search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1.32 கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பு
    X

    1.32 கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பு

    • பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
    • பட்ஜெட்டில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த மாங்கால் கூட்டோடு பகுதியில் பா.ம.க. விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றத.

    கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் சிப்காட் நிலம் கொடுத்த உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீத வேலை வாய்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இளைஞர்களின் நலன் கருதி ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும் இல்லையேல் மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. கையில் எடுக்கும்.

    தற்போதைய அரசுக்கு புதிய கல்வி திட்டம் வேலை வாய்ப்பு உருவாக்குவது உள்ளிட்ட வகைகள் குறித்து எதுவும் தெரியாமல் இருப்பதால் தமிழகத்தில் படித்த இளைஞர்கள் ஒரு கோடியே 32 லட்சம் பேர் வேலை இல்லாமல் தவிக்கி ன்றனர்.

    இதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சியே காரணம்.

    பா.ம.க. மாடல் ஆட்சியில் மாணவர்க ளில் படிப்புக்கு ஒரு பைசா கூட கட்டணம் செலுத்த தேவையில்லை இலவச உயர்ந்த மருத்துவ சேவை அளிக்கப்படும்.

    பா.ம.க. மாடல் ஆட்சியில் முதல் கட்டமாக ஒரு லட்சம் கோடி ரூபாயை தமிழகத்திற்கு நீர் மேலாண்மைக்கு ஒதுக்கி தமிழகத்தில் அனைத்து ஆறுகளிலும் தடுப்பணை கட்டி வருங்கால சன்னதியருக்கு வளமான தமிழகத்தை விட்டு செல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய பட்ஜெட்டில் நாடு முழுவதும் புதியதாக 157 நர்சிங் கல்லூரிகள் தொடக்கப்படும் என்று தெரிவித்துள்ளவரை வரவேற்கிறேன். விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதற்காக ரூபாய் 20 லட்சம் கோடியும், ெரயில்வே திட்டங்களுக்கு ரூபாய் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியும் ஒதுக்கி உள்ளதை வரவேற்கிறேன். 100 நாள் வேலை திட்டத்திற்காக கடந்த ஆண்டு ரூபாய் 89 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் ரூபாய் 62 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதால் 30 சதவீதம் குறைந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவில்லை

    மத்திய அரசு 6 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி உள்ள நிலையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களுக்கு நிறைய நிதி ஒதுக்கி உள்ளனர் தமிழகத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் சுகாதாரத் துறைக்கு ரூ.89 ஆயிரம் கோடி கல்வித்துறைக்கு ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது. பட்ஜெட்டில் சில திட்டங்கள் வரவேற்கத்தக்க வகையிலும் சில திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாகவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×