search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோடம்பாக்கம் வட்டார நாடார் சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழாவில் விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு
    X

    கோடம்பாக்கம் வட்டார நாடார் சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழாவில் விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு

    • ரூபன் நாடார் துணைத்தலைவர் மணி நாடார் சுரேஷ் குமார் நாடார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    • திருமண மண்டபத்தில் நாடார் பேரவை தலைவர் வி எஸ் கணேசன் நாடார் தலைமையில் நடைபெற்றது.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கோடம்பாக்கம் வட்டார நாடார் சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.


    கோடம்பாக்கம் நாடார் சங்க தலைவர் மாம்பழம் ராஜேந்திரன் நாடார் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜாவுடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன்.

    முன்னதாக கோடம்பாக்கம் நாடார் சங்க நிர்வாகிகளில் ஒருவரான மறைந்த டாக்டர் சபாபதி அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சங்க நிர்வாகிகளின் குழந்தைகளுக்கு உதவி வழங்கினோம்.


    இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பால் கனகராஜ் திரைப்பட நடிகர் ஜீவா தங்கவேல் ஜாக்குவார் தங்கம் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்த்ராஜ் நாடார், பொதுச்செயலாளர் சந்திரசேகர் நாடார் கோடம்பாக்கம் நாடார் சங்க காப்பாளர் ஜார்ஜ் நாடார், முன்னாள் தலைவர் ஐ கே ரூபன் நாடார், சாந்தகுமார் நாடார் சங்க ஆலோசகர் ரூபன் நாடார் துணைத்தலைவர் மணி நாடார் சுரேஷ் குமார் நாடார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போன்று முன்னதாக பம்மல் நாடார் பேரவை சார்பில் குடும்ப விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாடார் பேரவை தலைவர் வி எஸ் கணேசன் நாடார் தலைமையில் நடைபெற்றது.


    இந்த நிகழ்ச்சியில் பேரவை தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு காமராஜர் புகழ் பாடினேன்.

    Next Story
    ×