என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கைலாச விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
By
மாலை மலர்3 Feb 2023 6:44 AM GMT

- காரைக்குடி அருகே 126 ஆண்டுகளுக்கு பிறகு கைலாச விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா புதுவயல் அருகில் உள்ள சின்ன வேங்காவயல் மற்றும் வலயன்வயலில் கைலாச விநாயகர் கோவில் உள்ளது. கடைசியாக 1897ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் 126 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேகத்திற்கான பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. கண்டனூர் வேங்காவயலார் வீடு அழகப்ப செட்டியார் குடும்பத்தார் மற்றும் மணிகண்டன் செட்டியாரால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் சிறப்புபூைஜகள் நடைபெற்றன. நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
