search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ATM-ஐ உடைக்கல, ஈசியா பணத்தை எடுத்த சிறுவர்கள் - எப்படி சிக்கினாங்க தெரியுமா?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ATM-ஐ உடைக்கல, ஈசியா பணத்தை எடுத்த சிறுவர்கள் - எப்படி சிக்கினாங்க தெரியுமா?

    • இந்த டெக்னிக்கை பயன்படுத்தி மேலும் சில சிறுவர்கள் இந்த முறையில் திருடியுள்ளனர்.
    • ஏ.டி.எம். இல் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் ATM இயந்திரத்தில் வித்தியாசமான முறையில் கொள்ளையடித்த சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்காமல் பிளாஸ்டிக் மற்றும் பெவிகால் பயன்படுத்தி கொள்ளையடித்த சம்பவம் காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    சுபம் என்ற சிறுவன் தனது காதலிக்கு செலவு செய்வதற்காக ஏ.டி.எம். இயந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் வெளியே வரும் இடத்தில் பிளாஸ்டிக் ஸ்ட்ரிப்களை பெவிகால் கொண்டு சுபமும் அவனது நண்பனும் ஒட்டியுள்ளனர்.

    இதனால் ஏ.டி.எம். இல் பணம் வெளியே வராமல் இடையில் சிக்கி கொள்ளும். இதனால் வாடிக்கையாளர்கள் பணம் இல்லை என்று நினைத்து வெளியே சென்று விடுகின்றனர். பின்னர் உள்ளே வரும் சிறுவர்கள் பிளாஸ்டிக் ஸ்ட்ரிப்பை வெளியே எடுத்து ஏ.டி.எம். இல் சிக்கி கொண்ட பணத்தை வெளியே எடுக்கின்றனர்.

    இந்த சிறுவர்களின் டெக்னிக்கை பயன்படுத்தி மேலும் சில சிறுவர்கள் இந்த முறையில் திருடியுள்ளனர்.

    தொடர்ந்து வங்கிக்கணக்கில் இருந்து தங்களது பணம் திருடப்படுவதை அடுத்த வாடிக்கையாளர்கள் வங்கிகளில் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது ஏ.டி.எம். இல் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சிறுவர்கள் ஏ.டி.எம். இல் திருடுவது பதிவாகியுள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

    பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த திருட்டு வழக்கின் முக்கிய குற்றவாளியான சுபம் மற்றும் அவரது காதலியை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×