search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூரில் பக்தர்களிடம் கைவரிசை காட்டிய நெல்லை பெண்கள் 2 பேர் கைது
    X

    திருச்செந்தூரில் பக்தர்களிடம் கைவரிசை காட்டிய நெல்லை பெண்கள் 2 பேர் கைது

    • திருச்செந்தூர் கோவிலில் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிலில் கடந்த மாதம் தரிசனத்திற்காக வந்த 3 பக்தர்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது.

    இதில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    தனிப்படையினர் சி.சி.டி.வி. காமிரா கட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் நகைபறிப்பு சம்பவம் ஈடுபட்டது நெல்லை பால பாக்கியாநகரை சேர்ந்த பரமசிவன் மனைவி ராமலெட்சுமி என்ற பேச்சியம்மாள் (வயது 60), நெல்லை குமரேசன் காலனியை சேர்ந்த கல்யாணி என்ற கலா (49). என்பது தெரியவந்தது.

    இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 5 பவுன் நகைகளை மீட்டனர்.

    கைது செய்யப்பட்ட பெண்கள் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    Next Story
    ×