என் மலர்
பொது மருத்துவம்
- ஹார்மோன் குறைவினால் மாதவிடாய் தாமதம் ஏற்படும்.
- அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில் தான் வெளியில் தெரிகிறது.
மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் மாதவிடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு.
இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான். சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சினை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல சிகிச்சையளிக்க வேண்டும்.
காரணம்:
இந்த நோய்க்கான காரணத்தை அறுதியிட்டு கூற முடியாது. பருவமடைந்த பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் ஏற்படலாம். ஆனால் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில் தான் வெளியில் தெரிகிறது. மரபணு மூலமாக, பரம்பரை பரம்பரையாக கூட வரலாம். அதேபோல ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பது, டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரப்பது, புரோலாக்டின் அதிகரிப்பது தான் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இதனை அன்றாடம் நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே வராமல் தடுக்க முடியும்.
வைட்டமின்கள்:
பெண்களின் கருமுட்டை உற்பத்திக்கு தேவைப்படும் சக்திகளில் முதன்மையானது வைட்டமின் டி. கருப்பை கோளாறுகள் வருவதற்கான காரணங்களில் 65 முதல் 85 சதவீதத்தினர் வைட்டமின் டி குறைப்பட்டினால் தான் ஏற்படுகிறது. இதனால் வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக காலை நேர வெயில் படுமாறு உங்களது தினசரிகளை மாற்றிக் கொள்ளலாம். இப்படி செய்வதனால் உங்களது மெட்டபாலிசம் தூண்டப்பட்டு மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படாமல் தடுத்திடும்.
ஆப்பிள் சிடர் வினிகர்:
ஒரு கிளாஸ் சூடான நீருடன் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் இரண்டு டீஸ்பூன் சேர்த்து குடிக்க வேண்டும். இதனை ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இப்படி குடிப்பதனால் உடலில் இன்சுலின் அளவு சீராக இருக்கும். இதனால் கருமுட்டை உற்பத்தியாவதும் மாதந்தோறும் அது உடைவதும் சீராக நடைபெறும்.
தேங்காய் எண்ணெய்:
சுத்தமான தேங்காய் எண்ணெய் மூலமாக கூட கருப்பை நீர்க்கட்டிகளை நம்மால் வராமல் தடுக்க முடியும். இதற்கு பாக்கெட்டுகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும், அதில் கலக்கப்பட்டிருக்கும் கெமிக்கல்களால் தேங்காய் எண்ணெயின் முழுபலன்களும் உங்களுக்கு கிடைக்காது. தினமும் ஒரு ஸ்பூன் அளவாவது தேங்காய் எண்ணெய்யை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஃபேட்டி ஆசிட், ஆண்ட்டி ஆக்சிடென்ட் இருக்கிறது. சீரான அளவில் இதனை எடுத்துக் கொண்டால் இன்சுலின் சுரப்பை சீராக வைத்திருக்கும். அதேபோல கெட்ட கொழுப்பு ரத்தத்தில் கலப்பதையும் தடுத்திடும்.
ஆமணக்கு எண்ணெய்:
ஆமணக்கு எண்ணெய்யை லேசாக சூடு படுத்திக்கொள்ளுங்கள். அதில் சுத்தமான பருத்தி துணியை கொண்டு எண்ணெயில் முக்கி அடிவயிற்றில் ஒத்தடம் கொடுத்திடுங்கள் அப்படியில்லை எனில் ஆமணக்கு எண்ணெயை வயிற்றில் தடவிக்கொண்டு ஹாட்பேக் ஒத்தடம் கொடுக்கலாம். பின்னர் வயிற்றை சுத்தமாக துடைத்துவிடுங்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை இப்படிச் செய்யலாம். ஆமணக்கு எண்ணெய் சருமத்தில் ஊடுருவும் ஆற்றல் கொண்டது. அதோடு உள்ளுறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் ஹார்மோன் மாற்றம் ஏற்படாது. இதனால் கருப்பை கோளாறுகள் ஏற்படாது.
கிரீன் டீ:
சூடான நீரில் கிரீன் டீ மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் கிரீன் டீ வரை குடிக்கலாம். இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் கருப்பை சீராக வேளை செய்வதற்கான ஹார்மோன்களை தூண்டிடும். அதிக எடை கூட கருப்பை கோளாறுகள் வருவதற்கு ஒரு வகை காரணமாக இருக்கிறது. கிரீன் டீ குடிப்பதனால் கெட்ட கொழுப்புகள் உடலில் சேராது. இதனால் அதீத உடல் எடையும் தவிர்க்கப்படும்.
கற்றாழை:
கற்றாலை ஜூஸ் காலை உணவுக்கு முன்பு சாப்பிட்டு வர வேண்டும். இதனை தினமும் கூட சாப்பிடலாம். கற்றாழையில் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை நீக்கும் ஆற்றல் கொண்டது. அதோடு கருப்பை இயங்குவதற்கான ஆற்றலையும் கொடுக்கிறது. மாதவிடாய் பிரச்னை இருப்பவர்கள் இதனை தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதோடு கருப்பை நீர்க்கட்டிகள் வராமல் தடுத்திடும்.
நெல்லிக்காய்:
ஒரு டம்ளர் நீருடன் அரைகப் நெல்லிக்காய் சாறு கலந்து குடிக்க வேண்டும். இதனையும் நீங்கள் தினமும் குடிக்கலாம். உங்களுக்கு வேறு சில உடல் உபாதைகள் அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களை குறைத்து, உடல் பருமனை தடுக்கும். நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்சிடென்ட்டுகள் அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் சூப்பராக்சைடு டிஸ்முடேஸ் என்னும் உட்பொருள் உள்ளது. இது ப்ரீ-ராடிக்கல்களிடம் இருந்து பாதுகாப்பளித்து, புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும். நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்சின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், ரத்தத்தையும் சுத்தம் செய்யும். மேலும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.
சீரகம்:
தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களை தடுக்கலாம். பசியைத் தூண்டும். சீரகத்தில் இருக்கும் டாக்சின்கள் ரத்ததை சுத்தப்படுத்துகிறது, அதோடு உடலில் தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது.
வெந்தயம்:
நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கி இருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது.
- மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
- மிளகை சுட்டு அதன் புகையினை உள் இழுத்தால் தலைவலி தீரும்.
* சளி தொல்லைக்கு மிளகை நன்றாக பொடித்து அதை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும்.
* அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.
* கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாணமுருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.
* மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளில் இருந்து ரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
* மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலை பாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை உள் இழுத்தால் தலைவலி தீரும்.
* ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.
* மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது.
* மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. நஞ்சை முறுக்கும் தன்மை கொண்டது. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது பழமொழி.
- முருங்கையை போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை.
- முருங்கையை போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை.
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டவை.
முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தை தணிக்கவும் வல்லது. முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.
சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையை போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்து குறைபாடுகளுக்கு பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.
ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்து போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.
குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது. இது நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.
முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் 'சி' கிடைக்கிறது. மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.
- மைட்டோகாண்ட்ரியா பழுதாக இருந்தால், கருவுறும் குழந்தையும் பாதிக்கப்படுகிறது.
- பெற்றோர் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளும் அளவுக்கு, பிள்ளைப்பேறு மாறிவிடும்.
மரபணுவில் உள்ள இழைமணி (மைட்டோகாண்ட்ரியா) பழுதாக இருந்தால், கருவுறும் குழந்தையும் பாதிக்கப்படுகிறது. இப்படி பிறக்கும் குழந்தைக்கான குறைபாட்டை முன்தாகவே தடுக்க ஆரோக்கியமான பெண்ணின் சினை முட்டையிலிருக்கும் கருமையப் பகுதியை, குறைபாடுள்ள பெண்ணின் சினை முட்டையில் பொருத்திக் கருவுறச் செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
விலங்குகளிடம் இந்த ஆய்வை நடத்தியதில் வெற்றிகரமான முடிவு கிடைத்திருக்கிறது. இப்படியெல்லாம் மனிதக்கருவில் விளையாட வேண்டுமா என்று பலர் கடுமையாக எதிர்க்கவும் செய்கிறார்கள். இதற்கு காரணம், இந்த புதிய மருத்துவம் காரணமாகப் பிறக்கும் குழந்தையின் உடலில் 2 தாய், ஒரு தந்தையின் மரபணுக்கூறுகள் இடம்பெறும். பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், அதன் மைட்டோகாண்ட்ரியாவில் செய்த திருத்தம், அதன் சந்ததிகளிடமும் தொடரும்.
மைட்டோகாண்ட்ரியா திருத்தம் ஒரு முறை செய்யப்பட்டால், அடுத்தடுத்து வழிவழியாக வந்துகொண்டே இருக்கும். இயற்கையின் படைப்பில் இப்படி விளையாடலாமா? என்ற எதிர்ப்பு குரல்கள் எழுகின்றன.
மரபணு இழை கோளாறு ஏன் ஏற்படுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. அதைவிட கொடுமை இந்த குறையை, அடுத்துவரும் சந்ததிக்கும் தந்துவிடுவோமோ என்று ஒரு தாய் மருகுவதுதான். அந்தக் கவலையைப் போக்குவதைவிட, நல்ல விஷயம் வேறு உண்டா? என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
ஆனால், இந்த தொழில்நுட்பத்தை அனுமதித்தால் தன்னுடைய மகன் அல்லது மகள் எப்படி இருக்க வேண்டும் என்று பெற்றோர் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளும் அளவுக்கு, பிள்ளைப்பேறு மாறிவிடும் என்பதும் பலருடைய குற்றச்சாட்டு. மிகவும் அபூர்வமான தருணத்தில் மட்டும் பயன்படுத்தி, குறையுள்ள குழந்தை பிறப்பதை தடுக்கலாம்.
ஆனால், அதையே வியாபாரமாக்கி எல்லாக் கருக்களிலும் மருத்துவர்கள் மாற்றங்களைச் செய்ய அரசு அனுமதிக்கக்கூடாது என்ற வாதமும் இருக்கிறது.
பிறக்கப்போகும் குழந்தையை கேட்டுக்கொண்ட பிறகு, பிள்ளைப்பேறு தொடர்பாக பெற்றோர் முடிவு எடுப்பதில்லை. அப்படி இருக்கும்போது மரபணு இழை பாதிப்புள்ளவர்களின் விஷயத்தில் மட்டும், ஏன் புதிய நடைமுறையை அனுமதிக்கக் கூடாது என்ற குரலும் எழாமல் இல்லை.
- மருவை எளிய முறையில் நீக்க வீட்டில் செய்யக்கூடிய மருத்துவ வைத்தியம்.
- முகத்தில் கழுத்தில் மருக்கள் வரும்.
மருவை எளிய முறையில் நீக்க வீட்டில் செய்யக்கூடிய மருத்துவ வைத்தியம். இந்த மரு குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இதுபோன்ற வயசு வித்தியாசம் இல்லாமல் வரும். முகத்தில் கழுத்தில் மருக்கள் வரும். ஒற்றை மருக்கள் அல்லது இரண்டு மூன்று சேர்ந்து வரும் மருக்கள் எப்படி எளிய முறையில் நீக்கலாம் என்று பார்க்கலாம்.
மருக்கள் யாருக்கெல்லாம் இருக்கும்?
* உடல் பருமன் இருக்கும் ஆண்-பெண் இருபாலருக்கும் இருக்கும்.
* ஹார்மோன் இன் பாலன்ஸ் (நீர்க்கட்டி தைராய்டு) இது போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு இருக்கும்.
* சர்க்கரை நோய் உள்ளவர்கள்.
* ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் இருக்கும்.
நீக்குவது எப்படி?
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை பழம்
இஞ்சி
சுண்ணாம்பு (வெற்றிலை பாக்கு போடும் சுண்ணாம்பு).
செய்முறை:
ஒரு துண்டு இஞ்சியை எடுத்து நன்றாக துருவிக்கொள்ள வேண்டும். அதன் சாறை எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் சுண்ணாம்பு சிறிதளவு சேர்க்க வேண்டும். சுண்ணாம்பு சேர்த்தவுடன் அதில் எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.
அதன்பிறகு அதை எடுத்து மரு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இப்படி செய்து வந்தால் நம் முகத்தில் உள்ள மருக்கள் ஒரு வாரத்தில் நீங்கிவிடும். தினமும் இரவு மற்றும் காலையில் இதை செய்து வந்தால் உடனடியாக நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
- இதயத்துக்கென தனியே மின்சார செயல்பாடு உள்ளது.
- மூளை செயலிழப்பு ஏற்பட்டாலும் இதயத்துடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
கருவில் இருக்கும் குழந்தைக்கு முதலில் உருவாகுவது இதயம்தான். 20 வயது வரை இதயம் தொடர்ந்து வளர்ச்சி அடையும். இதயத்துக்கென தனியே மின்சார செயல்பாடு உள்ளது. மூளை செயலிழப்பு ஏற்பட்டாலும் இதயத்துடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
மேலும், இதயத்துடிப்புக்கான சக்தியை இதயமே உற்பத்தி செய்து கொள்ளும். இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் முறையும், வாழ்நாளில் சராசரியாக 2.5 பில்லின் முறையும் துடிக்கிறது. மேலும், நமது வாழ்நாள் முழுவதும் சுமார் 117.34 லிட்டர் ரத்தத்தை இதயம் 'பம்ப்' செய்கிறது.
இடது கையின் நடுவிரலின் கீழ்ப்பகுதி மற்றும் வலது கை மணிக்கட்டு பகுதியில் இதயத்துக்கான புள்ளிகள் உள்ளன. அவற்றில் குறிப்பிட்ட அழுத்தம் கொடுப்பதன் மூலம் இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்த முடியும்.
பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் பிரோஜெஸ்டிரோன் ஹார்மோன் இதய நோயிலிருந்து உடலை பாதுகாக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பானது பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலம் வரை செயல்படும். ஆண்களை விட பெண்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 8 முறை அதிகமாக இதயம் துடிக்கிறது.
நாம் தும்மும் போது ஒரு வினாடி கண்கள் தன்னிச்சையாக மூடுவதுடன், இதயத் துடிப்பில் சிறிய மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. நம் சுவாசம் சீரானவுடன் மீண்டும் இதயம் சீராக துடிக்க ஆரம்பிக்கும். இதயத்துடிப்பானது மாரடைப்பு ஏற்படும் போது மட்டுமே நின்றுபோகும்.
நாம் அதிக அளவு உணர்ச்சி வசப்படும்போதும், மன அழுத்தத்தில் இருக்கும்போதும் இதயம் முழுமையாக சுருங்கும். அதேபோல் அதீத மகிழ்ச்சி மற்றும் சிரிக்கும்போது வழக்கத்தைவிட இதயம் 20 சதவிகிதம் அதிகமாக ரத்தத்தை 'பம்ப்' செய்யும்.
ரத்த அழுத்தம். கொலஸ்ட்ரால் அளவுகள், உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் நடைமுறை ஆகியவற்றின் அடிப்படையில் தான் இதயத்துக்கான வயது கணக்கிடப்படுகிறது. இதயத்துக்கான வயதைப் பொறுத்தே அதன் ஆரோக்கியம் மதிப்பிடப்படுகிறது. இதயத்தின் வயது நம்முடைய உண்மையான வயதைவிட குறைவாக இருக்கலாம்.
பொதுவாக காலை வேளையில் மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்றவை அதிகமாக ஏற்படும். மற்ற நேரங்களை விட காலை வேளையில் மன அழுத்தத்துக்கான ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருப்பதே இதற்கு காரணம். வாரத்தின் மற்ற நாட்களை விட திங்கட்கிழமை காலை வேளையில் அதிகமானோருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர, பூனை, நாய் மற்றும் குதிரை ஆகிய விலங்குகள் மனிதனின் இதயத்துடிப்பை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் உணர்வு ரீதியான பதிலை வெளிப்படுத்தும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன
- உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
- அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் சுண்ணாம்பு பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
நம் வீட்டில் உள்ள முதியவர்கள் வெற்றிலை பாக்குடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவார்கள். ஏனெனில் சுண்ணாம்பில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது எலும்பின் வலிமையை அதிகரிக்கும். அதேபோல் வழிபாடு மற்றும் பிற புனித சடங்குகளில் சுண்ணாம்பை அதிகமாக பயன்படுத்துவார்கள். காரணம். சுண்ணாம்பில் ஆன்டிசெப்டிக் வலிநிவாரணி, மூச்சுத்திணறல் மற்றும் மன அழுத்தத்தை எதிர்க்கும் பண்புகள் நிறைந்துள்ளன. சுண்ணாம்பின் பயன்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
* சுண்ணாம்பில் உள்ள மன அழுத்த எதிர்ப்பு பண்புகள், சுண்ணாம்பின் நறுமணத்தை சுவாசிப்பதன் மூலம் மன சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
* சுண்ணாம்பு புகையின் நறுமணத்தை சுவாசிப்பதால் நாள்பட்ட இருமல், காசநோய் மற்றும் மார்பு சளி ஆகியவை குணமாகும். சுண்ணாம்பில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்.
* உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து. புற்றுநோயின் அறிகுறிகளை குறைக்கும்.
* விஷப்பூச்சிகள் கடித்து விட்டால், சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு மூன்றையும் சம அளவு எடுத்து, நீர் சேர்த்து கரைத்து, கடித்த இடத்தில் தடவினால் விஷத்தன்மை நீங்கும். தேள் கடிக்கு கண்ணாம்புடன் சிறிது நவச்சாரம் சேர்த்து நசுக்கி, அதை தேள் கொட்டிய இடத்தில் வைத்துத் தேய்த்தால் நஞ்சு இறங்கும்.
* இரவு தூங்குவதற்கு முன்னர் தேனும், சிறிது சுண்ணாம்பும் கலந்த கலவையை தொண்டையில் தடவினால் தொண்டை வலி குறையும்.
* கண்ணாம்பு, துணி சுட்ட கரி, பனை வெல்லம் மூன்றையும் சமஅளவு எடுத்து, மைபோல் அரைத்து, வீக்கம் மற்றும் ரத்தக்கட்டு உள்ள இடத்தில் தடவ சரியாகும். உடலில் ஏற்படும் கட்டிகள் உடைய சுண்ணாம்பு, மாவலிங்கம் பட்டைத்தூள் இரண்டையும் சமஅளவு சேர்த்து நல்லெண்ணெய்யில் கலந்து தடவினால் கட்டிகள் பழுத்து உடையும்.
* மஞ்சள் தூள், உப்பு, சுண்ணாம்பு மூன்றையும் நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கி, தூக்கம் கிடைக்கும். தலையில் உள்ள அதிகப்படியான கெட்ட நீர் விலகிவிடும்.
* அரை லிட்டர் தயிருடன் ஒரு கொட்டைப்பாக்கு அளவு சுண்ணாம்பு சேர்த்து தினமும் காலையில் மட்டும் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.
* ஒரு டம்ளர் தண்ணீரில் சிறி தளவு சுண்ணாம்பை கலந்து. அதில் மேலே தெளிந்த நீரை மட்டும் எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து, குழைத்து தடவி வர வெந்நீர் அல்லது நெருப்பினால் ஏற்பட்ட புண் ஆறும்.
* சுண்ணாம்பை உமிழ்நீர் விட்டு குழைத்து, தொப்புளை சுற்றியும், கால் பெருவிரலிலும் தடவினால் நீர்க்கடுப்பு குணமாகும்.
குறிப்பு: நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள். அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் சுண்ணாம்பு பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
- அல்சைமர் என்பது மூளையை பாதிக்கும் நரம்பு தொடர்புடைய ஒரு வகை நோயாகும்.
- 5.5 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அல்சைமர் தினம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ந் தேதி அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அல்சைமர் நோய்க்கான காரணம் மற்றும் அதன் தீவிரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1994-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி உலக அல்சைமர் தினம் தொடங்கப்பட்டது.
அல்சைமர் என்பது மூளையை பாதிக்கும் நரம்பு தொடர்புடைய ஒரு வகை நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படிப்படியாக தங்களின் நினைவாற்றலை இழந்து விடுகின்றனர். உலகளவில் 5.5 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்களுக்கு அல்சைமர் நோய் வருவதற்கான ஆபத்து அதிகம். அல்சைமர் நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 2023-ம் ஆண்டுக்கான உலக அல்சைமர் தினத்தின் கருப்பொருள் `எப்போதும் சீக்கிரம், ஒருபோதும் தாமதமாகாது' என்பதாகும்.
1901-ம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும் போது இந்த நோயை முதன்முதலில் ஜெர்மன் மனநல மருத்துவரான `அலோயிஸ் அல்சைமர்' என்பவர் கண்டறிந்தார். எனவே இந்த நோய்க்கு அவரது பெயரே வைக்கப்பட்டது.
சமீபத்திய நிகழ்வுகளை நினைவுபடுத்த இயலாமை என்பது நோயின் ஆரம்ப அறிகுறியாகும். மேலும் பிரச்சினைகளை தீர்ப்பதில் உள்ள சவால்கள், வீட்டில் அல்லது வேலையில் தெரிந்த பணிகளை முடிப்பதில் சிரமம், நேரம் அல்லது இடத்தை அறிவதில் குழப்பம், படிப்பதில் சிரமம், நிறத்தை அடையாளம் காண்பதில் சிரமம், பாதையை மறப்பது, தேதி மற்றும் நேரம் தவறாக வைப்பது ஆகியவை இதன் அறிகுறிகளாகும். ஆரம்பகால கண்டறிதல், இந்த நோய்க்கு திறம்பட சிகிச்சையளிக்க உதவுகிறது.
- உணவை இரைப்பையில் செரித்து ஆற்றலாக மாற்றுவதற்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம் உதவுகிறது.
- உடலுக்கு பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது.
நாம் உண்ணும் உணவை இரைப்பையில் செரித்து ஆற்றலாக மாற்றுவதற்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம் உதவுகிறது. நாம் சாப்பிட ஆரம்பித்தவுடன் `ஹைட்ரோகுளோரிக் அமிலம்' எனப்படும் வலுவான அமிலத்தை இரைப்பை உற்பத்தி செய்கிறது.
ஒவ்வொரு நாளும் சுமார் 2 லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றில் சுரக்கப்படுகிறது. இந்த அமிலம், சிக்கலான உணவு மூலக்கூறுகளை சிதைத்து செரிமானத்திற்கு ஏற்றவாறு எளிய மற்றும் சிறிய மூலக்கூறுகளாக மாற்றுகிறது. இறுதியில் அவை குடல் சுவர்கள் மற்றும் ரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகிறது.
மேலும் உணவின் மூலம் செரிமான அமைப்பில் நுழையக்கூடிய தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை செயலிழக்க செய்ய உதவுகிறது. இதனால் உடலுக்கு பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது. வயிற்றில் அமிலத்தின் அளவு சரியாக இருக்க வேண்டும்.
காரமான அல்லது கொழுப்பு நிறைந்த உணவை மிகுதியாக சாப்பிடும்போது அதிகப்படியான அமிலம் வயிற்றில் இருந்து வெளியேறுகிறது. இவை உணவு குழாய் வரை சென்று, இரைப்பை மற்றும் குடல் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
மேலும் வயிறு சுவர்களில் புண்கள் ஏற்படுவதோடு, நெஞ்செரிச்சலையும் உண்டாக்கும். வயிற்றில் அமில அளவு போதுமானதாக இல்லாவிட்டால், செரிமானம் பலவீனமடையலாம். இதனால் உணவின் ஊட்டச்சத்துக்கள் தேவையான அளவு உடலுக்கு கிடைக்காது. அஜீரணம் மற்றும் பாக்டீரியா பெருக்கம் கூட அமில அளவு போதுமான அளவு இல்லாததினால் உருவாகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம், பி.எச் அளவு 1.5- 2.0 கொண்ட மிகவும் வலிமையான அமிலம். ஒரு சிறிய இரும்புத்தகடை கூட 24 மணி நேரத்திற்குள் கரைக்கும் சக்தியை கொண்டுள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.
- சுற்றுச்சூழலை அழிப்பது யாருடைய உரிமையும் இல்லை.
- சுற்றுப்புறம் ஆரோக்கியமாக இருந்தால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
நம் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதன் முக்கியத்துவத்தை உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் குறிக்கிறது. நமது சுற்றுப்புறம் ஆரோக்கியமாக இருந்தால், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் செயல்பாடுகளால் அந்த பகுதியில் காற்றின் தரம், நீர் நிலைகளில் ஏற்படும் அசுத்தம், நிலத்தில் சேரும் கழிவுகள் போன்ற நிகழ்வுகளே சுற்றுச்சூழல் மாசடைதல் என்கிறோம்.
இதுபோன்று சுற்றுசூழல் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தவே சுற்றுச்சூழல் சுகாதாரத்தின் சர்வதேச கூட்டமைப்பின் (IFEH) சார்பில் உறுப்பு நாடுகள் இணைந்து கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26-ந் தேதி (நாளை) உலக சுற்றுச்சூழல் சுகாதார தினமாக கொண்டாடி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு தனித்துவமான கருப்பொருளை இந்த அமைப்பு உருவாக்கி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்தாண்டுக்கான கருப்பொருள் "உலகளாவிய சுற்றுச்சூழல் பொது சுகாதாரம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறது" என்பதாகும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக உலகத் தலைவர்கள் இந்த தினத்தை ஆதரித்து வருகின்றனர்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து புவி வெப்பமயமாதல், அமில மழை பொழிதல், பருவநிலை மாற்றமடைதல் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன. இந்த நிகழ்வுகளால் மனிதர்களும் பலவிதமான நோய்களுக்கு உட்பட்டு பாதிப்புகளை எதிர்கொள்ளுகின்றனர்.
இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த நாம் அனைவரும் பொறுப்புகளை உணர்ந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத செயல்களை செய்ய வேண்டும். இந்த நாளில் சுற்றுச்சூழல் சுகாதார தினத்தின் முக்கியத்துவம் பற்றி பேசுதல், பல்வேறு தரப்பு மக்களும் ஒன்று கூடி வெளிப்படையாக கருத்துகளை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாதுகாப்பிற்காக வாதிடுவது போன்ற நிகழ்வுகள் நடத்த வேண்டும்.
மேலும் சுத்தமான காற்று, நிலையான காலநிலை, போதுமான நீர் , கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு, நல்ல விவசாய நடைமுறைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இயல்பினால் சுற்றுச்சூழல் மாசடைவதில் இருந்து பாதுகாக்கலாம்.
"கடைசி மரத்தை வெட்டி, கடைசி மீனைக் கொன்று, கடைசி நதியில் விஷம் கலந்தால், பணத்தை சாப்பிட முடியாது என்பதை நீங்கள் காண்பீர்கள்" - என்றார் ஜான்மே. சுற்றுச்சூழலை அழிப்பது யாருடைய உரிமையும் இல்லை. அதனை பாதுகாப்பதே அனைவரின் கடமையாகும்.