search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகி வரும் சித்தோடு பொறியியல் கல்லூரி
    X

    வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகி வரும் சித்தோடு பொறியியல் கல்லூரி

    • சட்டசபை பொதுத்தேர்தலின்போது இவ்வளாகத்தில் 8 சட்டசபை தொகுதிக்குமான ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக வைத்து எண்ணப்படும்.
    • குடிநீர், கழிப்பறை போன்றவற்றையும் புதுப்பித்தும், புதிதாக ஏற்படுத்தியும் வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் நடக்கிறது. இத்தேர்தலில் ஓட்டுப்பதிவுக்குப்பின் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.

    இதற்காக கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவு கட்டிடங்களை பொதுப்பணித்துறையினர் வசம் ஒப்படைத்தனர். அங்கு ஓட்டுப்பெட்டிகள் வைக்கும் பாதுகாப்பு அறை, ஓட்டு எண்ணும் அறை, போலீஸ் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் தங்கும் அறை, கண்காணிப்பு அறை ஆகியவை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    சட்டசபை பொதுத்தேர்தலின்போது இவ்வளாகத்தில் 8 சட்டசபை தொகுதிக்குமான ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக வைத்து எண்ணப்படும். தற்போது ஒரு தொகுதிக்கான தேர்தல் என்பதால் கல்லூரி செயல்பாடுகள் பாதிக்காத வகையில் ஒரு பகுதியை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தேர்தல் பிரிவினர் கொண்டு வந்து அங்கு பணிகள் நடந்து வருகிறது.

    மலையின் மேற்பகுதியில் இவ்விடம் உள்ளதாலும் பிற வகுப்பறைகள் செல்வோர் பாதிக்காத வகையில் பாதைகள் சீரமைப்பு, மின் விளக்குகள் அமைப்பு, வாகன நிறுத்தம், வேட்பாளர்களின் பிரதிநிதிகள், அவர்களுடன் வருவோர் காத்திருக்கும் பகுதி, குடிநீர், கழிப்பறை போன்றவற்றையும் புதுப்பித்தும், புதிதாக ஏற்படுத்தியும் வருகின்றனர்.

    Next Story
    ×