search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாட்கோ மூலம் கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சி
    X

    தாட்கோ மூலம் கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சி

    • இளை ஞர்களுக்கு பல்வே றுதிறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • பயிற்சி அளிக்கும் நிறுவ னத்தில் தங்கி படிக்கும் வசதிகள் மேற்கொள்ள ப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினத்தை சார்ந்த இளை ஞர்களுக்கு பல்வே றுதிறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    தற்போது பெருகி வரும் வேலைவாய்ப்பு சந்தையில் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தாட்கோ நிறுவனமானது புகழ் பெற்ற தனியார் வங்கியுடன் இணைந்து கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சியை வழங்க உள்ளது.

    இந்த பயிற்சியில் சேர 22 வயது முதல் 33 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் பழங்குடியின சார்ந்தவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., கணிதம்) முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 20 நாட்கள் ஆகும். மேலும், சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவ னத்தில் தங்கி படிக்கும் வசதிகள் மேற்கொள்ள ப்படும்.

    இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் பட்சத்தில் நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சி தேர்வுக்கு அனுமதி க்கப்படும். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வங்கி நிதி சேவை காப்பீடு பி.எஸ்.எப்.ஐ.யால் அங்கீகரி க்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

    மேலும், தனியார் வங்கி நிறுவனங்களில் கணக்கு நிர்வாக பணியில் சேர பயிற்சி அளிக்கும் நிறுவனத்தால் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும். இப்பணியில் ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பெறலாம். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோ வழங்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×