என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால் திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை
- வேலைக்கு சேர்ந்தால்தான் வீட்டுக்கு வருவேன் என மனைவி உறுதியாக கூறியதால் மனமுடைந்த காளிதாஸ் பூச்சி மருந்தை குடித்து தனது வீட்டில் மயங்கி கிடந்தார்.
- உடனடியாக காளிதாசை தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் காளிதாஸ். இவருக்கும் பிரபா என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
காளிதாஸ் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அதற்கு மனைவி பிரபா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தால் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்று தனது கணவரை கண்டித்துள்ளார். இருந்த போதும் அவர் வேலைக்கு செல்லாமலேயே வீட்டில் இருந்தார். இதனால் பிரபா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
அதன் பிறகு காளிதாஸ் அங்கு சென்று தனது மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் வேலைக்கு சேர்ந்தால்தான் வீட்டுக்கு வருவேன் என அவர் உறுதியாக கூறியதால் மனமுடைந்த காளிதாஸ் பூச்சி மருந்தை குடித்து தனது வீட்டில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இரு வீட்டார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்