search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி
    X

    நீலகிரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி

    • மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
    • கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் முதல் அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

    ஊட்டி,

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று 31.03.2021 அன்று நிலுவையில் இருந்த மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தார்.

    அதனடிப்படையில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.மேலும், நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 07.05.2021 முதல் 23.01.2023 தனிநபர் வங்கி கடன் இணைப்பு ரூ.1.99 கோடி மதிப்பிலும், 160 பயனாளிகளுக்கு ரூ.6.11 கோடி மதிப்பில் சுய தொழில் புரியும் சுய உதவிக்குழுக் கடன் இணைப்பினையும், ஊரக மற்றும் நகர்புற பகுதியில் உள்ள 11,309 உதவிக்குழுக்களுக்கு ரூ.600.31 கோடி மதிப்பில் வங்கி இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியில் 1,416 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.85.38 கோடி, 7 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1.24 கோடி மதிப்பில் பெருங்கடனும், 2 பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.50 லட்சம் மதிப்பிலும் பெருங்கடன் வழங்கப்பட்டுள்ளது.உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து, ஊட்டி அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், 29.12.2022 அன்று 476 மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 5,854 உறுப்பினர்களுக்கு ரூ.33.21 கோடி மதிப்பில் வங்கிக்கடன் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பயனடைந்த மகளிர் குழு வட்டார ஒருங்கிணைப்பாளர்ச சிகலா கூறும்போது:-

    நான் நெடுகுளா ஊராட்சி கூட்டமைப்பில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறேன். இந்த கூட்டமைப்பின் கீழ் ஹெத்தையம்மன் சுய சிந்து நதி உதவிக்குழு, சிந்து சுயஉதவிக்குழு, அறிஞர் அண்ணா சுய உதவிக்குழு என 136 மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    எங்கள் கூட்டமைப்பில் உள்ள 25 குழுக்களுக்கு ரூ.50 லட்சம் வங்கி பெருங்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    மகளிர்களின் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கு பல்வேறு கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் முதல் அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

    Next Story
    ×