search icon
என் மலர்tooltip icon

    குஜராத்

    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் உணவு தயாரிப்பை விமர்சித்து பதிவிட்டனர்.
    • இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.

    இந்தியாவில் தெருவோர உணவுகளில் அதிகமாக விற்பனையாகும் பானிபூரி பல்வேறு வகைகளில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த ஒரு தெரு உணவக விற்பனையாளர் ஒருவர், பானிபூரியின் புதிய வகை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், தங்கத் தட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப்படலத்துடன் பரிமாறப்படும் பானிபூரியுடன் துருவிய பாதாம் மற்றும் தண்டாய் ஆகிய கலவை சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 பானிபூரிகள் தட்டில் உள்ளது.

    ஒவ்வொரு பானிபூரியிலும் துண்டாக்கப்பட்ட பாதாம் மற்றும் சில முழு முந்திரி மற்றும் பிஸ்தாவை சேர்க்கும் விற்பனையாளர் தாராளமாக தேனை சேர்த்து அவற்றை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவது போல காட்சிகள் உள்ளன. உணவு தயாரிப்பு குறித்த வீடியோக்களை பகிறும் குஷ்பு பர்மர் மற்றும் மனன் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.

    இதைப்பார்த்த பயனர்கள் பலரும் இந்த உணவு தயாரிப்பை விமர்சித்து பதிவிட்டனர். ஒரு பயனர், இது பானிபூரியாக இருக்க வேண்டும். ஆனால் டிரை புரூட் பூரியை தான் உருவாக்கி உள்ளனர் என கூறியிருந்தார். இதேபோல, பயனர்கள் பலரும் பாரம்பரிய பானிபூரியின் உண்மையான சுவையை மாற்ற முடியாது என்று பதிவிட்டுள்ளனர். அதேநேரம் சில பயனர்கள் இந்த புதிய உணவை ருசிக்க விரும்புவதாக பதிவிட்டுள்ளனர்.



    • குறிப்பாக பெண்களுக்கு 20 லட்சம் அழைப்புகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
    • பெண் வாக்காளர்கள் தங்களின் நெருக்கடியான கால அட்டவணையில் இருந்து நேரத்தை ஒதுக்கி தங்கள் குடும்பத்தினருடன் வாக்களிக்க அழைப்பிதழ் அனுப்பப்படும்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 27-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது.

    இந்த நிலையில் தேர்தலில் வாக்களிக்கும் சதவீதத்தை அதிகரிக்க மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு 20 லட்சம் அழைப்புகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஆண் மற்றும் பெண் வாக்காளர்களுக்கு இடையேயான வித்தியாசம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் 13,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை இலக்காகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. பெண் வாக்காளர்கள் தங்களின் நெருக்கடியான கால அட்டவணையில் இருந்து நேரத்தை ஒதுக்கி தங்கள் குடும்பத்தினருடன் வாக்களிக்கவும், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கவும் அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும்" என்றார்.

    • மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.
    • விண்ணப்பங்கள் முறையாக பரிசீலனை செய்யப்படுவதில்லை.

    குஜராத்தில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அரசு கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் பௌத்தம், சீக்கியம் மற்றும் சமணம் ஆகியவை தனி மதங்கள் என்றும் இந்துவாக இருந்து இந்த மதங்களுக்கு மாற விரும்புவோர் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.

    குஜராத் மத சுதந்திர சட்டத்தின் கீழ் மதம் மாறுவதற்கு அனுமதி அவசியம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக குஜராத் உள்துறை அமைச்சகம் சார்பில் புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்து மதத்தில் இருந்து பௌத்த மதத்திற்கு மாறுவது தொடர்பான விண்ணப்பங்கள் முறையாக பரிசீலனை செய்யப்படுவதில்லை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    குஜராத் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் பௌத்த மதத்திற்கு மாறி வருகின்றனர். அந்த வகையில் மதம் மாறுவது தொடர்பான விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது குஜராத் மத சுதந்திர சட்டத்தில் ஆட்சியர்கள் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பான விண்ணப்பங்களுக்கு சில மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், "சட்ட விதி 25 பிரிவு 2-இன் கீழ் சீக்கியம், சமணம் மற்றும் பௌத்தம் ஆகிய இந்து மதத்திற்குள் இடம்பெற்று இருப்பதால் மதம் மாறுவதற்கான அனுமதி பெற தேவையில்லை," என கோரி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும், குஜராத் மத சுதந்திர சட்டத்தின் படி இந்து மதத்தில் இருந்து பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களுக்கு மாறுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்
    • கடந்த 1 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மோசமான தோல்வியை தழுவியது

    ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் புதிய கேப்டனுடன் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய போட்டிகளில் தோல்வியை தழுவி தடுமாறி வருகிறது.

    அதிலும், கடந்த 1 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மோசமான தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி மும்பையில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் தான் ஹர்திக் பாண்டியா குஜராத் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா சிவனுக்கு தந்து கையால் அபிஷேகம் செய்தும் தீபாராதனை காட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாக நியமிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு போட்டியின் போதும் ஹர்திக் மற்றும் ரோகித் இடையே கருத்து வேறுபாடு இருக்குமோ என்ற வகையில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நபரால் ரெயிலில் இருந்து இறங்க முடியாத நிலையில் அவரும் மனைவியுடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
    • பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    வந்தே பாரத் ரெயிலில் மனைவியை வழியனுப்ப சென்ற கணவர் அந்த ரெயிலில் தானியங்கி கதவுகள் எதிர்பாராதவிதமாக மூடப்பட்டதால் ரெயிலுக்குள் சிக்கி மனைவியுடன் பயணம் செய்த சம்பவத்தை அவரது மகள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    குஜராத் மாநிலம் வதோதரா பகுதியை சேர்ந்த கோஷா என்ற அந்த இளம்பெண் தனது தாயுடன் மும்பை செல்வதற்காக வந்தே பாரத் ரெயிலில் ஏறுவதற்கு சென்றுள்ளார். அவர்களை வழியனுப்புவதற்காக கோஷாவின் தந்தை 2 பெரிய பைகளுடன் ரெயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். பயணத்திட்டப்படி ரெயில் வந்ததும் 2 பைகளையும் பெட்டிக்குள் வைப்பதற்காக கோஷாவின் தந்தை சென்ற நேரத்தில் தானியங்கி கதவு மூடியது.

    இதனால் அந்த நபரால் ரெயிலில் இருந்து இறங்க முடியாத நிலையில் அவரும் மனைவியுடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் டிக்கெட் பரிசோதகரை அணுகிய போது, ஏற்கனவே நேரமாகி விட்டதாக கூறியதோடு, ரெயிலும் வேகம் பிடித்து விட்டதால் ஒன்றும் செய்ய முடியாது என கூறி உள்ளார்.

    இதனால் கோஷாவின் தந்தையும் மனைவியுடன் பயணம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவரது மகளின் பதிவுகள் இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • முதலில் ஆடிய ஐதராபாத் 162 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய குஜராத் 19.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக

    அபிஷேக் சர்மா மற்றும் அப்துல் சமது ஆகியோர் தலா 29 ரன்கள் எடுத்தனர்.

    குஜராத் சார்பில் மோகித் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விரித்திமான் சகா 13 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 28 பந்தில் 36 ரன்கள் குவித்தார். சாய் சுதர்சன் 45 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில் குஜராத் அணி 19.1 ஓவரில் 168 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மில்லர் 44 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய ஐதராபாத் 162 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் அபிஷேக் சர்மா மற்றும் அப்துல் சமது 29 ரன்கள் எடுத்தனர்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்களை சேர்த்தது.

    மயங்க் அகர்வால் 16 ரன்னும், டிராவிஸ் ஹெட் 19 ரன்னும், அபிஷேக் சர்மா 29 ரன்னும், மார்கிரம் 17 ரன்னும், கிளாசன் 24 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் 6-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷபாஸ் அகமது, அப்துல் சமத் ஜோடி அதிரடியில் மிரட்டியது. இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்த நிலையில் ஷபாஸ் அகமது 22 ரன்னில் அவுட்டானார்.

    குஜராத் அணி சார்பில் மோகித் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.

    • பெட்டியில் பயணம் செய்த அனைத்து பயணிகளுக்கும் தொந்தரவை ஏற்படுத்தி உள்ளது.
    • பதிவு வைரலாகி 13 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றதொடு, பயனர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது.

    நாடு முழுவதும் நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் பாபு பையா என்ற பயனர் சமீபத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அவர் குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் இருந்து சாலிமர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்துள்ளார். ரெயிலில் முன்பதிவு பெட்டியான எஸ்-5 கோச்சில் பயணம் செய்த போது அங்கு டிக்கெட் இல்லாமலேயே பலர் ஏறி பயணம் செய்துள்ளனர்.

    இது அந்த பெட்டியில் பயணம் செய்த அனைத்து பயணிகளுக்கும் தொந்தரவை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக புகைப்படங்களுடன் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார். அவரது இந்த பதிவு வைரலாகி 13 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றதொடு, பயனர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து அவரது பதிவுக்கு ரெயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதிலில், குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    • அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது
    • குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார்

    17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, 2-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகினறன.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.

    கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார். அதேநேரம், குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இன்று முதல்முறையாக களமிறங்க உள்ளது. இதனால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    அகமதாபாத் மைதானம் கடந்த தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்ததால், பல போட்டிகளில் ரன் மழை பொழிந்தது. இன்றைய போட்டியிலும் ஆடுகளம் அதேநிலையில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    • குஜராத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கும் விடுதியில் நமாஸ் செய்து வந்துள்ளனர்.
    • பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    குஜராத் பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வடநாட்டு மாநிலங்களில் முஸ்லீம் மக்கள் மீது அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் ரம்ஜான் பண்டிகை வரவிருப்பதை ஒட்டி, இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களால் நோன்பு நோற்கப்படுகிறது.

    அந்த வகையில், குஜராத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கும் விடுதியில் நமாஸ் செய்து வந்துள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் பல்கலைக்கழக தங்கும் விடுதி அருகில் மசூதி எதுவும் இல்லை என கூறப்படுகிறது. மசூதி எதுவும் இல்லாத காரணத்தால் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே நமாஸ் செய்து வந்துள்ளனர்.

    அப்படி நமாஸ் செய்யும் போது, அங்கு வந்த கும்பல் மாணவர்களை சரமாரியாக தாக்கியது. மேலும், அவர்கள் நமாஸ் செய்த அறையில் இருந்த லேப்டாப், மொபைல் போன் மற்றும் இதர பொருட்களை உடைத்துள்ளனர். இதோடு அவர்களது இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஆப்பிரிக்க நாடுகள், ஆப்கானிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவர் ஒருவர், "அவர்கள் எங்களை தாக்கினர். அறையில் வைக்கப்பட்டு இருந்த லேப்டாப்கள், மொபைல் போன்களை உடைத்து, இருசக்கர வாகனங்களையும் உடைத்தனர்.

    தாக்குதலில் ஆப்கானிஸ்தான், இலங்கை, தர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் காயமுற்றனர். காவல்துறையினர் வருவதற்குள் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து கிளம்பிவிட்டது. தாக்குதலில் காயமுற்ற மாணவர்கள் குறித்து அவர்களது தூதரகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது" என தெரிவித்தார்.

    இந்நிலையில், குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டதையடுத்து, அவர்கள் புதிய விடுதிக்கு மாற்றம் செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக துணைவேந்தர் நீரஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "குஜராத் பல்கலைக் கழக அதிகாரிகள், வெளிநாடுகளில் படிக்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் என்ஆர்ஐ விடுதி காப்பாளர் ஆகியோரை உடனடியாக மாற்றியமைத்துள்ளோம்.

    மூன்று நாள்களுக்குள் வெளிநாட்டு மாணவர்களை வெவ்வேறு விடுதிக்கு மாற்ற பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    குஜராத் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர் ஆலோசனைக் குழுவையும் அமைத்துள்ளது. இதில் வெளிநாட்டுப் படிப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர், சட்டப் பிரிவின் உதவிப் பதிவாளர் மற்றும் பல்கலைக்கழக லோக்பால் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். என்று அவர் கூறினார்.

    • குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இதுதொடர்பாக பாகிஸ்தானியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அகமதாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் இருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடல் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், குஜராத் எல்லையில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடற்படை, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    போர்பந்தர் அருகே நடத்தப்பட்ட சோதனையில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அங்கிருந்த 6 பாகிஸ்தானியர்களை கைதுசெய்தனர்.

    இந்த ஆண்டு இதுவரை ரூ.3,135 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

    • கடந்த 10 ஆண்டுகளில் ரெயில்வே மேம்பாட்டுக்காக எனது அரசு முன்பு செய்ததை விட 6 மடங்கு அதிகமான தொகையை செலவிட்டுள்ளது.
    • தனி ரெயில்வே பட்ஜெட் நிறுத்தப்பட்டு மத்திய பட்ஜெட்டில் சேர்த்து ரெயில்வே மேம்பாட்டுக்காக அரசின் பணம் பயன்படுத்தப்பட்டது.

    அகமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் சபர்மதி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 வந்தே பாரத் ரெயில் தொடங்குதல் உள்ளிட்ட ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது:-

    நான் எனது வாழ்க்கையை ரெயில்வே தண்டவாளத்தில் தொடங்கினேன். எனவே முன்பு நமது ரெயில்வே எவ்வளவு மோசமாக இருந்தது என்பது எனக்கு தெரியும். இந்த ஆண்டில் 2 மாதத்தில் ரூ.11 லட்சம் கோடி திட்டங்களை நாங்கள் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டியுள்ளோம்.

    கடந்த 10 ஆண்டுகளில் ரெயில்வே மேம்பாட்டுக்காக எனது அரசு முன்பு செய்ததை விட 6 மடங்கு அதிகமான தொகையை செலவிட்டுள்ளது. தனி ரெயில்வே பட்ஜெட் நிறுத்தப்பட்டு மத்திய பட்ஜெட்டில் சேர்த்து ரெயில்வே மேம்பாட்டுக்காக அரசின் பணம் பயன்படுத்தப்பட்டது. இதுவரை 350 ஆஸ்கர் ரெயில்களில் 4.5 லட்சம் பேர் அயோத்திக்கு செல்ல வசதி செய்யப்பட்டது.

    கடந்த தலைமுறையினர் அனுபவித்த துன்பங்களை இளைஞர்கள் அனுபவிக்கவில்லை. இது மோடியின் உத்தரவாதம். நாட்டின் முன்னேற்ற பாதைக்காகவே வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துகிறோம். இதுவே எங்களது குறிக்கோளாக இருக்கிறது.

    சிலர் எங்கள் முயற்சிகளை தேர்தல் கண்ணோட்டத்தில் பார்க்க முயல்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவில்லை.

    இவ்வாறு மோடி பேசினார்.

    ×