search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கலை இலக்கிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய விஜய் வசந்த்
    X

    கலை இலக்கிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய விஜய் வசந்த்

    • செக்காரவிளையில் ரூ. 20 லட்சம் செலவில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறந்துவைத்தார்.
    • கலை இலக்கிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

    குமரி மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினேன்.

    நெய்யூர் இரண்டாம் நிலை பேரூராட்சி கண்ணோடு 1-வது வார்டில் பாராளுமன்ற உறுப்பினர் நிதி 11.80 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தேன்.

    இதேபோல், கக்கோட்டுத்தலை ஊராட்சி செக்காரவிளை அருள்மிகு ஸ்ரீ வரப்பிரசாத விநாயகர் ஆலயம் அருகே பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறந்து வைத்தேன் என பதிவிட்டுள்ளார்.


    இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×