search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துறையூர் அருகே கட்டிட தொழிலாளி மர்ம மரணம் உறவினர்கள் சாலை மறியல்
    X

    துறையூர் அருகே கட்டிட தொழிலாளி மர்ம மரணம் உறவினர்கள் சாலை மறியல்

    • கட்டிட தொழிலாளி மர்ம மரணம்
    • உறவினர்கள் சாலை மறியல்


    துறையூர், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சி தெற்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 34). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி அபிராமி (28) என்கிற மனைவியும், ஜஸ்வந்த் (5), சாகித்யா (2) என்கிற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஆனந்த் இரவு வேலை காரணமாக துறையூருக்கு சென்று வருவதாக, மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வேலையை முடித்துவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மீண்டும் சொந்த கிராமத்திற்கு செல்லும் பொழுது, அம்மாபட்டி பிரிவு சாலை அருகே, நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்த வர்கள் ஆனந்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஆனந்தின் தந்தை துரைசாமி துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்கிற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இறந்த ஆனந்தின் உறவினர்கள் சம்பவ நேரத்தில் அங்கு இருந்த அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த நபர்கள் தான் ஆனந்தை கொலை செய்ததாகவும்,போலீசார் உடனடியாக கொலை வழக்கு பதிவு செய்து, 3 நபர்களையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி துறையூர் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த முசிறி போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிட செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    Next Story
    ×