search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    மாலை மலர் பெயரில் பரவும் போலி நியூஸ் கார்டு
    X

    மாலை மலர் பெயரில் பரவும் போலி நியூஸ் கார்டு

    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் உண்ணாவிரத போராட்டம்
    • தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்

    தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. சமூக வலைத்தளங்களில் நியூஸ் கார்டுகள் வெளியிடப்பட்டன.

    இந்நிலையில், போராட்டத்தில் கைதான எடப்பாடி பழனிசாமி ஆட்களுக்கு யா மொய்தீன் கடையில் இருந்து பிரியாணி வரவழைக்கப்பட்டதாக மாலை மலர் இணையதளத்தின் பெயரில் ஒரு நியூஸ் கார்டு வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது போலியான நியூஸ் கார்டு ஆகும். இதுபோன்ற வாசகம், மற்றும் புகைப்படத்துடன் மாலை மலர் தரப்பில் எந்த நியூஸ் கார்டும் வெளியிடப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

    Next Story
    ×