம் உங்களது அன்றாட வேலைகளை பழையபடி தொடர்வது முக்கியம். சிலநேரங்களில் ஒரு சிறு வேலைகூட உங்களை களைப்படையச் செய்யும். மூச்சு விடுவதற்கு சிரமமாகத் தெரியலாம். ஆனால் இது சாதாரணமான விஷயம் தான்.

    நீங்கள் களைப்பாக இருப்பதாக உணர்ந்தால் மீண்டும் உங்களது தினசரி வேலைகளை செய்வதற்கு முன்னாள் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். 4 முதல் 8 வாரத்தில் உங்களது இயல்பான நிலை மீண்டும் திரும்பும்.

    உங்களது அன்றாட தினசரி வேலைகளுக்கு இடையே சற்று ஓய்வு எடுப்பது முக்கியம். அன்றாட வேலைகளும், உடற்பயிற்சிகளும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு முக்கியமானதாக இருந்தாலும் சரியான வேலைக்கும், அதிகப்படியான வேலைக்கும் இடையே சிறிய வித்தியாசம் உள்ளது.


    உங்கள் தினசரி வேலைகளை திட்டமிடுவது போல் அவ்வப்போது இடை இடையே ஓய்வெடுக்கவும் திட்டமிடுதல் அவசியம். இரவில் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவது அவசியம் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். முதல் சில வாரங்கள் தினமும் பகலில் ஒரு குட்டி தூக்கம் தூங்கலாம்.

    அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆஸ்பத்திரியில் உடற்பயிற்சி செய்து இருப்பீர்கள். உடற்பயிற்சி செய்வது உடல் பலத்தை மேம்படச் செய்ய உதவுகிறது. உங்களது இதயத்தின் பலத்தை அதிகரிக்கச் செய்வதுடன் எதிர்காலத்தில் இதயநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கவும் உதவும்.


    நடைபயிற்சி செய்வதற்கு சமதள இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். தையல்களை பிரித்த பிறகு பூங்காவிலோ அல்லது வீட்டு வளாகத்திலோ நடைபயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்யும் போது வெளிப்படுத்தும் சக்தியின் விகிதாச்சாரம் உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

    • சிறுநீரகம் சம்பத்தப்பட்ட நோய்களுக்கு சுரைக்காய் ஒரு நல்ல மருந்து.
    • உடலில் உள்ள கெட்ட உப்புகள் அனைத்து சிறுநீரகத்தின் வழியே வெளியேறிவிடும்.

    பல நேரங்களில் சுரைக்காயில் உப்பு இல்லை என்று பலர் கூறுவதை கேள்விபட்டிருப்போம். இதற்கு சுரைக்காயில் உப்பு இல்லை என்று அர்த்தம் இல்லை. உண்மையில் அர்த்தம் வேறு.

    சுரைக்காய் என்பது உடல் நலத்திற்கு மிகுந்த நன்மை தரும் காய்களிகளில் ஒன்று. சுரைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட உப்புகள் அனைத்து சிறுநீரகத்தின் வழியே வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


    சிறுநீர் கோளாறு இருப்பவர்கள் சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் விரைவில் குணமாவார்கள். சிறுநீரகம் சம்பத்தப்பட்ட நோய்களுக்கு சுரைக்காய் ஒரு நல்ல மருந்து.

    சுரைக்காய் உடலில் உள்ள கெட்ட உப்புச்சத்துக்களை வெளியே தள்ளிவிடுவதால் தான் சுரைக்காயை சாப்பிட்டால் உடலில் உப்புச் சத்து இருக்காது என்பதையே சுரைக்காயில் உப்பு இல்லை என்று கூறுகின்றனர்.

    சுரைக்காயை வேகவைத்தோ, பொரியல் செய்தோ அல்லது சாம்பார் வடிவத்திலோ, ஜூஸ் செய்தோ சாப்பிடலாம். இதன்மூலம் அனைத்துவிதமான சிறுநீரக கோளாறும் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


    சுரைக்காயின் பயன்கள்:

    * சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு உடல் சூடு குறையும்.

    * சுரைக்காயில் வைட்டமின் பி சி சத்துக்கள் உள்ளன. நீர்ச்சத்து 96. 07 % , இரும்பு சத்து 3. 2 %, தாது உப்பு 0. 5 % பாஸ்பரஸ் 0. 2 % புரதம் 0. 3 % கார்போ ஹைட்ரேட் 2. 3 % போன்ற சத்துக்களை கொண்டுள்ளது சுரைக்காய்.

    * சுரைக்காயின் சதை பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச் சாற்றை சேர்த்து பருகி வர சிறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய நோய்களுக்கு சிறந்தது.

    * அஜீரண கோளாறு உள்ளவர்கள் சுரைக்காய் சாப்பிடலாம். கோடைக் காலத்தில் சுரைக்காய் சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.


    * கை கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைப் பகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.

    * நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

    * வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப் பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.

    * சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.

    * மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை சிறுநீர் வழியாக வெளியேறும். சுரையின் இலைகளை நீர்விட்டு ஊற வைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம் பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம்.

    * சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுத்து உடலை வலுப்படுத்தும்.

    * சுரைக்காயின் மகிமையை விதை ஒன்று போட சுரை என விளையும் என்ற பழமொழி மூலம் அறியலாம்.

    ×