search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டிட தொழிலாளி கொலை: தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்
    X

    கட்டிட தொழிலாளி கொலை: தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

    • திருப்பரங்குன்றம் கட்டிட தொழிலாளி கொலையில் தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • கடந்த சில வருடங்களாக முன் விரோதம் உள்ளது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தென்பரங் குன்றத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). கட்டிட தொழிலாளியான இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், 13 வயதில் மகனும் உள்ள னர்.

    சுரேசுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் தீனதயாளன் என்பவருக்கும் கடந்த சில வருடங்களாக முன் விரோதம் உள்ளது.இதனால் இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் தனது மகனுடன் சென்றபோது தீனதயாளன் மற்றும் அவரது நண்பர்கள் சிங்கராஜ், விக்னேஸ்வரன் ஆகியோர் தகராறு செய்துள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த தீனதயாளன் உள்பட 3 பேரும் சுரேசை அரிவா ளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக திருப்பரங் குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.விசாரணையில் தீன தயாளன் வேலைக்கு செல்லாமல் தனது நண்பர்கள் சிங்கராஜ், விக்னேஸ்வரன் ஆகியோரு டன் சேர்ந்து அடிதடி, மிரட்டுவது, பெண்களை கேலி கிண்டல் செய்வது உட்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக சுரேஷ் அவர்களை கண்டித்ததாக தெரிகிறது. ஏற்கனவே இருந்து வந்த முன் விரோதம் மற்றும் பல்வேறு பிரச்சினைகளில் தன்னை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த தீன தயாளன் உட்பட 3 பேர் குடிபோதையில் சுரேசை வெட்டி கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையில் தலை மறை வாக உள்ள தீன தயாளன் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க திருப்பரங்குன்றம் உதவி கமிஷனர் ரவி தலைமை யில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளி களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×