search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 248 புகார்கள் பதிவு
    X

    கோப்பு படம்

    ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 248 புகார்கள் பதிவு

    • கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை தேர்தல் பிரிவினரே நேரடியாக விசாரிக்கின்றனர்.
    • ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதால் வாக்காளருக்கு பணம் கொடுத்தல் பணம் கொண்டு செல்லுதல் போன்ற புகார்கள் வருவது நின்றுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. டோல் பிரி எண் மூலமும், சி-விஜில் ஆப் மூலமும் இதுவரை புகார்களை அனுப்பி வருகின்றனர்.

    கடந்த 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்ததால் அன்று இரவு வரை தேர்தலுக்கான பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவினர் செயல்பட்டனர். பொதுமக்கள் வாக்காளர்களிடம் இருந்து வரப்பெற்ற புகார்களை அக்குழுவினருக்கு தெரிவித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர்.

    தேர்தலில் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதும், ஈரோடு மாவட்டத்தை ஒட்டிய கர்நாடக மாநில எல்லையான பர்கூர் மற்றும் பண்னாரி, திம்பம் சோதனை சாவடியை ஒட்டிய பகுதியில் மட்டும் தலா 3 பறக்கும் படையினர் செயல்பட்டு வருகின்றனர். மற்ற அனைத்து குழுக்களும் 20-ந் தேதி கலைக்கப்பட்டு அவரவர் பணிக்கு திரும்பினர்.

    இதனால் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை தேர்தல் பிரிவினரே நேரடியாக விசாரிக்கின்றனர். ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதால் வாக்காளருக்கு பணம் கொடுத்தல் பணம் கொண்டு செல்லுதல் போன்ற புகார்கள் வருவது நின்றுள்ளது.

    ஆனாலும் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள், புகார்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று வரை சி-விஜில் ஆப் மூலம் 78 புகார், கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு 170 புகார் என மொத்தம் இதுவரை 248 புகார்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×