search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் பா.ம.க. செயலாளர் கொலையில் ஜாமீனில் வெளியே வந்தவர் குறிப்பிட்ட நேரத்தை  தவிர காரைக்காலில் நுழைய தடை:கலெக்டர் உத்தரவு
    X

     மணிமாறன்.

    காரைக்கால் பா.ம.க. செயலாளர் கொலையில் ஜாமீனில் வெளியே வந்தவர் குறிப்பிட்ட நேரத்தை தவிர காரைக்காலில் நுழைய தடை:கலெக்டர் உத்தரவு

    • தேவ மணிக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் (32) என்பவருக்கும் இட பிரச்ச னை கடந்த பல மாதங்க ளாக இருந்து வந்தது.
    • தேவமணியை அவரது வீட்டின் அருகே, மணிமாறன் கூலிப்படையினரை வைத்து வெட்டி கொலை செய்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாள ராக இருந்தவர் தேவமணி (வயது52). இவர் திருநள்ளாறு -சுரக்குடி சந்திப்பில் வசித்து வந்தார். தேவ மணிக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் (32) என்பவருக்கும் இட பிரச்ச னை கடந்த பல மாதங்க ளாக இருந்து வந்தது.இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி இரவு, தேவமணியை அவரது வீட்டின் அருகே, மணிமாறன் கூலிப்படையினரை வைத்து வெட்டி கொலை செய்தார். இக்கொலை வழக்கில் மணிமாறன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிமாறன், புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் மணிமாறன் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்து கடந்த 21-ந் தேதி, நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனில் வெளியே வந்தார்.

    மேலும் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் திங்கள் மற்றும் வெள்ளி என 2 நாட்கள் காலை 10.30 மணியளவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என ஜாமீனில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி மணிமாறன் நேற்று திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு சென்றுள்ளார். மணிமாறன் அடிக்கடி திருநள்ளாறு வந்தால் சட்ட ம்-ஒழுங்கில் பிரச்சனை ஏற்படும் என்பதால், திருநள்ளாறு ேபாலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன், மணிமாறன் காரைக்காலில் நுழைய தடை விதிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார். அதன் பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியுள்ள மணிமாறன், 144 பிரிவின் கீழ் கோர்ட் உத்தரவுப்படி குறிப்பிட்ட நேரத்தை தவிர, காரைக்காலில் நுழைய கலெக்டர் தடை விதித்துள்ளார். மேலும் மணிமாறன் 2மாதத்திற்கு காரைக்கால் மாவட்டத்திற்குள் முழுமையாக வர தடை விதிக்க வேண்டும். அல்லது வேறு போலீஸ் நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் கையெழுத்திட அனுமதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டுக்கு திருநள்ளாறு ேபாலீஸ் நிலைய போலீசார் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×