என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி விவசாயி பலி
- நடந்து சென்று கொண்டிருந்தார்.
- வாகனம் மோதி விவசாயி பலியானார்
கரூர்,
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 52) விவசாயி. இவர், கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆண்டாங்கோவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், திருப்பதி அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து, திருப்பதியின் சகோதரர் பாண்டியன், கொடுத்த புகாரின் பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story