search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே அக்காளை வெட்டிக்கொன்ற சிறுவன் கைது
    X

    ஆலங்குளம் அருகே அக்காளை வெட்டிக்கொன்ற சிறுவன் கைது

    • ஆத்திரம் அடைந்த சிறுவன் சுபாவேணியை வெட்டிக்கொலை செய்தான்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள செட்டிக்குறிச்சியை சேர்ந்தவர் மாரியப்பன். கூலி தொழிலாளி. இவருக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மூத்த மகள் சுபா வேணி(வயது 21). இவருக்கு அய்யனார்குளத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் சுபா வேணிக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுபா வேணி கணவரை பிரிந்து கடந்த 6 மாதமாக தாய் வீடான செட்டிக்குறிச்சியில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

    கணவரை பிரிந்து அக்காள் தங்கள் வீட்டில் வசித்து வருவது, சுபாவேணி அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசுவது அவரது சகோதரனான 16 வயது சிறுவனுக்கு பிடிக்கவில்லை.

    இதுகுறித்து அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், தோட்டத்தில் வைத்து அவர்களுக்குள் தகராறு முற்றியது.

    இதில் ஆத்திரம் அடைந்த சிறுவன் சுபாவேணியை வெட்டிக்கொலை செய்தான். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

    Next Story
    ×