என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமியாரை பார்க்கச் சென்ற வாலிபர் திடீர் சாவு
- மாமியாரை பார்க்கச் சென்ற வாலிபர் உயிரிழந்தார்
- சாலையில் சுருண்டு விழுந்தார்
திருச்சி:
திருச்சி மணப்பாறை கிருஷ்ணா கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 31). இவர் நாகமங்கலம் பார்வையற்றோர் குடியிருப்புகள் அருகாமையில் வசிக்கும் தனது மாமியாரை பார்ப்பதற்காக சென்றார். அப்போது செல்லும் வழியில் அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் அவர் சுருண்டு விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். . இது குறித்து அவரது தாயார் ராஜம்மாள் மணிகண்டன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story