என் மலர்
தமிழ்நாடு

புதுச்சேரி வில்லியனூரில் வெடிகுண்டு வீசி பாஜக பிரமுகர் கொலை
- 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவர் மீது வெடிகுண்டு வீசியும், கத்தியால் தாக்கியும் கொலை.
- தப்பி சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி வில்லியனூரில் வெடிகுண்டு வீசி பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக பிரமுகரான செந்தில் என்பவர் அங்குள்ள பேக்கரி கடையில் நின்றுக் கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவர் மீது வெடிகுண்டு வீசியும், கத்தியால் தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் தப்பி சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story