search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புனே: காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்... பெண்ணின் மூக்கை உடைத்த முதியவர் கைது
    X

    புனே: காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்... பெண்ணின் மூக்கை உடைத்த முதியவர் கைது

    • ரத்தம் சொட்ட சொட்ட இந்த விவகாரத்தை வீடியோவாக பேசி அப்பெண் வெளியிட்டுள்ளார்.
    • அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

    புனேவில் ஜெரலின் டி சில்வா என்ற பெண் தனது 2 குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் பின்னே வந்த கார் இவரை முந்தி செல்ல முயற்சித்தது. ஆனால் முந்தி செல்ல முடியாமல் 2 கிமீ தூரம் ஸ்கூட்டரின் பின்புறம் கார் சென்றுள்ளது. இதனால் காரை ஓட்டி வந்த முதியவர் கோவமடைந்துள்ளார்.

    பின்பு ஸ்கூட்டருக்கு முன்பு காரை நிறுத்தி இறங்கிய முதியவர் கோபத்துடன் அப்பெண்ணின் முடியை பிடித்து இழுத்து முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் அப்பெண்ணின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது.

    பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட இந்த விவகாரத்தை வீடியோவாக பேசி அப்பெண் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

    வீடியோ வைரலானதை அடுத்து, தாக்கிய முதியவர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×