search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மன்னர் காலத்து  ஓவிய பலகை  அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
    X

    மன்னர் காலத்து ஓவிய பலகை அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

    • கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.
    • மன்னர் காலத்து ஓவிய பலகை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. அவர்களது காலத்தில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டன. அவை தற்போது அரசு அலுவலகங்களாக பல இடங்களில் இயங்கி வருகின்றன. புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தன.இதனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடமாற்றம் செய்த போது செட்டில்மென்ட் அலுவலகத்தில் இருந்து மன்னர் காலத்து பழமையான செப்பேடு, மன்னர் அரசின் முத்திரை பதித்த ஓவிய பலகை ஆகியவை எடுக்கப்பட்டது. அதனை அப்போது மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அந்த 2 அரிய பொருட்களையும் கலெக்டர் கவிதாராமு புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமியிடம் வழங்கினார். அப்போது ெதால்லியல் ஆய்வு கள தலைவரும், ஆய்வாளருமான கரூர் ராஜேந்திரன் உடனிருந்தார்.

    Next Story
    ×