search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரே குடும்பத்தில் 5 பேரை கோடரியால் கொன்று இளைஞர் தற்கொலை.. அதிரவைக்கும் காரணம்
    X

    ஒரே குடும்பத்தில் 5 பேரை கோடரியால் கொன்று இளைஞர் தற்கொலை.. அதிரவைக்கும் காரணம்

    • சத்தீஸ்கரில் 5 பேரை கொலை செய்து விட்டு 33 வயது நபர் அதே இடத்திலேயே ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • ஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தைகோன் கிராமத்தில் துணி தைக்கும் டெய்லராக உள்ளவர் 33 வயதான மனோஜ்.

    சத்தீஸ்கரில் தனக்கு பெண் கொடுக்காத குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்து விட்டு 33 வயது நபர் அதே இடத்திலேயே ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தைகோன் கிராமத்தில் துணி தைக்கும் டெய்லராக உள்ளவர் 33 வயதான மனோஜ்.

    இவர் அந்த கிராமத்தில் வசித்து வந்த மீரா என்ற பெண்ணை திருமணம் செய்ய விருப்பி கடந்த 2017 ஆம் ஆண்டு அவரது வீட்டுக் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மீராவின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இதனால் மனோஜ் விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே மீராவுக்கு ராய்பூரைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது.

    இந்நிலையில் தனது குடுமபத்தினரைப் பார்க்க மீரா தனது கிராமத்துக்கு வந்துள்ளார். அவரது வீட்டுக்கு சென்ற மனோஜ், மீராவின் தாய், தந்தை, சகோதரி மற்றும் 5 வயது சிறுவன் உட்பட 5 பேரையும் அவர்கள் தூங்கும்போதே கோடரியால் கொடூரமாக கொலை செய்து விட்டு அதே இடத்தில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×