search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக தலைநகர் வாரணாசிக்கு மாற்றப்படும்... வைகோவின் பேச்சால் கிறுகிறுத்த வாக்காளர்கள்
    X

    தமிழக தலைநகர் வாரணாசிக்கு மாற்றப்படும்... வைகோவின் பேச்சால் கிறுகிறுத்த வாக்காளர்கள்

    • புதுக்கோட்டையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வைகோ பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் வைகோவை பார்த்து போதையில் கத்தினார்.
    • பேச்சை நிறுத்திய வைகோ, மதுவை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என் தாய் உயிரை விட்டார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்:-

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அடியோடு மாற்றப்படும். தலைநகர் சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றப்படும் என்று தடுமாறிய அவர், இல்லை... இல்லை... வாரணாசிக்கு மாற்றப்படும் என்றார். வைகோவின் இந்த தடுமாற்றமான பேச்சு அங்கு நின்ற பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

    இதே போல புதுக்கோட்டையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வைகோ பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் வைகோவை பார்த்து போதையில் கத்தினார். பேச்சை நிறுத்திய வைகோ, மதுவை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என் தாய் உயிரை விட்டார். அந்தாள வெளியில் தூக்கி போடுங்க என்று உத்தரவிட்டார். அவர் கட்சிக்காரர் என்று கூட்டத்தில் இருந்து பதில் வந்தது. இதனால் கோபமடைந்த வைகோ கட்சிக்காரர் என்றால் குடிக்க வேண்டுமா? நான் அடிவயிறு வலிக்க பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சலித்துக்கொண்டபடி தொடர்ந்து பேசி முடித்தார்.

    Next Story
    ×