search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தொழிலதிபர் குடும்பத்தில் 5 பேர் தற்கொலை- காருக்குள் பிணமாக மீட்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தொழிலதிபர் குடும்பத்தில் 5 பேர் தற்கொலை- காருக்குள் பிணமாக மீட்பு

    • காருக்குள் கிடந்த 5 பேரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • தற்கொலை செய்த தொழில் அதிபர் புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள நமுன சமுத்திரம் பகுதியில் நகர சிவ மடம் உள்ளது. இதன் காவலாளியாக அடைக்கலம் என்பவர் உள்ளார்.

    இந்த மடத்தில் இறந்தவர்களுக்கு ஒரு சமூகத்தைச் சேர்ந்த உறவினர்கள் இறுதி காரியங்கள் செய்து வருகின்றனர். இங்கு நேற்று மாலை டி.என். 77 எம். 1705 எண் கொண்ட ஒரு கார் வந்தது. அதில் மூன்று பெண்கள் உட்பட 5 பேர் இருந்தனர்.

    இவர்கள் நேற்று மாலை அப்பகுதியில் நடமாடியதை சிலர் பார்த்துள்ளனர். பின்னர் வெளியே சென்றுவிட்டு திரும்பினர். இன்று காலை அந்தக் கார் வெகு நேரமாகியும் அங்கிருந்து புறப்படவில்லை.

    இதனால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அருகில் சென்று பார்த்தபோது 5 பேரும் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கைகளில் சாய்ந்து கிடந்தனர். உடனே காவலாளி அடைக்கலம் நமுன சமுத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது காருக்குள் கிடந்த 5 பேரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. தற்கொலை செய்தவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்கள்.

    தற்கொலை செய்த தொழில் அதிபர் புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. சேலத்திலும் அவர்கள் தொழில் நடத்தி வந்துள்ளனர். ஆனால் பெயர் விபரங்கள் குறித்து விசாரணை நடத்து வருகிறது.

    ஒரு தாய் மகள், தந்தை மகன் மாமியார் உறவு முறையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. காரில் போலீசார் சோதனை போட்டனர். அப்போது அங்கு ஒரு கடிதம் சிக்கியது. அதில் கடன் தொல்லை காரணமாக 5 பேரும் தற்கொலை செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடயங்களை சேகரித்தனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காருக்குள் விஷம் குடித்து பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×